tag:blogger.com,1999:blog-784855396347014966.post6613155093086217571..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: வானவில்வண்ண மின்னல் 3adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-28247887254634473822010-10-04T12:07:52.293+05:302010-10-04T12:07:52.293+05:30மகி, படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பல...மகி, படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பலாம் என்றிருக்கிறேன். எந்த உற்பத்தியும் / படைப்பும் மனிதர்களின் பயன்பாட்டுக்கு அவசியம் என்று கருதலாமா? அதுவல்லாத ஒன்று விரயமில்லையா? மேன்மைக் கலை, பொழுதுபோக்கு படைப்பு என்பதெல்லாம் யார், யாருக்காக தோற்றுவைத்தது? பணம் படைத்தவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு, மேன்மை ரசனை என்றவையெல்லாம் வள்ர்த்துக்கொள்ள சூழலும், பொருளாதாரமும் இருக்கிறது. பசியில் வாடுபவனுக்கு? பாட்டாளிக்கு? தொழிலாளிக்கு? <br />சமூக புரட்சிகளுக்கு வித்திட்டு, நிலவும் சமச்சீரற்ற பொருளாதார சூழலை சரியாக சுட்டிக்காட்டியும், மாற்றுவழிகளை முன்னிறுத்தியும் சமுதாயப் பொறுப்புணர்வோடு சிந்தனையாளர்கள் பல்வித நெருக்கடிகளுக்கிடையே (உணவுக் கூட கிடைக்காமல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கையாண்ட ஊடகம் படைப்பு/இலக்கியம்/எழுத்தென்பதாக கருதலாமா? அத்துறையை பொழுதுபோக்கிற்கும், networking ற்காகவும், அறிவைப் பறைசாற்றிக்கொள்ளவும், மொழி ஜாலங்களைக் காட்டிக் கவரவும் பயன்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்? <br />வசீகர எழுத்தின்மூலம் கூட்டங்களை சேர்க்க நிறையப்பேர் எழுதுகிறார்கள்...அவைகளின் சமுதாயப் பயன் என்ன? <br />கவிதை என்பதைக் கூட வெறும் மொழியியல் /அழகியல் tool ஆக கருதாமல், அதிலும் சமுதாயப் பிரச்சனைகளை எழுதியவர்களின் நோக்கம் / தேவை என்னவாக இருக்கும்? – what is the demand for creation?<br />Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? எல்லாவற்றிலும் அறிவைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு இலைக்கியப் படைப்பு என்று நம்பி blog இல் Just like that எழுதப்படும் விஷயங்களை / கவிதைகளைப் படிப்பது நேர விரையம் ஆகாதா, அவர் ஏமாற்றத்திற்கு ’சும்மா எழுத்துக்கள்’ என்ன பதில் தரும்?கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-71077619295566437272010-10-04T11:36:02.600+05:302010-10-04T11:36:02.600+05:30//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிம...//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை// - இந்தக்கூற்று, தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது... தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்? நாம் வாழ்வது கூட்டுச் சமுகம் 'everything will be imbibed' இங்கு சவால் என்னவென்றால் நாம் கற்றுக்கொண்டவையும், நடைமுறைப்படுத்துவனவும் எவ்வித அரசியல், பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து நமக்கு தரப்பட்டது என்று கண்டுணர்வது. அப்பொழுது நாம் நமக்கான பார்வை என்பதை வகுத்துக்கொள்ள முடியும் என்று நிணைக்கிறேன். "We are all Social Animals". ஒரு பிரச்சனையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஏன் தனிமனிதத் தேவை என்பதை விட சமூகப் பார்வையை கணக்கிலெடுக்கிறது? இன்று ஒரு தனி மனிதன் செய்யும் செயல், நாளை ஒரு குழு செய்யும், பின்பு பெருங்கூட்டம் அதைத் தொடரும்...அது வழக்கமாக மாறி..பின்பு கருத்தாக மாறி, விதியாக மாறி போய்க்கொண்டேயிருக்கும்...இல்லையா?கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.com