03 November, 2011

புணர்ச்சி நாற்பது - 01







வேர் பிணைக்கும் முறுக்குடல்
நிலையில் வீழும் துளிநீரில்
நிறைகிறது நாவல் மணம்.
மென்துவர்ப்பு வண்ணத்தில்  
ஒளிர்கிறது நொதித்திராட்சை.
தனதான சைதன்யத்தை 
உதிர்த்து துவள்கிறது 
மயிர்நுனி. கோப்பையின் ரசம்
ஆடிகளில் தெறிக்க ஒளிபட்டு
கிழிகிறது இதழ்வரி. வடிகிற
குருதியுண்ணும்
நகங்களை காதலிக்க தொடங்கும்
அற்றுப்போனதோர்
அகாலத்தில் பிறந்து தொலைகிறது
பெருவெளியில்  
அழுத்தம் மிகுந்த கருந்துளை.