19 October, 2011

கடவுளின் வினை.




அவன் அமர்ந்திருந்தான்
மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை
ஆனால் மற்றவர்கள் அனைவரும்
அவனுக்காக அலைந்துகொண்டிருப்பதாக ...
அதாவது சிலர் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்கள்
அவனுக்காக. சிலர் ஒரு பெரிய பண்ணையில்
சுவை மிகுந்த பன்றிகளை வளர்தெடுத்தர்கள்
அவனுக்காக சிலர் உணவு தேடும் மனிதர்களை
காரி உமிழ்ந்தார்கள் சிலர் காடுகளிடையே
பயணம் செய்து பசிதீர்க்கும் பூச்சிகளை
சேகரித்து பதப்படுத்தினார்கள் சிலர்
குதிரைகளுடனும் பசுமாடுகளுடனும்
சல்லாபத்தில் ஈடுபட்டார்கள்... ஒருவன்
குடிக்கவும் மற்றொருவன் ஈட்டியால்
மீன்களை வேட்டையாடவும் வேறொருவன்
சுயமைதூனம் செய்யவும் கூட இருந்தவன்
தானியங்களை பறவைகளுக்கு வீசவும்
மற்றும்
அனைவரும் அவனுக்காக
எதையாவது ஒன்றை செய்தவண்ணம்
இருந்தார்கள் ....

அவன் அமர்திருக்கிறான்
அவர்கள் செய்வதெல்லாம் எளிய
கேள்விகளாய் மாறி அவனது
கூர்மையான நாசித்துவாரத்தில்
கவுச்சியின் வாசமென நுழைகிறது...

மனிதர்கள் அயர்வுருகிரார்கள்
மனிதர்கள் உற்சாகமடைகிரார்கள்
மனிதர்கள் வாங்குகிறார்கள் எதையாவது
மனிதர்கள் நுகர்கிறார்கள் வாங்கியவற்றை
மனிதர்கள் திருப்தி அடைகிறார்கள்

அவன் அமர்ந்திருக்கிறான்
புதிய சீருடையுடன் ஒரு இளம் ஆண்
அவனை பார்க்கிறான்.. அவனை எங்கோ
பார்த்த ஞாபகத்தை பொருட்படுத்தவில்லை
அவனது மூளை ஏற்கனவே
சொல்லப்பட்டது..

தன்னிடமிருக்கும் ஒரு சிவந்த
மெல்லிய மொட்டுகளை கொண்ட
ருசியரியும் நாவை சுழற்றி சொல்லாக்குகிறான்..
வார்த்தையின் முடிவில் வளைந்து நிற்கிறது
கேள்விக்குறி ..

மௌனம் மறுக்கப்பட்ட புதிய
சூழலில் பதிலறியாத அவன்
ஒரு பாறையின் மீது அமர்திருக்கிறான்
மக்களிடம் கூவுகிறான் அவ்விளைஞன்
அவனை கண்டுபிடித்து விட்டதாக.
கூடிய மனிதர்கள் ஆராவாரத்துடன்
அழைத்துச் சென்றார்கள் பாறையை

பிருஷ்டம் கிழிய நின்றிருந்தவனின்
குதத்தில் கழி செருகி தொண்டை கனைத்து
தொடங்குகிறான் கனிவான முகம் கொண்ட
அதி ஆண் காரணம் வேண்டிய
முதல் கேள்வியை.

அவன்
பிறகு
எல்லாவற்றையும்
ஒப்புக்கொண்டு
மற்றவர்களைப் போலவே
அவனுக்காக
எதயாவது
செய்ய தொடங்கினான்
ஆசீர்வதிக்கும் கடவுலொன்றின்
நாமத்தை ஜெபித்தவாறு.

எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருந்த நான்
நீங்களான வினோதம்
என்பது
புதிர்

எல்லாம் அந்த கேடுகெட்ட.


14 October, 2011

sad jobs

இறந்த மனிதனை பற்றி அவதூறு பேசுவது தவறு - மனித அறங்களில் ஒன்று. இருந்தாலும் சற்று அறத்தை மறந்து ஒரு இறந்த மனிதனை பற்றிய ஒரு பதிவினூடாக சில சந்தேகங்கள்.

இறந்தவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 எழுபத்து நாலிலிருந்து இந்த ஆண்டு வரை களத்தில் இயங்கி உடல் புற்றின் காரணமாக காலமாகிய அவருக்காக கார்பொரேட் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் முக்குக்கு முப்பது பேர் நிமிசத்துக்கு செத்துக்கொண்டிருந்தாலும் இவர் செத்தது சற்று வருத்தம்தான். அதற்கான இரண்டு வலுவான காரணங்கள் இரண்டு எனக்குண்டு. ஒன்று அவர் புத்தனை தழுவியவர். இரண்டாவது அவரது போதைக்கான பரிசோதனை. இதற்காக அவர் இந்தியாவைத் தேர்தெடுத்தார். அவரது தந்தை ஒரு முசல்மான். அவரை தத்தெடுத்தவர் கிருத்துவர். வீணாய்ப்போன பால்யமாய் இருக்கலாம்.. ஆனால் நிர்வாகத்திறனும் சிக்கலானவற்றை எளிமைப்படுத்தும் கற்பனைத்திறனும் அவரை கார்பொரேட் அரசர்களில் ஒருவராக்கியது.

அவரது மரணம் துக்ககரமானது.

சரி சந்தேகம் ? அவரை பற்றி அல்ல. மூன்று சமீபத்திய செய்திகளை பற்றியது.

1 . சவரக்கடையில் நுழைந்து சிரைத்துக்கொண்டிருந்த எட்டுபேரை ஒருவன் சுட்டு கொன்றுவிட்டான். செத்த எட்டுபேர் எதற்காக செத்தார்கள்.. (அமெரிக்கா).

2 . நாங்கள் வாழ்க்கையை போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம் என்கிற 
குறிப்புக்கடிதத்தொடு 39 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கம்ப்யூடர் வேலை செய்யும் தம்பதியினரின் அழுகிய உடலை அவர்களது பெற்றோர்கள் வாங்க மறுத்த காரணம் என்ன.. அப்படி அவர்கள் என்னதான் அனுபவித்தார்கள்.. (இந்தியா).

3 . சில கிலோகிராம்கள் எடை கொண்ட வெடிகுண்டை காரில் கண்டெடுத்து சில நூறு உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள் ..அப்படி காப்பாற்றப்பட்ட அந்த சில நூறு மனிதர்கள் எப்படி/என்னவாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மேலும்..

4 . ஸ்டீவ் ஜாப் - ன் iPad தொழிற்சாலையில் (சீனாவில் இருக்கிறது !) மூன்று மாதத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டார்களே அவர்கள் யார்.. எதற்காக ஒரு புத்தம்  தழுவிய மனிதன் நிர்வகிக்கும்  நிறுவனத்தில் வேலை செய்யும் போது தம்மை மாய்த்துக்கொண்டார்கள் ...


திஸ் இஸ் நாட் iSad ,    பட் இட் இஸ் my Sad  !      

04 October, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 2








  
கவனமாய் தன் நித்திரையை
தவிர்கிறான் செவ்விழி ததாகன்
சிறுபிசகில் மூடிய விழித்திரையில்
தொங்கும் நெடும்கூந்தல் விரைந்து
நீள்கிறது அவனுள்ளிருக்கும் சிறுமலர்
நோக்கி. தாழம்பூ திரிந்த வாசனையில்
நாசி நடுங்க தரை பிராண்டுகிறான்.
தோல்கிழிந்து நகம் வழி கசியும்
குருதி ருசியை நுகர்கையில்
விறைக்கும் ஞானம் புணர்கிறது
ஞாபகத்தின் செதிலை. உதிரத் தொடங்கும்
காலம் வெளியெங்கும் ஏந்திச்
செல்கிறது ஒளிபொருந்திய
தத்துவத்தை.

விடிந்ததும்
இழந்தைதை எப்படி பெறுவது
என்று தெரியாமல் கிடைத்தை
பார்க்க கிடைத்த முதல்
மனிதனிடம் கைமாற்றுகிறான்

ததாகன்

பின் ஒருபோதும்
கூந்தல் நீண்டு பெண்ணாகிப்போன 
அவனை பார்க்கவில்லை

* * * * * *