21 December, 2010

வானவில்வண்ண மின்னல் 10


அசந்துறங்கிய தேஜாவை எழுப்ப மனமில்லாமல் அவளுக்கான குறிப்பை எழுதத்தொடங்கினேன்:

நான் ஆண்தான். ஆனாலும் சொல்கிற விஷயத்தை முழுதாய் கேட்டு அதிலிருக்கும் ஆணின் பார்வையைப் பற்றி கேட்டால் நன்றாய் இருக்கும் பதில் சொல்வதற்கு. சேர்ந்து வாழுதலுக்கு இந்திய தீபகற்பத்தில் சட்ட அங்கீகாரம் இருக்கிறது. அவர்கள் பிரிவதற்கும் அவர்களுக்கிடையேயான பிரச்சைனைகளுக்கும் உதவ நேரடியான சட்டம் ஏதுமில்லை என்றாலும் அனைத்து விதமான பிரச்சனைகளும் உதவ சட்டம் இருக்கிறது.

பொதுவாய் பார்த்தால் சேர்ந்து வாழ்தல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவை உள்ளடக்கியதான அனைத்து குடும்பப்பண்புகளையும் கொண்ட திருமணச்சடங்கு மற்றும் தாலி போன்ற அடையாளங்கள் மட்டும் இல்லாமல் போகிற ஒரு உறவு முறை என்று அறிந்துள்ளோம். ஆனால் உண்மை வேறு. அதன் தன்மையும் வேறு. அதைப் புரிந்துகொள்ளாமல் இவ்வுறவு முறையை ஒரு திருமண அமைப்பை போலி செய்தால் பிரச்சனை வராமல் எப்படி இருக்கும்?

என்ன ஏது என்று அறியாத, நுகர்வுக் கிறக்கத்தில் அதீத பணவரவுகளைக் கொண்ட இளையவர்களிடம் ஒரு உயர்ரக style -ஆகவே இம்மாதிரியான உறவுகள் அமையும்போது அவர்களின் உறவுக்காலங்கள் m.30 மற்றும் a.60 ஆகிப்போவது உறுதி. ஆக கடுமையான கலாச்சார ஊடுருவல், இளவயது வேலைவாய்ப்பு மற்றும் அதிகப்படியான பணவரவு போன்றவைகளால் இப்பொழுது கிளம்பத் தலைப்பட்டிருக்கும் இச்சேர்ந்து வாழும் முறை.. ஒரு திருமண முறையின் பகடி/போலி அல்லது நகல். அவற்றில் ஒரு பாதுகாப்பும் கிடையாது. இருபாலருக்கும் இது பொருந்தும். பொம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்விக்கு சற்றும் குறைந்ததல்ல ஆம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்வியும். இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அவன் மேல் கற்பழிப்பு வழக்கு தொடுத்த மகராசியையும் மூன்றாவது நாளில் நண்பனை அழைத்துவந்து 'விருந்து' கொடுக்க சொன்ன மகராசனையும் ஊடகம் அறியும்.

அப்படிஎன்றால் நான் விதந்தோதும் சேர்ந்து வாழ்தல் முறை என்றால் என்ன:

அதற்கு முதலில் குடும்ப முறையை - என்கிற கருத்தாக்கத்தை மனதிலிருந்து முதலில் அகற்றவேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஆணும் (doctor) ஒரு பெண்ணும் (lawyer) காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் தேவையில்லை என்றும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழவும் முடிவு செய்கிறார்கள். வாழத்தொடங்குகிரார்கள். இருவரும் தமது பணிகளை சிறப்பாக செய்யத்தொடங்குகிரார்கள். வீட்டிற்கு இரண்டு சாவிகள். யார் முதலில் வந்தாலும் சமைக்க வேண்டும் . பணி ஆட்கள் இருந்தால் இந்த பிரச்சனையும் இல்லை. வர இயலாத நாட்களில் கடைகளில் உண்ணலாம். ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் இருவரும் தமது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் இந்த இலகுவாக போருந்திபோகிற வாழ்க்கைச்சூழலில் அவர்களுக்கு மூன்றுவித சுதந்திரங்கள் வாழ்வை மேலும் இனிதாக்குகின்றன.

ஒன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரம். குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். குழந்தைகள் வேண்டாம் என்றால் நல்லது. குழந்தைகள் கிடைக்காத நாடா இது?

இரண்டாவதாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அதை வளர்ப்பது எப்படி என்று ஒரு வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தும் சுதந்திரம். இதன் சாத்தியப்பாடுகள் அளப்பரிய உணர்வு பரிமாற்றத்தை அளிக்க வல்லது.

மூன்றாவதாக உடலுறவுத் தேர்வு சுதந்திரம். இது யாரும் யாருடனும் என்கிற அடிமட்ட சிந்தனை இல்லை. மாறாக தங்களுக்கான தேவைகளை தங்களுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம். வேறோருவருடனான பாலுறவு என்பது தனிமனித உரிமை. தாகத்திற்கு ஒரு செம்பு தண்ணீர் குடிப்பதற்கும் சட்டரீதியாக வயதுக்கு வந்த ஆரோக்கியமான ஆணும் பெண்ணும் அவர்கள் இருக்கிற சூழலில் விருப்பட்டு உறவு வைத்துக் கொள்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அதன் செயல்முறைகள்தான் சற்று வித்தியாசமானவை!

ஆணாதிக்கம்/பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்களையும் இங்கு கழற்றி எரிந்து விட வேண்டும். நாம் அனைவரும் போலிகள். நமைச் சுற்றி இருப்பதும் போலியின் நகல்கள். ஆடிகளில் ஒளிக்கற்றை ஆட்டங்களின் பிரதியாக்கங்களில் வாழும் நம் கண்களின் அனுமானதூரத்தை விடவும் அனைத்தும் முன்னால் இருக்கிறது. நம்பிக்கை என்பது மிகப் பெரிய பொய். இங்கு ஒருவருக்கொருவர் தியாகம் செய்துதான் வாழ்கிறார்கள். தியாகம் என்பதற்கு இங்கு விட்டுக் கொடுத்தல் என்கிற நளினமான சொல்லை உபயோகிக்கிறோம்.

அனைத்தையும் பணம் தீர்மானித்துவிடும் . அன்பு காதல் போன்றவைகள் எல்லாம் பணத்தின் கண்ணுக்குத்தெரியா அடிமைகள். குடும்ப / சமூக கருத்தாக்கங்களின் குப்பைகளையும் நுகர்வுப்பண்பாடு என்கிற கழிசடையையும் தூக்கி வீசிவிட்டு சிந்திக்கும் ஒரு மனித மனம் இந்த தூய உறவை காதல் என்னும் கண்ணாடியில் கண்டுகொள்ளும்.

"என்ன மகி எழுதிக்கிட்டு இருக்க .." என்றவாறு வந்தாள் தேஜா.

"ஒண்ணுமில்ல .. உனக்கு சொல்லாம்முனுதான் எழுதினேன்.." என்றாவாறு எழுதிய குறிப்புக்காகிதத்தை கிழித்துப்போட்டேன்.

பின்பு நிதானமாக சொல்லத்தொடங்கினேன் எழுதியவற்றை அவளிடம்.

********************************

20 December, 2010

ஒரு குறுகிய பிணிக்காலம்

உடம்பெல்லாம் மாரியாத்தாள் உழுது போட்டிருக்கிறாள்! பார்பதற்கு நட்சத்திரங்களும் கிரகங்களும் சிதறிக்கிடக்கும் இருள் வானமாய் கிடக்கிறது. ஐந்தாம் நாள் இன்றுதான் சற்று வலியற்ற விரலசைவு சாத்தியமாகியது. இது அம்மை அல்ல வெம்மை. எனது ஊர் மார்கழி கொஞ்சம் காப்பாற்றியது. சும்மாவே நம்ம மூஞ்சி அப்பிடி இருக்கும்.. இதில் இன்ச்சுக்கு ஏழு புண்ணு.. சகிக்கவில்லை! ஆனால் வீட்டில் கிடைக்கும் கவனிப்புக்காகவே இப்படியே கிடக்கலாம் போல.

மற்றபடி இந்த வலிவரவால் எனக்கு இரண்டு நல்லதுகள்: ஒன்று பதினைந்து நாட்கள் விடுப்பு. இரண்டாவது உடலின் தொடர்வலி அனுபவம். இது ஒரு வகையான பிரக்ஞை அற்ற தத்துவப் புரிதலுக்கு வழிசெய்கிறது. பின்னிரவின் பேரமைதியில் கடும் மவுனத்தை கேட்க்கும் பயங்கர அனுபவம்..

நல்லதுக்குத்தான் எல்லாமுமே.

15 December, 2010

வானவில் வண்ண மின்னல் 9

தேஜா கேட்டாள், "மகி ஆம்பளைங்களும் பொம்பளைகளும் கல்யாணம் செய்யாம ஒண்ணா வாழுறாங்கலாமே.." . எனக்கு கௌசல்யாவின் சமீபத்திய பதிவு ஞாபகம் வந்தது. சேர்ந்து வாழும் முறைக்கு ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் கொண்ட பதிவு. ஆனாலும் பிரச்சனைகளை தெளிவாக சொல்ல முயன்றிருக்கிறார். (இதில் நான் சொல்லும் எனது கருத்து அவரின் பதிவுக்கு எதிர்பதிவாக இருக்கும்). என்னைப்பொருத்தவரைக்கும் இந்த முறை மிகவும் சிக்கலான காலத்தில் உருவாகி இருக்கிறது.

"எப்பயும் போல பில்ட் அப் தானா.."

"லைட்டா ..! ஆனாலும் சொல்றத கேளு.. இந்த சேர்ந்து வாழ்தல் முறை இப்போதைக்கு சதவீதப்படி இந்தியாவில ஆரம்ப நிலையில இருக்கு. சித்தாந்தப்படி (theoritically) சேர்ந்து வாழ்தல் முறை மனித உறவுகளில் மிக அற்புதமான ஒன்று. நடைமுறைக்கு வரும்போது அதன் அனைத்துக் கூறுகளும் குழைந்து போவதற்கு இன்றைய குடும்ப அமைப்பினுள் இருந்து கொண்டு இந்த முறையை ஒப்பிட்டு பார்ப்பதுதான். .."

"இரு .. இரு.. குடும்ப முறையா.. அப்படின்னா ..?"

"அதசொல்லத்தானே இந்த தொடர்பதிவு.. நம்ம நாட்டில சேர்ந்து வாழ்தல் முறைக்கு வேறொரு பாரம்பரிய அர்த்தம் இருக்கு.. கூட்டுக் குடும்ப முறை.. அறியாமை கட்டுப்பாடுகள் ஆணாதிக்க தன்மைகளோட சுருங்கிய வட்டத்தில பெருங்குடும்பமா வாழ்கிற முறை. இதில் தீமைகள் பெருமளவு இல்லையென்றாலும் நன்மைகள் மிகக் குறைவு. அதில் எனக்கு தெரிந்து ஒரு நல்ல விஷயம் பெண்களுக்கு இடையேயான நட்பும் கதைகளும்.."

"கதைகள்னா.. குடும்ப பிரச்சனைகளா..?"

"எல்லாமும்தான்.. கதைகளும் பாட்டுகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு முறையது..ஆனா படிப்படியா இந்த கூட்டுக் குடும்ப முறை காலாவதி ஆனதுக்கும் பெரும்பங்கு பெண்களுக்குத்தான்.. தனிக்குடித்தனம் கெட்ட வார்த்தையா இருந்த காலம் போய் வேறு வழியில்லாத நிலைக்கு வந்து விட்டது.. (மாமியார்களுக்கு இன்னமும் இது ஏமாற்ற உச்ச நிலைதான்). வரிசைக்கிரமப்படி பார்த்தால் அடுத்தது சேர்ந்து வாழ்தல் முறைக்குத்தான் மனிதகுல பாதை செல்கிறது என்று எண்ணினாலும் பிரச்சனை அத்தனை ஒன்றும் எளிதானதல்ல. அதற்கான தடைக்கற்கள் ஒரு பாடு உண்டு.. "

"பாடுனா..?"

"கிலோ கணக்குல என்று அர்த்தம் .. குறுக்க வராதடா.. ஒரு flow கெடுதில்ல.. தடைகளின் மொத்த காரணம் நான் என்ன நினைக்கிறேன்னா மனிதர்களின் மனத்திலிருக்கிற இறுகிப்போன கருத்துப் பாறைகள்தான்.. வரலாறு என்பதை அறிய வழியில்லாத அதை அறிவதற்கு முறையான வழிமுறைகள் இருந்தும அதைப்பற்றிய பிரக்ஞையை அறிய விடாத ஒரு கேடுகெட்ட சமுதாயம் உருவாகி வெகு காலமாகிவிட்டது.."

"ஏய்..என்னது இது சாதாரணமா சொல்ல வரவே வராதா உனக்கு.. ?"

"கவனமா கேளு இல்ல எழுதிவெச்சு திரும்ப திரும்ப படிச்சுப் பாரு.. புரியும்.. இன்றைய மனித மனம் கருத்துக் கற்களால் கட்டப்பட்ட வெற்றுக்கட்டிடம்.. ஒரு வாக்கியம் சொல்றேன் "குடும்ப உறவு என்பது உற்பத்தி உறவுதான்". எனக்கும் புரியாத வாக்கியமாதான் இருந்தது .. புரிஞ்சமாதிரி இருந்தப்போ நின்னுகிட்டிருந்த பூமி கழண்டுபோனது மாதிரி உணர்வு.. "

"எப்படி புரிஞ்சுக்கிட்ட.."

"மொத்தமா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லவே முடியாது.. ஆனா புரிஞ்சுகிறதுக்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்ல .. புத்தகங்கள் கிடைக்கிற தூரம்தான்.. "

"books .. செம bore .. மகி.."

"யாரையாவது படிக்கச்சொல்லி கேளு.. இப்ப நான் சொல்றத கவனி .. இங்க ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் சேர்ந்து வாழறாங்க.. படிக்கிறதுக்காகவும் வேலை சூழல் காரணமாகவும்... உனக்கு எத்தின வயசு தேஜா..?"

"பதினஞ்சு முடிஞ்சு இப்பதான் இருபது நாளாகுது.. ஏன்..?"

"தப்பில்ல இங்க பதிமூணு வயசு பொம்பளைங்க குழந்த பெத்துகிற கொடுமைகள் இன்னும் மாறல.. நான் சொன்ன மாதிரி ஆணும் ஆணும் சேர்ந்தோ பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ ஒண்ணா வீட்டுல வாழுறது சட்டப்படி தப்பில்லை.. ஆனா அவர்களுக்கிடையே ஒரு பால் புணர்ச்சி உறவு இருக்கும் பட்சத்தில அத பத்தின புகாரின் பேருல அரசாங்கம் சட்ட ரீர்தியான நடவடிக்கை எடுக்கும்.. அதே சமயத்தில ஒரு ஆணும் பெண்ணும் தனியா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்ந்தா சட்டப்படி தப்பு இல்ல.. வயசு மட்டும் 18 ஆகியிருக்கணும்.. யாராவது புகார் பண்ணினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது.. "

"சுவாரஷ்யமா இருக்கே.."

"ஆமாம்.. அதனால குடும்ப அமைப்புக்கும் சேர்ந்து வாழறதுக்கும் இருக்கிற வித்தியாம் சடங்குகளும் தாலியும் தான் அப்படின்னு பொதுவா நினைச்சுக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை இப்படி ரெண்டையும் ஒப்பிட்டு பாத்தோம்னா உண்மையான சேர்ந்து வாழ்தல் முறையோடட அற்புதத்த புரிஞ்சுக்க முடியாத போகும்.. "

"நான் ஒன்னு கேக்கவா மகி.. பெரியமனுசத்தனமா இருக்கும்.. கோச்சுக்காத.. நீ ஆம்பள இப்படித்தான் சொல்லுவ .. ".

"பின்னிட்ட போ.. இதப்பத்தி நான் தொடர்ந்து பேசுறேன்.. இப்போ நான் போகணும்.. "

"ங்கோயாள தப்பிக்கிற .. இல்ல..ஒழுக்கமா உண்மைய சொல்லு.." என்றார் தேஜா.

*********

08 December, 2010

பூனையென்பது கடலில்லை.

நண்ப

வெயிலற்ற மதியமொன்றின் அடர்வாகனச் சாலையோரம் கேட்க நேர்ந்த ஒரு பூனையின் விளிப்பு எல்லாம்வல்ல மரணத்தின் திசை மாற்றியது. நீயாக இல்லாத உன்னை பகடிசெயும் குரல் எப்படி வாய்த்தது அப்பெண் பூனைக்கு என அறிய நேர்ந்தபோது இரண்டு மதில்களுக்கு இடையில் வாலைத்தூக்கியபடி நடந்துதான் சென்றது என்னால் தொடர முடியாதொலைவை கடந்து. தரையில் நடக்கும் பூனையை மதில்மேல் நிறுத்தும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு கேள்விகள் கிடையாது என்றாலும் என்னிடம் ஒரு சுவரை கட்டி எழுப்பும் வரைபடம் உண்டு. வெளியால் ஆன சுவர்.

நண்ப

உடலில் இருந்து மருத்துவன் ஒருவனால் கவ்வை கொண்டு வெளியே எடுக்கப்பட்ட உலோக ரவை போலதென் இருப்பு. உடனடிப் பயன் எதுவும் என்னிடமில்லை என அறிந்தே அப்பூனை அழைக்கிறது தனத்தான உயிரறுக்கும் குரலில். பூனையின் குரலென சொன்னாலும் நானும் நாம் நடக்கும் நடைபாதைப் புல்லும் கள்மரம் விலகி அமரும் புள்ளும் அறியும் அது உன் குரலென்று.

நண்ப

நீ மதிலாகிறாய் நீ பூனையாகிறாய் நீ பூனையின் குரலாகிறாய் மதிலேராமல் தரையில் நிதானமாய் நடக்கும் பூனையின் வாழ்வுமாகிறாய். என்னை சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் பூனைகளாய் மாறித் துரத்த சந்தில் நடக்கும் ஒற்றைப் பூனை குட்டிப் பல்சராய் மாறி ஹாரன் அடித்து விலகச்சொல்லி வழி கேட்கிறது. நான் அருகிலிருக்கும் கடலுக்குள் ஓடுகிறேன் என்னை காப்பாற்றிக்கொள்ள நீ ஒரு போதும் கடல் ஆக மாட்டாய் என அறிந்தவாறு..

30 November, 2010

மறந்தது காற்று திரும்பி வர....

நண்ப
சொல்லியவற்றை விட சொல்லாமல்போனததிகம் என திரும்ப வந்த காற்றுக்கு முன்னால் அடைத்துவிட்டிருந்தேன் கதவுகளை. கதவுகளைத்திறக்க ஒரு காதமேனும் வெளியேற வேண்டும் நான். மேலும் இனி அந்த கதவுகள் திறக்கப்படுவதற்கும் ஏற்றவையல்ல. ஒலிபுகாத மெல்லாடியால் குழைத்துப்பூசப்பட்ட அக்கதவுகள் திறக்கப்பட காற்று குடித்தாகவேண்டும் ஒரு கடல் நிறைய உப்பை. அல்லது தனது ஸ்தூல பிரதியை கொண்டிருக்கும் கதவுகளை உடைக்க துரோகத்தினாலான நீண்ட சாவியை உபயோகிக்கத்தெரிந்திருக்க வேண்டும் மீண்டும். மீண்டும் துரோகம் என்வென்று அறியாத அல்லது உப்பைக் குடிக்க முடியாத காற்றிற்கு உண்மையில் என்வசம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்பதின் துயரத்தினை அறைந்து வைத்திருக்கிறேன் எனது சமையலறைச் சுவற்றில் அன்பாலான ஆணிகொண்டு.

நண்ப

பசித்தலையும் கிடைபிரிந்த செம்மறியின் தனிமைக் கண்களுக்குள் விழுந்த என் ஏசுவின் கைகளை வெட்டிக்கொண்டு போனபின் விழிகொள் வியப்பின் விசமுறிக் கிழவி தனதான சூன்யத்தில் தோற்றுப்போனாள். ஏசுவின் காயத்திற்கு மருந்திட இடயனைத்தேடி கதறுகிற செம்மறியை தாங்கி நிற்கிறது சமவெளிப் புற்கள். ஒற்றைகுழலில் உலகைக்குடித்து உபரியாய் வெளியேறும் இடையனின் சங்கீதத்தின் மாயவொலியில் வளரும் கைகள் இரண்டையும் விரித்து வாரியணைக்கிறார் ஏசு உலகமாய் சுருங்கிப்போன செம்மறியை. பார்த்துக்கொண்டிருந்த உன்னிடம் இசைக்க கொடுத்தேன் ஊர்குருவிகளின் கிலுப்பையை. இரு கைகொண்டு நடனத்தை தொடங்குகையில் குறுக்கிட மறந்தது காற்று.

நண்ப

காற்றை அழைத்துவர நீ சென்ற வெகுநேரம் கழித்துதான் மூடினேன் என் கதவுகளை.

***************************

27 November, 2010

வானவில் வண்ண மின்னல் 8


தேஜா உடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். 'மகி.. உனக்கு பேய் பிசாசு மேல நம்பிக்கை இருக்கா' என்றான். 'கடவுள் மேல நம்பிக்கை இல்லை' என்றேன். 'எதுக்கும் நேரடியா பதில் சொல்லமாட்டியா நீ..' என்றான். 'ரெண்டும் ஒண்ணுதாண்டா.. கடவுள் மற்றும் சாத்தான். கடவுள் இல்லையென்றால் பேய் பிசாசு இல்லை அல்லது பேய் பிசாசு இருந்தா கடவுள் இருக்கார்.. என்றேன். "கடுப்பேத்தாத மகி.. மேட்டருக்கு வா.. பேய் பிசாசு இருக்கா இல்லையா.. " என்றான். "தெரியலடா.. ஒரு வேள இருந்தா அதுக்கு சரியான ஒரு அறிவியல் காரணம் இருக்கும்..நாம இருக்கோம் இல்லையா .. அதாவது மனுசங்க இருக்காங்க இல்லையா .. அதுக்கான அறிவியல் காரணம் இருக்கு.. இப்போதைக்கு எனக்கு இந்த எண்ணம்தான் ஒரு சமரசமில்லாத உண்மையா தோணுது..மனிதன் நேரடியா மனிதனா வரலை.. அவன் ஒரு பரிணாம வளர்ச்சி .. உயிர்களின் பரிணாமம் என்பது பொதுவான டார்வினிய கோட்பாடு..பிரபஞ்சம் எல்லாம் வேதிப்பண்புகளும் அதன் வினைகளும் மட்டுமே அப்பிடின்னு சொன்னால் நம்மளோட மொத்த இருப்பின் கொடும் அபத்தம் கொஞ்சம் புரியலாம்.. ஒரு வெடிப்பு ஒன்னும்இல்லாததிலிருந்து. அந்த மகா வெடிப்பு இன்னும் முடியல.. அந்த வெடிப்பின் விளைவுக்குள்ள இருக்கிறது நமது பூமி.. அதுக்குள்ளே நம்ம இருப்பு! ஒரு சரஸ்வதி வெடி வெடிச்சு அதுல சுத்திக்கிட்டு இருக்கிற காகிதம் சிதறி போய் எங்கயாவது விழும் அந்த காகிதத்துல ஒரு வாழ்க்கை இருந்ததுன்னா எப்படி இருக்குமோ அதுமாதிரிதான் நம்ம வாழ்க்கையும்..இதப்பத்தி யோசிக்கும் போது தலைசுத்தும்.."

"ஏன் இப்படி யோசிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற.. " என்றான் தேஜா.

"நெசந்தாண்டா.. சிந்தனையும் ஒரு வெடிப்பு மாதிரிதான் மனுஷனுக்கு.. ஒரு பொறி கிளம்பிடுச்சுனா சாகுறவரைக்கும் இம்சைதான்..அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் .. " என்றேன்.

"அப்ப உனக்கு அறிவு பெருத்துப் போச்சுன்ற.. "

"அறிவுன்னா இங்க ரெண்டு விதமா சொல்லலாம் தேஜா.. ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிறது ஒரு வகை ஒரு விஷயத்தை புருஞ்சுக்கிறது இன்னொரு வகை .. உதாரணத்துக்கு அமெரிக்க அதிபர் யார் என்றால் ஒபாமா அப்பிடின்னு தெரிஞ்சுக்கிறது ஒரு அறிவு.. அதே நேரம் ஒபாமா எப்படி அமரிக்க அதிபரானார்னு புரிஞ்சுக்கிறது இன்னொரு வகை இந்த உலகத்துல தெரிஞ்சுக்கிற அறிவு பணத்த கொடுக்கும் புரிஞ்சுக்குற அறிவு பணத்த எடுக்கும்..புரிஞ்சுக்கிறது என்பதுதான் வலி.. அதுதான் பெருத்த நோவு.. "

" ஏன் படுத்துற இப்படி.. நான் என்ன கேட்டேன்.. உனுக்கு அறிவு கீதா இல்லாங்காட்டி லேதா..?

"தெரிஞ்சுக்கிற அறிவு இல்ல .. புரிஞ்சுக்கிற அறிவு இருக்கு.. "

"அறிவே.. எதப்புரிஞ்சுகிட்ட இப்ப நீ.."

"அது தெரிஞ்சிருந்தா ஒரு வேள நான் எப்பவோ பைத்தியமாகி சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. நீட்சே மாதிரி.. இல்லேனா ..."

"காந்தி மாதிரியா .. "

"இல்லை.. காந்தி மகாத்மான்னு அழைக்கப்பட்டவர்.. ஒரு சுதந்திர போராளி.. கடுமையான ஆயுதத்தை பிரயோகிக்கத் தெரிந்த கர்மவீரர்..போர்ப்படை தளபதி.. "

"கடுமையான ஆயுதமா.."

"ஆமாம் .. அதுக்கு பேரு அகிம்சை.. அகிம்சைய விட மிகபயங்கரமான ஆயுதம் இன்னொன்னு இருக்கு .. அதுக்கு பேரு அன்பு.."

"அதுசரி.. ஆரம்பிச்சுட்டியா .. பொழியாத உன்னோட தத்துவத்தை .. நிறுத்திட்டு டார்வினுக்கு வா .. " என்றாள்.

"சரி சொல்றேன்.. உலகம் தோன்றி உயிரினங்கள் தோன்றி பரவ தேவையான சூழலை இயற்கை உருவாக்கினதுக்கு அப்புறமா ஒரு செல் உயிர் முதல் ஒரு உடல் அமைப்பு உருவாகிற வரைக்குமான ஒரு நிகழ்வுப்போக்கு நடந்து முடிந்ததுக்கு அப்புறமா வளர்ச்சியின் உச்சபட்சமா பாலூட்டிகள் அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனங்கள் பூமியில் வாழ தகுதியானதாக இயற்கை தேர்வு செய்யுது.. அந்த சமயத்துல எல்லா வகையான மற்ற விலங்குகளும் தகுதிக்கு தக்க தண்ணியில போறதாகவோ தரையில போறதாகவோ பிரிஞ்சு வாழத்தொடங்க எல்லாவகையான பாலூட்டிகள் மட்டும் கட்டையில போச்சு.." என்றேன்.

"என்னது கட்டையில போச்சா..?"

"மரங்களில் வாழ தலைப்பட்டன... தேஜா கொஞ்சம் நீளமான பாராவா சொல்லப்போறேன் கவனம் ..என்ன? "

"நீ ரெண்டு வரி சொன்னாவே புரிமாடேணுது இதுல நீளமான பாரா வேறையா.."

"கேளுடா..பாலூட்டிகள் என்பதே சுவாரசியமா இல்லையா உனக்கு.. "

"சுவாரஷ்யமாதான் இருக்கு ஆனா நீ குடுக்கிற பில்ட்அப் கொஞ்சம் பயமா இருக்கு.."

"கேளு .. மொத்த பாலூடிகளும் மரங்கள்ல வாழ தொடங்கியதுதான் மனிதனின் வரலாற்றில் மிக ஆரம்ப புள்ளி.. இன்னைக்கு வரைக்கும் மரத்துல வாழ்ந்த படிமம் மனித DNA வில் படிந்திருக்கிறதுன்னு சொல்றாங்க.. இப்பவும் மனுஷன் தூங்கும்போது திடீர்னு உலுக்கி விழுற மாதிரி பீல் பண்றது மரத்துல இருந்து கீழ விழுரமாதிரியான ஆதி ஞாபகம்னு அறிவியல் சொல்லுது.. மரங்கள்ல வாழ்ந்த பாலூட்டிகள் பல்வேறு வகையான உடல் அமைப்புகளோட இருந்தது.. மரத்துல கிடைக்கிற இலைதளைகளும் பழம் கொட்டைகளும் போதாத பீல் பண்ண ஊன் உண்ணிகள் மற்றும் காலுல குளம்பு அமைப்போட இருந்த விலங்குகளும் மரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தரையில் வாழ ஆரபிச்சு அதற்கான புதிய உடல் அமைப்புகள காலப்போக்கில அமைசிகிடுச்சு.. உதாரணமா உறுதியான முன்னங்கால்கள், வேகமான ஓட்டம், அதிகப்படியான மோப்பசக்தி போன்றவைகள்.. அதே சமயம் மரங்களிலேயே இருந்ததுகளுக்கு குளம்போ கடுமையான மோப்ப சக்தியோ தேவை படல மாறாக கூர்மையான கண் பார்வையும் சமயோசித அறிவும் தேவை பட்டது அதுக்கு தகுந்த அமைப்பு அவைகளுக்கு வைக்க ஆரம்பிடுச்சு.. தாடை குறுகி மூக்கு அமைப்பு மாறி நகங்கள் தட்டையாகி பெருவிரல் மற்ற விரல்களுக்கு எதிரா திரும்பி ஒருவகையா மனிதக்குரங்கு வடிவத்துல உடல் அமைப்பு வர பல ஆயிரம் வருசங்கள் ஆச்சு.. கூடவே அதனோட மூளை பெருசாவும் மிக சிக்கலான அமைப்பாகவும் மாறியிருந்தது.. பிறகான ஒரு கால கட்டத்துல ஒரு சில பாலூட்டி இனங்கள் தனது வாழ்வு முறைய தரைக்கு கொண்டுவர இயற்கை உந்துதல் அடைஞ்சது.. அதுக்கு காரமணமாய் அவை முன்னங்கால்கள தூக்கிகிட்டு நிமிந்து நின்னு நடக்க முடியும்னு தெருஞ்சுகிட்டது என்பதாய் இருந்தது.. ஆனா தரையில வாழுறதுக்கு அது மிக மிக கடுமையான சோதனைகளை இயற்கையில எதிர்கொள்ள வேண்டி இருந்தது .. ஆனாலும் அதனுடைய மூளை அமைப்பு கொஞ்ச கொஞ்சமா எல்லாவற்றையும் புரிஞ்சுகிட்டு தனக்கான நிலையான வாழ்விடமா நிலத்தை தேர்வு செய்து கொண்டது..இனி தரையில தலைநிமிந்து பெரிய மூளை மற்றும் எதிர் திசையில் இயங்கும் கைகளோட இருக்கிற இந்த வகை பாலூடிகல நாம மனிதர்களின் மூதாதையர்கள் என்று சொல்லலாம்..இவர்களை அறிவியல் 'நியாண்டர்தால்' அப்பிடுன்னு பேர் வைக்குது. இவர்கள் ஏறக்குறைய ஒன்னேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால இந்த பூமியில தங்களோட முழு பரிணாமத்துக்கு வந்தாங்க.. இந்தவகையான மனிதர்கள் தோன்ற காரணம் இவர்கள் இயற்கையில கிடைக்கிற அனுகூலங்களை நேரடியாக பயன்படுத்துவதை விட்டுட்டு ஒரு புதுவகையான பரிமாணத்தை துவங்கி வெச்சதுதான்.. முரண்பட்டுவது அதன் மூலம் வளர்வது இதுதான் structure... அதுக்கப்புறம் 'ஆய்வாளர் 'ஜார்ஜ் தாம்சன்' என்பவரோட வார்த்தையில சொல்லனும்னா.. 'தொடர்ந்து மனிதனின் மூளையிலும் கையிலும் ஏற்பட்ட நேர்இணையான வளர்ச்சிதான் மனிதன் கருவிகளைப் பயன்படுத்தவும் மொழி என்பதை உருவாக்கவும் தேவையான அடிப்படை பண்பை அவர்களின் உடலியல் மூலாதாரமாக கொடுத்தது' புரியுதா?

"ஒரு எழவும் புரியல .. நான் போய் தூங்குறேன் மகி.. " என்றார் தேஜா.

**************************
தொடரும்
***********************




24 November, 2010

ஆணின் மரணம்.

முன்னால் கிடக்கிறது கடல். சாம்பலின் வெண்மையில். நிலாவுக்கு கீழே என்பதில் காட்சிபிழை ஏதுமில்லை. ஒளிரும் கருமையை சாத்தியமாக்குகிறது அந்தி. மணல் மிதித்தபடி நிற்கிறான். தூரத்தில் தெரியும் எதோ ஒன்றை பார்த்தபடி. கணத்தில் நிலா சாத்திக்கொண்டது தனதான ஜன்னலை. மூடப்பட்ட ஜன்னல் சிலுவையை ஒத்தது. பாரம் தாங்காது மணலுள் புதைக்கிறான். தூரத்து மீன்கள் வேடிக்கை பார்த்து கண்சிமிட்டுகின்றன. சிரிக்கவும் செய்யலாம். உடம்பொற்றி பரவுகிற துகள்மணலை உறுஞ்சி குடிக்கிறது துரோகம் நிரம்பிய ஊசிமுனைக் காற்று.

இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள் அவனைப் பார்த்தபடி. அவர்களுக்கு இடையில் இருக்கிறது வெளி. அவர்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது விருப்பமின்மை. வேறொரு வெளியில் அவன் இருப்பை அவர்கள் பாரமென நினைத்து ஒரு துகள் மணலை விட்டெறிகிறார்கள். துகள் அவனை விரட்ட புதைந்த மணலை விட்டு ஓடமுடியாமல் அவன் கதறுகிறான். ஒரு சிவந்த நாற்சக்கர பட்டத்தின் வால் நீண்டு இறுக்குகிறது அவன் குரலை.

இரு ஓரங்களும் சீர்படுத்தப்பட்ட சாலையும் சாம்பல் வண்ணத்தில் நீள்கிறது. சாலையின் மறுமுனையில் இருக்கலாம் அவன் பார்த்துக்கொண்டிருந்த எதோ ஒன்று. இம்முனையில் அவன்மட்டுமே கடல் போன்ற தனிமையில். பறந்து வந்த ஒற்றை துகள் கண்ணில் பட சாலைக்குள் பாய்கிறான். உப்புசுவையில் எரிகிறது காலம். அவனது கடல் நீக்கத்தை விரும்பாத ஒன்று அவனை உற்று நோக்குகிறது.

பின் நிகழ்கிறது..

18 November, 2010

வானவில் வண்ண மின்னல் 7

தேஜாவின் முகம் லேசான சோகத்தில் இருந்தது. என்னவென்று கேட்டேன். அப்பா திட்டிட்டார்.. மகி.. ஏன் அப்பா இப்படி இருக்கிறாரு.. என்னை புருஞ்சுக்கவே மாட்டேங்கறார்.. என்றான். நான் சொன்னேன்"எல்லா அப்பாக்களும் அப்படித்தாண்டா.. நாளைக்கு நீ அப்பாவானாலும் அப்படித்தான்". சிரித்தான். நான் அவனிடம் ஒரு சம்பவத்தை சொல்லத்தொடங்கினேன். நம்ம காந்தித்தாத்தா ஒரு தடவ ட்ரைன்ல அவர் பொண்டாட்டி கஷ்தூரிபாவோட போய்கிட்டு இருந்தாரு .. ஒவ்வொரு ஸ்டேசன்லையும் பயங்கரமான கூட்டம்.. எல்லா மக்களும் "மகாத்மா காந்திக்கு ஜே"ன்னு கோசம் பட்டைய கிளப்புது.. அப்ப வண்டி ஒரு ஸ்டேசன்ல நிக்கிது.. ஒரே கூட்டம் எல்லோரும் காந்தி கோசம் போடுறாங்க.. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் "கஸ்தூரிபாவுக்கு ஜே" ன்னு கத்திக்கிட்டே அவங்க பக்கத்துல போறாரு.. அவர பாத்து கஸ்தூரிபாவுக்கு கண்கலங்குது.. காந்திக்கு சங்கடம்..அந்த மனிதர் கஷ்தூரிபாவுக்கு பக்கத்துல போய் கையிலிருந்த ஒரு ஆரஞ் பழத்தை கொடுக்கிறார்..கஸ்தூரி அத வாங்கிட்டு என்கூடவே வான்னு அவர கூப்பிடுறார்.. அப்ப காந்தி அவரப்பாத்து எனக்கு ஏதும் இல்லையா..ன்னு கேக்குறாரு .. அதுக்கு அவர் "நீங்க உண்மையிலேயே மகாத்மாவா இருப்பீங்கன்னா அதுக்கு காரணம் கஷ்துரிபா தான் " அப்பிடின்னு சொல்றாரு. காந்தி அதை உண்மைன்னு ஒத்துக்கிறாரு. பிறகு தெருபைத்தியகாரன் மாதிரி கிழிஞ்ச சட்டையோட மிகுந்த போதையில இருந்த அந்த ஆள் கூட்டத்துல கலந்து வெளியேறி வரவங்க போறவங்ககிட்ட குடிக்க பணம் கொடுங்கன்னு பிச்சைஎடுக்க ஆரம்பிக்கிறாரு. அவர் பேரு ஹரிலால். மகாத்மாவோட முதல் மகன்".
"ஆக, அப்பனுக்கும் புள்ளைக்குமான உறவு அடிப்படையில முரணாத்தான் இருக்கு.. காரணம் மகன் மேல அப்பன் எடுத்துக்கிற உரிமையும் மகன் தான் ஒரு தனிமனிதன் என்று உணர்கிறதும் தான்னு நினைக்கிறேன்.. அதைவிட முக்கியமான காரணம் காலம். தலைமுறை இடைவெளி .. சராசரியா முப்பது வருசங்கள் இடைவெளி.. "
பணத்தை பத்தி சொல்றேன்னு கூப்டு இப்படி மொக்கைய போடுறீங்களே என்றான் தேஜா. இதுக்கே மொக்கைனா பணத்த பத்தி ஆரம்பிச்சா ஓடிப்போயிருவ போலிருக்கே.. சரிசரி.. ஆனா பணத்தை பத்தி சொல்லனும்னா மனித வரலாறையே மொத்தமா சொல்லணும். மனுசன் குரங்குல இருந்து வந்தான்கிற பரிணாம வளர்சியில எனக்கு நம்பிக்கை இருக்கு. அதானால நாம மனுஷங்களோட ஆதி வரலாறுக்கு போகத்தேவையில்ல. அதே சமயம் மனிதர்களோட தொடக்க வரலாற கொஞ்சம் தெரிஞ்சுக்கிறது நல்லது. மனிதர்கள் தனக்கு தேவையான உணவை இயற்கையில் கிடைக்கிற பொருட்களின் உதவியோட சேகரிக்க தொடங்கினபோது மனித வரலாற்றின் கற்காலம் தொடங்குது.
மனிதன் தனது தேவைக்காக தனது உடலை தவிர வேறொரு பொருளை உபயோகிக்க தொடங்குகிறான். பலவிதமான வடிவங்களைக் கொண்ட கற்களை அவன் உபயோகிக்க தொடங்குகிறான். இது அவனுக்கு இயற்கையில சில பொருட்களை தனது தேவைக்காக உபயோகிக்கலாம் என்கிற அறிவை தருது. இதன் மூலமா மனிதன் தனது சிந்தனையின் அடுத்த நிலைக்கு போக உடலை தவிர வேறொரு பொருள் உதவுது. ஆக மனித சிந்தனையில் 'பொருள்தான்' முதல். இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் இருக்கு. ஒன்று மனித சிந்தனைக்கு உதவிய விசயங்களில் முதல் (first) என்பதும் மற்றொன்று மனித சிந்தனை வளர்ச்சிக்கு அவனோட முதல் (investment) பொருள்தான் என்பதும்தான்.
ஒரு எழவும் புரியல மகி.. என்றாள் தேஜா.


யோசி.. போகப்போக புரியும்.. புரியனும்கிற அவசியமும் இல்லை.. மனுஷன் உடம்ப விட்டு இன்னொரு பொருளை உபயோகிக்க தொங்குறது என்பது எனக்கு வேறொன்னையும் தெளிவாக்குது. அது என்னன்னா மனிதன் இயற்கைக்கு முரண்படத்தொடங்கினான் என்பதுதான். ஆக முரண்பாடு என்பதுதான் மனிதனின் இன்றைய முழு வளர்ச்சிக்கும் ஆதாரம்னு சொல்லலாம். ஏன் அல்லது ஏன் கூடாது என்பதுதான் ஆதாரக்கேள்விகள். பிறகு மனித வரலாற்றில் மிக முக்கிய மூன்று கண்டுபிடிப்புகள் அவனின் அதிகாரத்தின் கீழ் புறஉலகை வரச்செய்தது. தீ. சக்கரம். வில் அம்பு. ஆனால் எனக்கு மனித கண்டுபிடிப்புகளில் மிக முக்கியம்னு படுவது மனிதர்கள் மரம் மற்றும் நார்களினால் ஆன பாத்திரங்களை (கொள்கலன்கள்) மண் கலயங்களை உருவாக்கியதுதான். ஆனாலும் மனிதர்களின் மிகசுவாரஷ்யமான மற்றும் ரகளையான கண்டுபிடிப்பு பாய்மரம்! மரக்கலயம் தீயில் எரிந்துபோவதை தவிர்க்க மூதாய் ஈரக் களிமண்ணை பூசுவதில் தொடங்கி படிப்படியாக சுட்டமண் கலயங்கள் உற்பத்திப் பொருளை சேமிக்க தொடங்க எதிர்காலத் தேவை என்பதில் போய் முடிகிறது. ஒரு மாபெரும் தொடரியக்கத் தகவமைப்பிற்கு அந்த முடிவு மனிதனை நிற்பந்தபடுத்துகிறது. இங்கு வியாபாரம் (trade) தொடங்குகிறது!

இதைப்பற்றி பேசுவதற்கு முன் டார்வினிய கோட்பாடை மிக சுருக்கமாக அடுத்து பேசலாம்..

அதுக்கும் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்.. என்றார் தேஜா.

சேந்து கண்டுபிடிப்போம் .. என்றேன்.

*****************************

தொடரும்

**********************




08 November, 2010

வானவில்வண்ண மின்னல் 6

எல்லாம் கிடைக்கறது பிரதிகளில். இவ்வாதம் பற்றிய ஆழ உரையாடலுக்கு விரிவாக படிக்கவேண்டும் என்று சொல்கிறான் வசு. ஒப்புக்கொள்கிறேன். தொடங்கியிருக்கிறேன் சோதிப்பிரகாசத்தின் வரலாற்றின் முரண் இயக்கத்திலிருந்து. பார்க்கலாம். இனி இப்பதிவை ஒரு சுய மதிப்பீட்டு பார்வையில் எழுத உத்தேசம். என்னில் இருக்கும் கருத்துகளை தொகுக்கவும் அதை தனியாக நின்று மதிப்பிடவும் முடியுமாவென்று பார்க்க எண்ணம். பொதுவாகப் பார்க்கும் போது ஆழத்தின் அலையொன்றில் சிறுவுயிராய் இழுபடுகிறது மனம். கொந்தளிப்பின் வேர் விளங்கா காலம். எந்த பொருளை வாழ்க்கையின் வெளிக்கு அர்த்தமாய்க் கொள்கிறது என் மனம். இந்த கேள்வி சிந்தனையில் தோன்றிய கணத்தில் வெடித்துசிதறுகிறது சொற்களாலான லார்வா நதி. போக்கிடம் அற்ற அத்வானம் மனம்.

***************************

நான் எழுதுகிற கவிதைகளில் இருந்து தொடங்குகிறேன். என்னளவில் கவிதை என்பது என்னவென்று மீண்டும் தெரியாமல் போய்விட்டது. கவிதை மற்ற எல்லாவறையும் போலவே ஏககாலத்தில் 'இருக்கிறது' மற்றும் 'இல்லாமல் இருக்கிறது' அணுபிளவில் ஒளித்துகள் போல. மனித சாரம் இன்பத்தை விழைந்து செல்கிறது அல்லது குறைந்தபட்சம் துன்பத்தை தவிர்க்க பாடுபடுகிறது. அப்படிஎன்றால் கவிதையும் இன்பத்திற்கான விழைவெனவே எடுத்துக்கொள்கிறேன். என்றால், இன்பம் என்பது என்ன. நல்லது எல்லாம் இன்பம். என்றால், நல்லது என்றால் என்ன. எனக்கு எது நல்லதோ அது நல்லது. என்றால், அது சுயநலம். இந்த அளவில் நான் கடுமையான சுயநலவாதி என்று ஒப்புக்கொள்கிறேன். ஆக என் சுயநலத்துக்காவே என்னால் கவிதை எழுதப்படுகிறதா என்றால், ஆமாம் மற்றும் இல்லை என்று முரணான பதில் மனதில் எழுகிறது. ஏனென்றால், கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்துடன் நான் எழுதும் அனைத்து வரிகளும் படிப்பவர்களால் கண்டுபிடித்துவிடமுடிகிறது. எதையாவது எழுதிவிட்டு கவிதை என்று சொல்லும்போது கவிதையென ஒப்புக்கொள்ளபடுகிறது. ஆக ஏககாலத்தில் இருக்கவும் இல்லாமல் இருக்கவும் கவிதையால் முடிகிறது. என்னால் முடியவில்லை. நான் ஏககாலத்தில் இருக்கிறேன். இல்லாமல் இருப்பதென் மரணம். ஆக கவிதை என்றால் என் நிலை என்பது இவ்வாறானதாக இருக்கிறது: எனது மனம் பின்நவீனத்துவத்தை நிலைப்பாடாக கொள்கிறது. அதன் களம் பின் காலனீயக் களம். இவற்றில் கவிதைக்கு கவிதை என்கிற நிலைப்பாடிற்கு இடமில்லை. எனவே கவிதை தேவையில்லாத ஒன்று என்கிறது அறிவு. ஆனால் மனம் தனது மூன்று நிலைகளும் (உணர்வு நிலை, ஆழ்மன நிலை, மயக்க நிலை) தனதான படிமப் பார்வையை கண்டு பேதளிகும்போது கிடைக்கும் சொற்கள் கவிதையின்றி வேறென்ன. இப்படி ஒரு முரணான நிலையில் நான் எழுதுவதை கவிதை என்று எந்த தைரியத்தில் சொல்லுகிறேன் என்றும் விளங்கவில்லை. நெகிழ் உலர் சதுப்புநில பிச்சிகாடு மனத்தில் தோன்றும் தாந்தோன்றிப்பூக்கள் சொற்களாய் மாறும்காலம் கவிதையாய் மணக்கலாம். இப்போது நான் என்ன செய்யவேண்டும்: எவ்வித நிபந்தனையும் இல்லாமல் எனது கவிதைகளை திரும்ப பெறவேண்டும். ஆனால் முடியாது. ஏனென்றால் எழுதிய வரிகள் என்னை ஆயிரமாயிரம் ஊசிகளாய் மாறி என்னை குத்திக்கிழித்து பனிக்கடலின் ஆழத்தில் இழுத்துக்கொண்டு போய்.... உறைகிறது வலி.

************************

மீண்டும் நிகழ்கிறது எல்லாம். மீண்டும் மீண்டும். அதனால்தான் நானும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் நிற்கவேண்டிய நிர்பந்தம். எனவேதான் மீண்டும் மீண்டும் ஒரே சொல். தேஜா வூ (.teja vu.) இந்த வார்த்தை பார்த்திபனால் எனக்கு ஞாபகப்படுத்த பட்ட போது ஒரு கத்தி செருகல் நிகழ்ந்தது. நான் நிதானிக்கிறேன். உண்மையில் எல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்வது போல மாயம்தானா அல்லது மீண்டும் நிகழ்வதே புதிதுதானா. 'தேஜா வூ' இவ்வார்த்தை என்னுள் தத்துவமாக அறிவியலாக இலக்கற்ற கற்பனையாக கவிதையாக நினைவுகளற்ற எதோ ஒன்றாக ஸ்தூல இருப்பாக பயமாக பதிகிறது ஏக காலத்தில். என்ன காரணம் என தெளிவில்லை. அப்படி தெளிவுடனும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் நம்பிக்கையிழப்பையும் அமைதிப்பரவலையும் நிகழ்த்துகிறது இவ்வார்த்தை. ஒன்றில் தெளிவு பெற்றுவிட்டேன்: நான் சுயநலவாதி. எனது சுயநலம் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் இருந்து பறிக்கப்பட்டது அல்ல. மாறாக எனது சக மனிதர்களிடமிருந்து இரவலாய் பெறப்பட்டது. சரி எனது கவிதை நிலைப்பாட்டிற்கும் இந்த பிரகடனத்திற்கும்(?!) என்ன சம்பந்தம்? எதோ இருக்கிறதாகப் படுகிறது. தொடர்ந்து விளக்க முயல்கிறேன்.

***********************

கவிதைக்கு பிறகு? உரைநடை. சிறுகதை மற்றும் நாவல்களை (!) முயற்சிக்கிறேன். சில சிறுகதைகளும் இருக்கிறது. அவற்றை படித்துப் பார்க்கும்போது நான் கவிஞன் அல்ல என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். இந்த பதிவை நான் அதற்கான களமாக எடுத்துக்கொள்கிறேன். பயிற்சி களமாமாக.

**************************

இதன் தொடர்ச்சியாக நான் புரிந்துகொண்டிருக்கிற இரண்டு விஷயங்கள் பற்றி எழுத தொடங்குகிறேன். ஒன்று பணம் மற்றொன்று மொழி. இவற்றை பற்றிய எனதான புரிதலை எழுதவதன் மூலம் என்னை தொகுத்துக்கொள்வதாக உத்தேசம். இதற்காக இங்கு 'தேஜா' என்கிற கற்பனை மனிதனை உருவாக்கி இருக்கிறேன். இனி அவனுடனான உரையாடலே இந்த தொடரை இட்டுச்செல்லும். தேஜா என்பவன். ஆண் அல்லது பெண் அல்லது இண். பதினைந்து வயது தமிழ்நாட்டுக்காரன்.

*************************

போர்னோகிராபி பற்றிய விவாதம்: ஓர் அபிப்பிராயம்

சிந்திப்பதை போல ஒழுக்கம் கெட்ட
காரியம் வேறேதுமில்லை. இந்த கேடு கெட்ட
ஆபாச நடவடிக்கையானது
பசும்புல் தரையில் படரும்
களைச்செடி போன்றது
சிந்திப்பவர்களுக்கு புனிதம் என்று ஏதுமில்லை
பெயர் குறிப்பிட்டு நேரடியாகத்தான் சுட்டுவர்
அம்மணமான பிரச்சனைகளை தூக்கித்திரிவர்
கவனம்பெறும் சமாச்சாரங்களை
அழுக்குவிரல்களில் தொட்டு விவாதிப்பர்
அவர் காதுகளுக்கு அது இசை
பட்டப்பகலில் அல்லது இரவுப்போர்வையின் கீழ்
வட்டமாகவும் இருப்பார் முக்கோணமாகவும் ஆவர்
ஜோடிஜோடியாக இணைவர்
சேருபவர்களின் வயதும் பால் அடையாளமும்
முக்கியத்துவமில்லாதவை. அவர்தம்
கண்கள் ஜொலிக்கும்
கன்னம் கனிந்திருக்கும். சிநேகிதர்கள்
தம் இநேகிதர்களையே
கெடுப்பார்கள்.
ஒழுக்கம் கெட்ட மகள்கள் தங்கள்
தந்தையர்களை கெடுப்பார்கள்..
சின்னதங்கைக்காக
அவள் சகோதரன் தரகு வேலை
பார்ப்பான். சபிக்கப்பட்ட
மரத்திலிருந்து அவர்கள்
கனிகளை கேட்பர். பளபளப்பான
சஞ்சிகைகளில் காணப்படும்
கன்றிய புட்டங்களை விடவும்
அசிங்கமானவர்கள்.
நேரங்கெட்ட நேரத்தில் பிறந்த இந்த
குறுகிய புத்திகாரர்கள் கொண்டிருக்கும்
புத்தகங்களில்
படங்களிருக்காது. அவர்களது
உடலின் நிலைகள் அதிர்ச்சியூட்டும்
ஒரு மூளையிலிருந்து
இன்னொரு மூளைக்கு உணர்ச்சியேற்றும்
அவர்களின் அனாவசியமான
வெளிப்படையான உடலசைவுகளை
காமசூத்ரா நூல் கூட அறியாது.
களியாட்டத்தில் சூடாய் இருக்கும்
ஒரே திரவம் காபிதான். மனிதர்கள் தம்
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தம் இடுப்பை அசைப்பார். தத்தம்
கால்களின் மீதே கால்களை போட்டு கொள்வர்
ஏனென்றால்
அப்போதுதான் ஒரு காலில் தரையின் மீது இருக்கமுடியும்
மற்றொரு கால் சுதந்திரமாக காற்றில்
ஆடிக்கொண்டிருக்க முடியும்
அவ்வப்போது அவர்களில் ஓரிருவர்
எழுவார்கள் ஜன்னலை நோக்கிப்
போவார்கள். திரைச்சீலையில் இருக்கும்
துவாரத்தின் வழி தெருக்களை
ஜாக்கிரதையாக ஊடுருவிப்பார்த்துக்கொள்வார்கள்.
*******************
விஸ்லாவா ஷிம்போஷ்க்கா (vislawa szymborska). நோபல் கவி. போலந்து பெண்.
*******************

28 October, 2010

என் பெண்ணே




சர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்


தூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்


கானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்


விரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்



சொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்


வான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்


திசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்


வலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்



நீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்


காதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி



பெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்


பெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்


பெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்


பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்



பாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்


சாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்


நீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்


காதலி நீ என் பெண்ணே காதலன் ...



*********************************





துரோகப்பறவை

குளிர்ந்த விடியலின் தேநீர் போல
பருகுகிறேன் எல்லோருக்குமான
துரோகத்தை. பகலின் வெம்பிய
வெயில் கிளையில்
துரோகப் பறவையென அமர்ந்த
என்னை பார்க்காதீர்கள்
என் திசை குரோதத்தின்
முடிவிலி. கனவுகளின் வழி
நுழையும் ஒன்றுமற்ற கற்றைமுடிகொத்து
வாசம் நான். விலகிக்கொல்லுங்கள்
என்னை அல்லது ஊளை கேட்டு
பிரகாசிக்கும் நிலவுக்கிரணம்
ஒன்றால் உங்களை சிதைத்துக்கொள்ளுங்கள்

நினைவுபடுத்துங்கள் நான்
ரணத்தை மொய்க்கும் நிணம் தோய்ந்த
ஈ என்பதை. கணந்தோறும் என் நாவு
குருதி நக்குகிறது உங்கள் வாழ்வெனும்
கையால் விரட்டி அடியுங்கள் என்னை
கவனம் ரணத்தின் மேல் பட்டு
விடக்கூடாது உங்கள் வாழ்வு.

ஒரு தேநீர் வேளையுடன்முடிந்து
போகும் சிறு ஏப்பம் நான். தாபமெனும்
மருந்துருண்டை தின்று ஜீரணித்து
விடுங்கள் என்னை. கழிவாக்கி
என்னை கொட்டிநிரப்ப இப்பிரபஞ்சம்
போதாதெனும் போது நீங்கள்
ஒரு குழந்தைக்கு குப்பைதொட்டி ஒன்றை
பரிசளியுங்கள்

பின்
எனது முன்பற்கள் தெரிய சிரிப்பதை
பார்க்காது போய் விடுங்கள்
பறந்து பறந்து ....

24 October, 2010

17 October, 2010

வானவில்வண்ண மின்னல் 5

அறிமுகமில்லாத ஆண்<> ஆண் நீங்கள் சொல்வது போல "நான் இன்னார் உங்களுடம் பேச விரும்புகிறேன் "என்று பேச தொடங்க இங்கே வாய்ப்பிருக்கிறதா என்றால் தெரியவில்லை அல்லது சந்தேகமே .. ஆண் டு ஆண் பேசத் தொடங்கவே ஏதோ ஒரு காரணி தேவை படுகிறது, பேருந்து நிறுத்தத்தில் இப்படியகத்ன் தொடங்கலாம் . " இந்த பஸ் எத்தன மணிக்கு வரும்ண்ணே".. ரயில் பெட்டியுனுள் வேறு வழியின்றி போழுதுதை கழித்து தொலைப்பதற்காக "எங்கே போறீங்க ? எத்தனமணிக்கு ட்ரெயின் போய் சேரும் ? போன்ற மொக்கையான உரையடலகளிலேயே துவக்க வேண்டிய கட்டாயம். முற்றிய தேங்காயை பட்டென்று உடைப்பது போன்று நீங்கள் சொல்லும் "நான் இன்னார் பேச விரும்புகிறேன் ".. முடியாது .. ஒரு ஆணுக்கு ஆணே " குழம்பி விடவும் , நிராகரிக்கவும், பயந்து ஒதுங்கவும் வாய்ப்பிருக்கிறது.. ..
ஒன்னே ஒன்னு சொல்றே ண்ணா . இந்த முறை ஊருக்கு வந்துதுட்டு திரும்பும் போது ஏர்போர்ட்ல போடிங் முடிச்சுட்டு கேட் ஒபென்க்காக நின்னுட்டு இருந்த போது ஒரு நடிகை ..இப்போ பல படங்கள்ல ஹீரோக்கு அம்மாவா நடிக்கிறவங்க . கேட் ஓபன் ஆகி ப்ளைட்டுக்கு போறதுக்கு பஸ்ல ஏறி உகார்ந்த போது என் பக்கத்துல அவுங்க " சௌகரியமா மேம் , மலேசியால ஏதும் சூட்டிங் போறீங்களா ? அங்கேருந்து வந்த பதில் மேலும் கீழுமான தலையாட்டல் ஒன்று. பல் தெரியாமல் இடவலப்பக்கங்கள் உதடுகளை இழுத்தார் போன்று சிரிப்பு ஒன்று ( நாம அத சிரிப்புன்னு ஒத்துகிட்டுதான் ஆகணும்) -
தம்பி பாலமுருகனின் பின்னூட்டமிது. நன்றி. நான் தொடங்கிய விஷயத்தை நேரடியாக புரிந்து கொண்டு தனது கருத்தை சொல்லியிருக்கிறார். ஆணுக்கு ஆணே கஷ்டம் பின்ன எப்படி ஆணுக்கும் பொண்ணுக்கும்? இன்னும் தெளிவாய் ஜெகநாதன் எழுதியிருக்கிறார். அவருக்கும் நன்றி.

கொற்றவை: //மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான்.// - மனிதர் ??

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை,// - முரண்
Time is Precious Maki..தொடருங்கள், வாழ்த்துக்கள்.


மனிதர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். முடிந்த மட்டும் மனிதனை தவிர்க்க முயல்கிறேன். மேற்சொன்ன வரிகளில் உங்களுக்கு என்ன முரணாக தெரிகிறது என்பது எனக்கு புரியவில்லை. பொன்னான நேரத்தை காரணம் காட்டி வாழ்த்து சொல்லி விலகிவிட்டீர்கள். நன்றி.

வசு : குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் மகி. கலைக்கு வர்க்க பேதம் இல்லை என்ற உங்களின் கண்டுபிடிப்பு மெச்சத்தக்கது.ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை....என்ன மகி...இது உங்களுக்கே வெளிச்சம்.
குழப்பத்தில் இருப்பது தவறான நிலை அல்ல என்பது நாம் அறிந்ததுதான்.கலை என்கிற ஒரு நிகழ்வை பொதுமைபடுத்தி அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறேன். வர்க்கங்கள் தங்களுக்கு உண்டான வெளியையும் உபகரணங்களையும் கொண்டு இயங்கும்போது கலை அடையும் வித்தியாசங்களை நான் குறிப்பிடவில்லை. //ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை// இது மார்க்சின் இறுதிதேவையை நான் புரிந்துகொண்ட விதம். ஒட்டுமொத்த சுதந்திர மற்றும் தேவைக்கேற்ற ஊதியம் என்கிற முடிவு நிலை நோக்கிய அறிவுப்பயணம் என்பதை நான் சுட்டுகிறேன்.

தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

இதை தயை கூர்ந்து விளக்கவும்.


தனிமனித மனம் சாத்தியமற்று போய்விட்டது என்பதும் கூட்டு அல்லது தொகுப்பு மனமே சமுதாய நிலை ஆகிவிட்டது என்பதும் மார்க்சிய சிந்தனை என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டுள்ளேன். தனிமனித சாத்தியமற்ற சமூகத்தில் ஒரு தனிமனம் சமுதாய பொறுப்புணர்வை எங்கனம் உருவகிக்கும் என்பது எனது கேள்வி. புரிதல் தவறென்றால் விளக்கலாம்.

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, இதுதான் மகி பாஸிசம். //

இது பாசிசமாக இருக்க சாத்தியமில்லை. நான் சொல்வது எளிய விளக்கம். பசித்தவனுக்கு உடனடி தேவை உணவு. அவனுக்கு அந்த நேரத்தில் உணவு கிடைக்க சமூகத்துள் என்ன செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. அவன் கலை என்பதை நிகழ்த்திக்காட்டி உணவு தேட முடியுமென்றால் அதுதான் நகைமுரண்.

//எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // மகி...please.... //தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்! //
ஒரு கொலை,கொள்ளை, கற்பழிப்பு செய்து விட்டு கவிதை எழுதினால் போச்சு...வேறென்ன....நல்ல புரிதல். //


என்ன சொல்ல வருகிறாய் வசு, கொலை கொள்ளை என்பது பணத்துக்காகவே என்பது தவிர்த்து அனைத்து கொலைகளும் கொள்ளைகளும் இன்ன பிற குற்றங்களும் உளவியல் சிக்கல் கொண்டவை என்பதை அறியாதவனல்ல நீ. கலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை இதன் நீட்சியில் ஒரு விவாதமாக்க விரும்புகிறேன். கொலையும் தற்கொலையும் கலையின் அப்பட்ட முடிவாய் இருப்பதை பல சந்தர்பங்களின் நாம் கண்டுணர்ந்திருக்கிறோம்.கற்பழிப்பு என்பது உடல் மீதான ஆகக்கடுமையான வன்முறை மட்டுமே மாறாக இருக்கிற ஒன்றை அழிக்கும் செயல் அல்ல என்று தோன்றுகிறது. 'வன்புணர்ச்சி' என்பது சரியான சொல். அதற்கும் நமக்கு, 'சமுதாய உளவியலின்' பங்கு என்ன என்பதை பற்றி விவாதிக்க தேவை இருக்கிறது. உன் பார்வை என்ன சொல்.. சமுதாயத்தில் இன்றைக்கு தனிமனித மனம் சாத்தியமானால் அது எங்கனம் இருக்கும் தன்னை அது எவ்வாறு வெளிபடுத்திக்கொள்ளும்? இதை வசு மட்டுமே பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. படிப்பவர்களும் எழுதலாம்.
*************
தொடருங்கள்...

*********************

05 October, 2010

வானவில்வண்ண மின்னல் 4

கொற்றவை: // படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பலாம் என்றிருக்கிறேன். எந்த உற்பத்தியும் / படைப்பும் மனிதர்களின் பயன்பாட்டுக்கு அவசியம் என்று கருதலாமா? அதுவல்லாத ஒன்று விரயமில்லையா? மேன்மைக் கலை, பொழுதுபோக்கு படைப்பு என்பதெல்லாம் யார், யாருக்காக தோற்றுவைத்தது? பணம் படைத்தவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு, மேன்மை ரசனை என்றவையெல்லாம் வள்ர்த்துக்கொள்ள சூழலும், பொருளாதாரமும் இருக்கிறது. பசியில் வாடுபவனுக்கு? பாட்டாளிக்கு? தொழிலாளிக்கு? சமூக புரட்சிகளுக்கு வித்திட்டு, நிலவும் சமச்சீரற்ற பொருளாதார சூழலை சரியாக சுட்டிக்காட்டியும், மாற்றுவழிகளை முன்னிறுத்தியும் சமுதாயப் பொறுப்புணர்வோடு சிந்தனையாளர்கள் பல்வித நெருக்கடிகளுக்கிடையே (உணவுக் கூட கிடைக்காமல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கையாண்ட ஊடகம் படைப்பு/இலக்கியம்/எழுத்தென்பதாக கருதலாமா? அத்துறையை பொழுதுபோக்கிற்கும், networking ற்காகவும், அறிவைப் பறைசாற்றிக்கொள்ளவும், மொழி ஜாலங்களைக் காட்டிக் கவரவும் பயன்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்? வசீகர எழுத்தின்மூலம் கூட்டங்களை சேர்க்க நிறையப்பேர் எழுதுகிறார்கள்...அவைகளின் சமுதாயப் பயன் என்ன? கவிதை என்பதைக் கூட வெறும் மொழியியல் /அழகியல் tool ஆக கருதாமல், அதிலும் சமுதாயப் பிரச்சனைகளை எழுதியவர்களின் நோக்கம் / தேவை என்னவாக இருக்கும்? – what is the demand for creation?Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? எல்லாவற்றிலும் அறிவைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு இலைக்கியப் படைப்பு என்று நம்பி blog இல் Just like that எழுதப்படும் விஷயங்களை / கவிதைகளைப் படிப்பது நேர விரையம் ஆகாதா, அவர் ஏமாற்றத்திற்கு ’சும்மா எழுத்துக்கள்’ என்ன பதில் தரும்? //

மனிதப் பயன்பாட்டிற்கு உதவாத எதுவும் அழித்தொழிக்கப்படும் என்பதே வரலாறாக இருக்கிறது. எனவே படைப்பும் உற்பத்தியும் பயனில்லை என்றால் குப்பைக்கூடையில் கூட அதற்கு இடமில்லை. ஒன்றை நான் நம்புகிறேன். கலை என்பது படைப்பூக்கத்தின் விளைபொருள், அது படைப்பாளிக்கே உரியது. அதில் வர்க்கம் என்பது இல்லை என்பது என் நிலை. முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் பசியோடிருப்பவன் உணவை குப்பையில் போடுபவன் என்கிற மொத்த நிகழ்வுப்போக்குக்கும் கலைக்கும் இருக்கும் இடைவெளியை நான் படைப்பாற்றல் எனக்கொள்கிறேன். கலை மனிதனுக்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை வழங்குவதாக படுகிறது. சமூகஅறிவியல் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளை தடங்கலின்றி கிடைக்க வழிவகை செய்யும் நோக்கோடு செயல்படுகிறது. எனவே கலை 'படைப்பு' பற்றியதாய் இருக்கிறது சமூகஅறிவியல் 'உற்பத்தி' பற்றியதாய் இருக்கிறது. இங்கு நான் 'மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான். இங்கு நீங்கள் குறிப்பிடும் சமுதாயப் பொறுப்புணர்வு என்றால் என்ன? தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம். சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, அதை செய்வது சமூகஅறிவியல். ஆனால் கலை என்பது எதிர்காலத்தேவை. படைப்பு வரலாறையும் 'இன்றை' யும் நாளைக்கு கடத்தும் ஒரு இருப்பு. எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? // ஆம். இந்த வெளியில் ஒரு கலையைப் படைக்கமுடியாது என்பதே என் நிலை. ஆனால் இதில் சமூகஅறிவியல் பேசி விழிப்புணர்வுக்கு வழிகோலலாம். ஒருவர் சும்மா ஏதாவது எழுதட்டும். அதுதான் ஆரம்பம். அவர் வாழ்வில் ஒரு கணமேனும் அந்த விழிப்புணர்வுப் புள்ளி அவர் பார்வைக்கு கிடைத்துவிடும். அதுதான் எனது நம்பிக்கை. இதுகாறுமான அறிவுஜீவிகளுக்குமான நம்பிக்கை! // what is the demand for creation?// இது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கேள்வி. அதன் விடையும் அவ்வாறானதே.

****************************

//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை// - இந்தக்கூற்று, தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது... தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்? நாம் வாழ்வது கூட்டுச் சமுகம் 'everything will be imbibed' இங்கு சவால் என்னவென்றால் நாம் கற்றுக்கொண்டவையும், நடைமுறைப்படுத்துவனவும் எவ்வித அரசியல், பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து நமக்கு தரப்பட்டது என்று கண்டுணர்வது. அப்பொழுது நாம் நமக்கான பார்வை என்பதை வகுத்துக்கொள்ள முடியும் என்று நிணைக்கிறேன். "We are all Social Animals". ஒரு பிரச்சனையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஏன் தனிமனிதத் தேவை என்பதை விட சமூகப் பார்வையை கணக்கிலெடுக்கிறது? இன்று ஒரு தனி மனிதன் செய்யும் செயல், நாளை ஒரு குழு செய்யும், பின்பு பெருங்கூட்டம் அதைத் தொடரும்...அது வழக்கமாக மாறி..பின்பு கருத்தாக மாறி, விதியாக மாறி போய்க்கொண்டேயிருக்கும்...இல்லையா?//

//தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது// அதுதான் நோக்கமே.. தோன்றுகிற கேள்விகளிலிருந்து இணைக்கலாம் என்பது என் எண்ணம். முயலலாம். அந்த வாக்கியங்களை இணைக்க முடியுமாவென பாருங்கள்.

//தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்!

t***************************** தொடருங்கள்.

02 October, 2010

புள்ளி வனம்


ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

மொத்தமாய் என்னை உதிர்கிறது

ஒரு பன்னீர் மரத்தின்

பால்வெண்மை பூ வாசம்

போல. நெகிழ்வினை இழக்கும்

அலைகளில் இருந்து வெளியேறும்

காற்றென திசைகளை குருடாக்குகிறது

சங்கொலி தேங்கும் தீநடனமொத்த

உன் உடல் மொழி. வறள்நாக்கின்

நுனிவீழ்கிறதுன் ஒற்றைத்துளி அமிலம்.

பூக்கிறது சாக்காடு உடலிதழாய்

ஒவ்வொரு இதழிலும் மகரந்தம்

சேகரிக்கிறது உயிர்வாசம். துகள்

துகளாய் இளகுகிறது எல்லாம்

ஒரு இனிய தழுவலில் முற்றும்

தொலைக்கிற என் ஆண்மையை தேடி

என் வெண்புள்ளி ஆணவம் கதறி

அலைகிறது. இல்லாத வானத்தில் நீலம்

போலவே இல்லாத ஆண்மைக்கு

ஆணவம் எனக் கெக்களிக்கிறதுன் அன்பு.

நீலம் பாரிக்கிறது உயிர். உன் ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

நட்சத்திரங்களை விழுங்குமொரு

கருந்துளை போல.

***************************

01 October, 2010

வானவில்வண்ண மின்னல் 3

ஆண் பெண் நட்பின் தேவையும் நோக்கத்தையும் விளக்கியதும் அதன் தத்துவத்திற்கு செல்லலாம் என்கிறான் வசு. நல்லது. ஆனால் நான் அறிமுகமற்றவர்களின் புதிய தொடர்பில் உள்ள நடைமுறைச்சிக்கலை பற்றி தொடங்கியிருக்கிறேன். இந்த உரையாடல் ஆண் பெண் நட்பை பற்றி மாறும்போது அவ்வகையான தேவையையும் நோக்கத்தையும் விவாதமாக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு எளிய நடைமுறை சிக்கலில் இருந்து வலுவான உளவியல் பிரச்னைக்கு இட்டு செல்லும் எண்ணமே இதுபற்றி நான் எழுதும்போது நினைத்தது. அது அவ்வாறே ஆகுக. மேலும் இதில் தத்துவத்தை உடனடியாக உள்நுழைக்க தேவையில்லை வசு. சிக்கல் என்னவென்றால், ஒரு ஆணோ பெண்ணோ நேரடியாக ஒரு அறிமுகமில்லாத நபரிடம் நட்பு பாராட்ட எத்தனை தூரம் வாய்ப்பு இருக்கிறது?

// இவர் குறிப்பிட்டிருக்கும் வானவில் நிகழ்சியில் நட்பின் தேவையா தெரிகிறது. ஆணின் பாலியல் பார்வை தான் தெரிகிறது. பெண்களுக்கு தங்கள் அழகு / தோற்றம் சார்ந்து கிடைக்கும் அறிமுகம் / அங்கீகாரம் என்பது இருப்புநிலையை உயர்த்தும் ஓர் விஷயமாக ஆண்கள் தோற்றுவித்திருக்கிறார்கள். அதுவே பெண்களின் உடனடி ரெஸ்பாண்சிற்கு காரணம்... பார்க்கும் பெண்களிடமெல்லாம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள துடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அதற்கு நட்பு ஆசை என்று கூற முடியாது //

கொற்றவை சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். அதில் அறிமுக விசயத்தில் பார்க்க இயலாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் நட்பு அல்லது ஆசை என்று ஏதாவது தோன்றினால் அது எவ்வழியில் குற்றமாகிவிடும்? ஆனால் ஆணின் மனது இங்கு நீங்கள் சொல்லியவாறே மோல்ட் செய்யப்பட்டிருகிறது. பெண்களின் உடனடி ரெஸ்பான்ஸ் என்று நீங்கள் எதை குறிப்பிட்டீர்களோ அதைத்தான் நான் பாதுகாப்பு உணர்வு என்று சொல்லுகிறேன். இதில் ஆணாதிக்க தொனி என்னிடமிருந்து வரவில்லை என்பதை பதிவு செய்கிறேன். ஆனால் நான் எழுதிய அந்த வாக்கியத்திற்கு அப்படியும் அர்த்தம் கொள்ளலாம் என்கிற போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. நல்லது. உங்களிடமும் அதே கேள்விதான். புதிய நபர்களை காரணமும் சூழலும் இல்லாமல் அறிமுகம் செய்து நட்பு பாராட்ட இங்கே வகை இருக்கிறதா? அப்புறம் வசுபாரதி என்றே மூளையில் பதிவு. மாற்ற வேண்டாமே. தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லையே? நன்றி.
பத்மா.. நீங்கள் என்னை குழப்புகிறீர்கள். நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற போது ஒரு ஆண் உங்களிடம் வந்து உங்களிடம் பேசவேண்டும் போலிருக்கிறது .. காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாமா என்று கேட்டால் உங்கள் மனநிலை என்ன. எனது மனைவி அந்த மாதிரி எங்கிட்ட பேசுனா அடிவிழும் என்கிறார். இதுதான் பொதுபுத்திக்கு நல்ல உதாரணமாக நினைக்கிறேன். (அப்படி நிஜத்தில் அடிக்கமுடியாது என்பதும் வேறு விவாத பொருள்).
அப்படி என்றால் நான் எந்த யுகத்தில் இருக்கிறேன். அப்படி ஒன்றும் மேற்கத்திய நேர்மறையான கலாச்சாரம் என்கண்ணில் படவில்லையே. நீங்கள் கேள்விபட்டிருந்தால் சொல்லி உதவுங்கள்.

//பல விதமான exploitation நிலவுகிற இந்தக் கணினி யுகத்தில் அறிமுகமில்லாத ஆணிடம் பெண் கொள்ளவேண்டியது எச்சரிக்கை, நட்பல்ல.. இத்தொடர்புகள் நல்ல நட்பில் முடிய வாய்ப்புகள் குறைவு. // கொற்றவையின் கூற்றில் எனக்கும் சம்பந்தம் தான். எச்சரிக்கை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனது கேள்வி. இங்கே எச்சரிக்கைக்கும் பாதுகாப்பு உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

அதுசரி நான் நீலத்தில் வண்ணமாக்கியிருந்த ஒரு கூற்றைப்பற்றி என்ன நினைக்கிறாய் வசுபாரதி?

.................................................................. தொடருங்கள் ...

பேதங்கள்

பறக்கும் ரயில் திட்டம். சென்னை வடபழனி நூறடி சாலையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டோவிற்கு நூறு வருட தெம்பிருந்தால் சுவாரஷ்யமான பதிவாய்இருக்கும். இந்த வருடம் செப்டம்பர் இருபத்தி எட்டாம் தேதி எனது மொபைல் போன்மூலம் எடுத்த படம். மாட்டுவண்டி இதன் தனிச்சிறப்பு.



************************************
பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு - மகாபாரதம். இது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரத்த சரித்திரம் என்கிற படத்திற்கான பிடி வாக்கியம். சென்னை நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஷ்டர்களில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகம் ஒரு மட்டமான இசை வடிவம் எனக்கொண்டால் காமமும் குரோதமும் அதன் இரண்டே ஸ்வரங்கள். இந்த இரண்டு ஸ்வரங்களை கொண்டு இவர்கள் ஏற்படுத்தும் ராகங்கள் எல்லாம் - ஒன்று விடாமல் - ஸ்ருதி பேதங்கள். இதில் எந்திரன் ஒரு இரும்பு மகுடம். NDTV யில் கூட செய்தியாகச்சொல்கிரார்கள். வாழ்க நம் தமிழ் பேசும் மனிதர்கள்.
****************************
இரண்டாவது நாள் இன்று. எனக்கு சென்னைக் கண் நோய். கண்களில் மிளகாய் துகள் தூவியது போன்ற துயர். எனது புகைப்படத்தில் போட்டிருக்கும் கண்ணாடிக்கு இதுதான் காரணம். மற்றபடி நான் பந்தா எல்லாம் செய்வதில்லை! ஒரிஜினல் போட்டோ எனது புகைப்படத்தளத்தில் உள்ளது.
******************************

30 September, 2010

வானவில்வண்ண மின்னல் 2


ரமேஷும் பத்மாவும் ஒரே கேள்வி கேட்டிருக்கிறார்கள். நல்லது. அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் ஆணும் அறிமுகமாவதற்கு ஒரு சூழல் தேவை. குறைந்த பட்ச நேரம் தேவை. உதாரணத்திற்கு நான் திருச்சியில் காலை ஏழு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன். ஒரு பையுடன் ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடன் பேசவேண்டிய எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. நேராக போய் உங்களிடம் பேச வேண்டும் .. ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா.. என்று சாதரணமாக கேட்கக்கூடிய சூழல் இங்கு இருக்கிறதா. இந்த சூழல் தேவையா என்பது வேறு விஷயம். ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இப்படி அறிமுகமில்லாத இடத்தில் அறிமுகமில்லாத நபரிடம் பேச முடிகிறதா.. அப்படி முடிந்தால், அந்த நபரின் எண்ணவோட்டம் எவ்வாறு இருக்கும்? ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசினால்.. அந்த பெண் ஒரு பாதுகாப்பு உணர்வை அடைவது இயல்புதானே. புதிய ஆண் என்பவன் ஒரு பெண்ணுக்கு சற்றும் பாதுகாப்பில்லாதவன். அதே போல ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசினால் அந்த ஆணுக்கு அந்த பெண் மீது ஏற்படும் கண்ணோட்டம் இயல்பாகவே தவறாக இருக்கும். முதற்பார்வையில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதைத்தான் நான் சாத்தியமில்லை என்று கூறுகிறேன். ஒரு மூன்றாம் நபர் அல்லது செயல் என்பது இல்லாமல் நேரடி அறிமுக சாத்தியக்கூறு இல்லை என்றுதான் சொல்லவந்தேன். மேடம் இந்த கம்பெனியில் இருந்து வரேன்..இந்த பொருள் வாங்கிக்கொள்ள விருப்பமா.. என்கிற பொது செயல் ஒன்று தேவைப்படுகிறது.



நேரடியாக சென்று 'நான் மகேந்திரன், உங்களிடம் பேச வேண்டும்' என்று சொன்னால் அந்த பெண் போலீசுக்கு போய்விட வாய்ப்பு அதிகம். அப்படி பேசுவதற்கான மனநிலை ஆண்களுக்கு எதனை சதம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குடித்து விட்டு அலையும் ஆண்கள் தனி. காதலுக்கு topogrphy முக்கியம். வாழும் சூழல். ஒரு ஆணும் பெண்ணும் அறிமுகமில்லை என்றாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அது செயற்கையாக கூட இருக்கலாம். ஒரு நாள் ஒரு பெண்ணை பார்த்தால்.. மீண்டும் அந்த பெண்ணை திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பை அவன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முதல் விதி. அல்லது அவன் விதி!



காதலை விடுங்கள். நட்பு? பத்மாவும் ரமேஷும் போல எனக்கும் 'அதெப்படி' என்று தோன்றியது. ஆனாலும் ஆண் பெண் நட்புக்கு திடமான ஒரு காரணி இருக்கவேண்டும். இல்லையென்றால் முடியாது. புது ஆணை ஒரு பெண் நிராகரிப்பது மட்டுமே இயல்பு. மனதளவில் அவனை பிடித்திருந்தாலும் அறிமுகத்திலேயே அவளது மனநிலையை சொல்லிவிட மாட்டாள். ஏனென்றால் அது முடியாது. சமூகம் அப்படித்தான் இருக்கிறது. ஒரே விஷயத்தை மூன்று பாராக்களில் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறேன்!

பத்துவும் ரமேஷும் தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலம் இதை ஒரு உரையாடலாக்க விரும்புகிறேன்.

*************************

ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை. - இப்படி ஒவ்வொன்றுக்கும் முரண்பாடான வாக்கியங்களின் நேரடி தொடர்புபற்றி இதில் விளக்க முயல்கிறேன். தொடர்ந்து கேள்விகள் கேட்டால் கோர்வையாக இந்த விவாதத்தை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கு. பத்மா,ரமேஷ், வசுபாரதி, கௌசல்யா,கொற்றவை, சுரேஷ் ஆகியவர்களிடம் கேள்விகளை எதிர்பார்க்கிறேன். தம்பிகள் பாலாவையும் பாலாசியையும் வரவேற்கிறேன்.

***************************************************

27 September, 2010

வானவில் வண்ண மின்னல் 1

ஒரு உரையாடலை கவனித்தேன். நெல்லை விரைவு ரயிலில். காலை ஆறு மணிக்கு. ஆணுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். பெண்ணுக்கு இருபதுகள். அவன் ராணுவத்தில் இருக்கலாம். அந்த பெண் தகவல் தொழில்நுட்பம். ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த பெண் எதையும் கவனிக்காமல் ஜன்னல் வழி தூரலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளின் கவனஈர்ப்பை எப்பாடு பட்டாவது பெற்றுவிடவேண்டும். லேசான உடல் நடுக்கம் தெரிந்தது அவனிடம்.
நான் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவழியாக ஆரம்பித்தான் பேசுவதற்கு.

"மேடம், உங்க செல்ல கொடுங்க ஒரு நிமிஷம்..."
"எதுக்கு.."
"ஒரு கால் பண்ணிக்கிறேன்.. ப்ளீஸ்.."
"நீங்களே ரெண்டு மூணு செல் வெச்சிருக்கீங்க.. எங்கிட்ட கேக்கிறீங்க.."
"அவுட் கோயிங் இல்ல.. அதான்.. ஹி.. ஹி.."

மொபைலை எடுத்து பார்த்தால் அதில் டவர் இல்லை.
"டவர் இல்லை.." என்கிறாள். நம்பாமல் பார்க்கிறான்.
"ஐயோ சத்தியமா டவர் இல்லை.."

ஐந்து நிமிட மௌனம். வண்டி செங்கல்பட்டை கடக்கிறது.

"என் பெயர் சரவணன்.. ஏர்போர்ஸ்.. உங்க பேரு.."
"சிவகாமி.. "
"என்ன பண்றீங்க.."
"வொர்க்"
"அதான் என்ன வொர்க்.."
"IT கம்பெனி.."
"எங்க.. "
"வேளச்சேரி.. "

மீண்டும் பத்து நிமிட மௌனம்.

"எந்த கம்பெனி.."
"சொலாரிஸ்.."
"சொலாரிஸ் தானா.."
"அது என்ன சொலாரிஸ் தானா..!?"
"இல்ல இல்ல அங்க என்னோட ரெண்டு பிரெண்ட்ஸ் வொர்க் பண்றாங்க.. இப்போ ஸ்டேட்ஸ் ல இருக்காங்க..எந்த காலேஜ்.. ?"
"ஈரோட்.... ட்ரிப்பில் ஈ.."

சில நிமிட மௌனம்.

"ஜன்னல் வழியா திரும்பி பாருங்க.. வானவில்.."

திரும்பிப் பார்க்கிறாள். அழகான வானவில். நிசமாகவே ரசிக்கத் தொடங்கி விட்டாள்.

"கேட் வாசலில் நின்று பார்த்தால் முழுசா தெரியும்.. "
"இல்ல பாதிதான் விழுந்திருக்கு.."
"உங்க மொபைல் நம்பரை தர முடியுமா.."
"எதுக்கு.. "
"பேசுறதுக்குத்தான்.. வேறெதுக்கு கேப்பாங்க.."
"தேவையில்ல.. "
"மொபைல கேட்டவுடனே தந்திட்டீங்களே.. என்னோட நம்பருக்குத்தான் அடிச்சேன்.. உங்களோட நம்பர் எனக்குத்தெரியும்.. "
"பாக்குறதுக்கு டீசன்ட்டா இருக்கீங்க.. நீ அப்படி பண்ண மாட்டீங்கன்னு நெனெச்சேன்.."
"என்னோட நம்பர் உங்க மொபைல் ல இருக்கு.. கண்டிப்பா பேசுங்க.."

மழையில் குடையை பிடித்தவாறு தாம்பரத்தில் இறங்கி சென்றுவிட்டாள். அவனும் இறங்கி மழையில் சந்தோசமாக நனைந்தபடி சென்றுவிட்டான். அவனைப்பார்த்து அவள் பாந்தமான புன்சிரித்ததுவே அவனது சந்தோசத்திற்கு காரணம்.

கேள்வி:
அறிமுகமில்லாத பெண்ணும் ஆணும் அவர்களுக்குள்ளே அறிமுகப்பட்டு நட்பு பாராட்டுவது நடைமுறையில் சாத்தியமா?
பதில்:
ஏறக்குறைய இல்லை.

பெண்ணின் அடிப்படை சுதந்திரத்தில் ஒரு ஆனால் மிகச்சுலபமாக நுழையமுடிகிறது என்று கொள்வோமானால் men are men. brutals. ஆண்கள் காமத்திலிருந்து தொடங்கி காமத்தில் போய் முடிக்க விரும்பும் அறிவிலிகள் மட்டும்தானா? இல்லை என்று எந்த ஆணாவது நிரூபியுங்கள்! அறிமுகமில்லாத பெண்ணிடம் ஒரு காபி சாப்பிட கூப்பிடும் செயல் என்பது சரியா? அந்த பெண்ணிற்கு வானவில் என்று பெயர் வைத்து நானொரு கவிதை எழுதியதை அவளிடம் சொல்லாமல் நான் வந்தது சரியா?

...... தொடர்கிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

25 September, 2010

குறுந்தொகை 4

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே

ஒல்வா ளல்லலென் றவரிகழ்ந் தனரே

ஆயிடை. இருபே ராண்மை செய்த பூசல்

நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

...................................................................................... குறுந்தொகை - அவ்வை - பாலை.

இப்பாடல் என்னைப்பொருத்தவரையில் மிகமிக முக்கியமானது. இதில் "ஆளுமை" ( personality) என்கிற பதத்தில் ஆண்மை என்கிற சொல்லை உபயோகித்திருப்பார் அவ்வை. மேலும் அக்காலத்திய புதுக்கவிதை இதுவென்று அறுதியிடலாம். அவ்வையின் மற்ற கவிதைகளைப் போலவே இதுவும் புரட்சிகரமானதே. (நண்பர்களே.. சங்கத்தில் பல அவ்வைகள் இருந்திருக்கி-றார்களென அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.)

பிரியமாட்டானென நினைத்தேன்

பிரிவதை சொன்னால்

தாங்கமாட்டாளென

நினைத்து சென்று

விட்டான் சொல்லாமல்.

நல்ல பாம்பு கடித்தது போல

அலமலக்கிறது மனம்

அவ்வேளையில்

இரண்டு ஆளுமைகளும் செய்த

பூசல் நினைத்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *