30 December, 2009

குடிப்பதில்லை..


*************
வாழ்க்கையில் வெற்றிபெற சரியான வழி 'இல்லை' என்கிற சொல்லில் இருக்கிறது. நிறைய நேரம் தூங்குகிறாயா. நிறைய செலவுசெய்கிறாயா. நிறைய நண்பர்கள் இருக்கிறார்களா. குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா. சங்கீதம் பிடிக்குமா. இப்படி என்னளவில் இக்கேள்விகள் இருநூறைத்தொடுகின்றன. இவைகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றிபெறுவது சுலபம். இதைவிட வாழ்க்கையில் வெற்றிபெற மிகச்சிறந்த வழி இருக்கிறதா? இருக்கிறது. அது 'சரி' என்னும் சொல். ராத்திரிக்கு பூ வாங்கிக்கிட்டு வா. இன்னைக்கே விடுப்புல போகனுமா, அடுத்த மாசம் போலாமே. டாய்லெட் கிளீன் பண்ணனும். மேடம் கிட்ட போய் குடுத்திட்டு அவங்க கேக்குறத செஞ்சுகுடுத்துட்டு வாங்க. இதுக்கு நிறைய செலவாகுமே. இந்த வகையில் நாநூறைத்தொடுகின்றன எனதான வாக்கியங்கள். இவற்றிற்கெல்லாம் பதில் 'சரி' என்றிருந்தால் உங்கள் வெற்றியின் வேகம் இருமடங்கு!

இதில் சரி அல்லது இல்லை என்கிற சொல்லை தேர்ந்தெடுத்தவர்கள் தப்பித்தார்கள். நான் அப்படி இல்லை. அப்படியா, பாக்கலாம். ஏன் இப்படிசெஞ்சா என்ன? எனக்கு என்ன தலையெழுத்தா? அதப்பத்தி என்னக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. மறந்துட்டேன். நான் சொல்றத ஏன் யாரும் புருஞ்சுக்க மாடீங்கறீங்க. அப்படியா சொன்னேன். எனக்கு வேற வேலை இருக்கு. இப்படி எதுகெடுத்தாலும் பதில் சொன்னால் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெறுவது! இந்த பழக்கத்தால் எனக்கு புதியவர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதனால் நான் என் நண்பர்களிடம் படும் அவஸ்த்தை இருக்கிறதே. முடியல.

விடுங்க, என் கேள்வியே வேற, வாழ்க்கையில வெற்றி பெறுதல் என்றால் என்ன?

*******

ஹரிக்ரிஷ்ணன் அமைத்த கலை இலக்கிய விழாவுக்கு சென்றிருந்தேன். நல்லதங்காள் பாவைக்கூத்து என்கிற அற்புதம் பார்த்தேன். முழுதாக பார்க்கவியலாமல் நண்பர்களுடன் கூத்து வேறு. போன வருடம் கிடைத்த கள் கிடைக்கவில்லை.

******

வழக்கம் போல வருடப்பிறப்பு. இரண்டாயிரத்து பத்து. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். க சீ சிவக்குமாரின் வாழ்த்துப்பதிவு நன்றாக இருந்தது. இந்த வருடம் எனது தீர்மானம் குடிப்பதில்லை என்பது. தீர்மானம் வெற்றி பெற வாழ்த்துங்கள்.

*************

23 December, 2009

என்றொரு ஆதிப்பெண் 3

காமா..

நிதானம் இழக்கும் முன் ஒரு

புன்னகையை யாசிக்கும் தோள்நிமிர்

தகப்பன் நான். ஒருபோதும் அடங்காத குழழால்

காற்றை கலங்கடிக்கும் சிறுமியின்

குரூரம் நீ. கானகத்தீயில் வெந்துகருகும்

மூங்கில்களின் கவுச்சிவாசம் அது.

காமா..

என்பாதமறியா கானகம் நுழைகிறது

என்னுள் பிளவுண்ட கண்கள் வழியாக

நெருக்கிய காற்றை காணவில்லை என

கதறிவீழும் அருவியை உன்மத்தம்

ததும்ப குடித்து தீர்க்கிறேன். நீரின்

திசையில் நீளும் நாணலின் வேரை

பிடுங்க ஏலாத பேரச்சம் ஒன்றின்

இருள்மறைவில் காட்டுப் பூனையின்

கங்குவிழிகளாய் ஒளிர்கிறது அது..

காமா..

ஒற்றைப்புள்ளி நீ

அதன் இருள் நான்

காமா..

யார்கையிலும் கிட்டிவிடும் அந்தர அம்பு அது.

**************

மழையின் டிசம்பரில்..



பைத்தியக்கார மனநிலையிலிருந்தேன். வானம் தூவிக்கொண்டிருந்தது. புது ஊர். இதற்கு முன் சென்றதில்லை திருவாரூருக்கு. பேருந்து நிலையத்திற்கும் புகைவண்டி நிலையத்திற்கும் எத்தனைமுறை நடப்பது? மழையில் நனையும் மனநிலையை குளிர் போக்கிவிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை பகடி செய்தவிதமான திருவாரூர் பெரியகோவிலில் மனம் லயிக்கவில்லை. ஒழுங்காக யோசிக்க முடியவில்லை. மனம் விட்டேத்தியாக சோழநாட்டின் ஒருபகுதியில் திரியும் சம்சாரியெனகற்பனை செய்துகொண்டு கோவிலைவிட்டு வெளியேறி வரும்போது ஒருவர் ஏன் சாயரச்சை பாக்காமல் போறேள் என்றார். பதிலேதும் கூறாமல் சிரித்தவாறு வெளியேறினேன். அவருக்கு இரண்டு காரணங்களால் பதில் சொல்ல ஏலவில்லை. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை மற்றும் சாயரட்ச்சை என்றால் என்னவென்று தெரியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கு தொடங்கி இதே மனநிலை. திருவாரூர் பேருந்துநிலையம் முன்பாக வந்து நின்ற பொழுது விதி என்னைப்பார்த்து சிரித்தது. தைலம்மை திரையரங்கத்தில் வேட்டைக்காரன் போஸ்டர்!

நம்புங்கள் நண்பர்களே ஒரு பைத்தியக்கார மனநிலையை சரி செய்ய அந்தப்படம் பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது!

***************

அடுத்தவூரும் நான் முதன்முதலில் சென்றதுதான்: நாகப்பட்டினம். இந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணி பதினாலு நிமிடம். நாகூர் பத்தொன்பது நிமிடம். காரைக்கால் முப்பது நிமிடம். திருநள்ளாறு நாற்பத்துமூன்று நிமிடம். (ஆம்னி வேனில்). சுவாரஸ்யம் நாகப்பட்டினத்துக்கும் நாகூருக்கும் நடுவிலிருக்கும் மாநில எல்லை சோதனைச்சாவடி அருகில் நடந்தேறியது! சோதனைச்சாவடி தாண்டியதும் நான்கு புதுச்சேரி அரசு மதுக்கடைகள். பெரிது பெரிதாக... அடியேன் கண்களுக்கு பட்டது சற்று தூரம் தள்ளி தனித்து கைவிடப்பட்ட நிலையில் இயங்கி கொண்டிருந்த கள்ளுக்கடை! நடந்த சுவாரஸ்யங்கள் நண்பர்கள் யூகிக்கக்கூடியதுதான்!

******

சற்றும் எதிர்பாராத சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. "சார் எம்பேரு ஆர். பி. ராஜநாயஹம்.. உங்க பிளாக்ல என்னப்பத்தி எழுதியிருக்கிங்க.. எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என்னால் அவர்தான் பேசுகிறார் என்று நம்பமுடியவில்லை. அவரது மிருதுவான குரலால் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல மனிதர். அவருடனான எனது நட்பு எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் அன்பு.

*******





21 December, 2009

19 December, 2009

18 December, 2009

என்றொரு ஆதிப்பெண் 2


காமா..

சில பலாப்பழங்களின்
நிறங்கள் ஒரு எலுமிச்சையின் நிறமாய்
ஒத்திருப்பதை பற்றியும் ஒரு
காக்கையின் நிறமில்லாமல்
இருப்பதைப்பற்றியும் யோசிக்க
ஏலாதவான் நான்.

ஒற்றை எலுமிச்சையுடன்
குன்றேரும் என்முன் கண்மறைவில்
வெளிச்ச சாகசம் புரியும் நிலவுப்பாதை
முழுவதும் காற்று சொரியும் வாசனை நீ.

இம்முறை பத்மவியூகத்தில் எனக்கு
அளிக்கப்பட்டிருப்பது அரசிவேட்டை
எப்பொழுதும்போலவே வெளியேறதெரியாதவன்
நானொருவனே. வனப்பூக்களின் வாசனையில்
துளிர்க்கும் அரசியை காணப்புகும்
உள்ளுணர்வு அது.

காமா..

பின்னிரவின் களைப்பில்
பாறையிடுக்குகளில் நான் சாய்கையில்
வூதாக்கதிர்களின் துணை கொண்டு
என் கண் பிளக்கிறாள் அரசி

****************


16 December, 2009

இரண்டு புத்தகங்கள்

*********
இது ஐம்பதாவது பதிவு!
*********
மனங்கொத்தி பறவை
மூலைவீட்டுக் காம்பவுண்டின்
தொட்டத்துக்குள்ளிருந்து
வெட்டிப்போட்ட கொத்துச்
செடிகள் அழைக்கிறது
வியர்வை சொட்ட
நெடுந்தூரம் போய்விட்ட
அவன் பெயர் சொல்லி.
--------- அவனைப்போல ஒரு கவிதை - தொகுப்பில்
கீதாஞ்சலி பிரியதர்சினி .
சில அபாரமான மற்றும அ-பாரமான கவிதைகளை கொண்டிருக்கும் இப்புத்தகம் எனக்கு ஒரு இனிய வாசிப்பனுபவம்.
********
வாசகப்புலி வெளியேற விடாமல்தடுக்கும் மாய சர்க்கக்கூண்டுகள்:
ஆதியிலே சொல்லிருக்க அதிலிருந்து வெளியேருங்கதைகளில் புகுந்த மனிதமார்கள் பசியாற பெண்களையுண்டாக்கியதாலே கலவியின்பம் பெற்று கதைகள் பற்றி அறியவேண்டியதை மறந்து இல்லறம் கலந்ததினாலே சாமான்யனாகி குழந்தைகுட்டிகளை பெற்றுக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் விவசாயஞ்செய்து பிழைக்கத்தொடங்கியதாலே ஈரக்கதைகளெல்லாம் மழைக்குள் புகுகவெனவும் பாறைக்கதைகளெல்லாம் மலைக்குள் புகுகவெனவும் வசமான கதைகளெல்லாம் வானத்துள் புகுகவெனவும் மாயக் கதைகளெல்லாம் மருவி மண்ணுக்குள் புகுகவெனவும் யோகப்பெருந்தேவன் உலகுகாக்கும் உன்னதபுருசனின் சக்தியானவளாலே சாபம்பெற சக்திமனவாளன் தானுங்கெட்டு தனைச்சேர்ந்த மனிதமாரும் கெட கதைபற்றிஏதுமறியாமல் புழுத்துப்போனவர்கலானதாலே சம்சாரத்திலே உழன்று உயிர்கொழிக்கிறாரென்றும் மருண்டு புலம்பத்தொடங்கிய நாளிலே நாரதனாம் காலக்கண்ணன் கண்விழித்து உலகம்பூராவும் அழியும்படிக்கும் மனிதமாரின் புத்தி போச்சு.. கெட்ட பேய்களின் ஆட்டம் விஞ்சி போச்சு.. எல்லாத்தையும் ஒருவழி பண்னோனுமென கைலாயம் போய் கதற, பாத்தா சக்தி ... இதுனல்லதாப்படலைன்னு போயி புருசன்காரன்கிட்ட இந்தா நீ உடனே ஒருகாரியஞ்செய் சட்டுன்னு உன்சுக்கிலத்த காத்தாக்கி பூலோகத்துல துப்பிடு சொன்னதும் விஷயத்தை ஞானத்துலே அறிஞ்ச ஈசன் அவ சொன்ன மாதிரியே துப்ப வாயுக்கொளாறாலே மூனாஞ்ஜாமத்துக்கு மேலே முள்ளுகருவேலைக்குள்ள ஒதுங்குன பானா வெங்கடேசனுக்கு உச்சந்தலையில விழுக அவரும் தலையத்தொடச்சவாக்கில நமச்சிவாயான்னு ஒரு சொல்ல வெளியேத்த அந்த சொல்லு தாம்பேரு டிரிஷ்டாம்னு சொல்லிக்கிட்டு அவரோட வீட்டு விட்டத்துலே தொங்கிகிட்டு விடாம பேச தொடங்க வந்துச்சு வெங்கடேசனுக்கு தாண்டவரய்யன் கதை..
உலகமக்களே ஒன்றுகூடுங்கள் தாண்டவராயன் கதை படியுங்கள் . பெறுங்கள் இந்த ஜென்ம பலனை.
******

என்றொரு ஆதிப்பெண் - 1


காமா ....
மழைநீரின் ருசியறியா மணல்வனம்
நீ. பெருவெப்பத்தின் தகிப்பறியா நீரூற்று
நான். திசையறியா வெள்ளத்தின் உடைபொருள்
அது. ஒரு சங்கீதக்காரனின் வெயில்நாளின் மழையுடை
நீ. அடரிரவின் ஒளி உடைக்கும் தவளைச்சத்தம்
நான். திறந்தவுடன் கொட்டிவிடும் பெருமழை
அது. காய்ந்த நிலவில் மகரந்தம் தேடும் ஈக்களின் வாசம்
நீ. இரைக்கெனவூளையிடும் ஓநாயின் வேட்கை
நான். கொள்கலன் அற்று நிரம்பிவழியும் பேரமுதம்
அது.

காமா .....
சருகொலியின் பயப்பரப்பு நீ. சயனத்தில்
ககனத்தீ நான். அமைவிடத்தின் அடியாழம்
அது. ஸ்தூலத்தின் நெடுமருவி நீ. பொழிவிழந்த
காட்டெருதின் வகையறியா பெருங்கூவல்
நான். ஜாமத்தில் திரண்டிருக்கும் பொழிவெளுச்சம்
அது. தூமத்தின் கலி ஏற்றும் மாறன் நீ. மண்புழுதிக்காட்டில்
கலி கொள்ளும் தூறன் நான். விசும்பெல்லாம்
எழுந்தடங்கும் ஊழியோசை அது.

*******


13 December, 2009

விளம்பரம்

இருசக்கர வாகனங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வாசகம் சிலநேரங்களில் பல்வேறு அர்த்த தளத்தில் இயக்கம் கொள்ளும். இங்கு நான் தமிழக ஊடகங்களின் மூலம் நுகர்வுமக்களுக்காக ஒலி/ ஒளி பரப்பப்படும் விளம்பரங்களின் பின் இருக்கும் ஏமாற்று உத்தியை எவ்வாறு உள்வாங்கி கொள்கிறேன் என்கிறவிதமாய் ஒரு பதிவை முயற்சிக்கிறேன். எனக்கு தோன்றும் எண்ணங்களை சொல்வதால் என்னைப் பற்றிய கேவலமான ஒரு முடிவுக்கு நீங்கள் வரக்கூடும். மீறி பதிகிறேன் என்றால் இது எனக்கு மட்டுமே ஏற்பட்டதா அல்லது என்னைப்போலவே பலருமா என்று தெரிந்துகொள்ளவே.

அடிப்படையில் அனைத்து விளம்பரங்களும் பெண்களை கீழ்த்தரமாக உபயோகபடுத்துவதும், ஆழமாக பாலுணர்வுகளை நிரடிகொடுக்கும் தன்மையுமகவே உள்ளதென அறிகிறோம். மற்றொன்று விளம்பரங்களால் நாம் எமாற்றப்படுக்றோம்.(தெரிந்தே ஏமாறுகிறோம் அது நமது தவறுதான்..அவர்களை சொல்லி குற்றமில்லை என ஒரு பின்னூட்டம் எனக்கு கிடைத்தது.) அதுபோல அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை ஏன் பிரதானப்படுதுகிறார்கள் என்பதும் நமக்கு புரிந்துகொள்ள முடியும்.

முகபாவங்களில் புணர்வுச்சத்தின் தன்மைகளை கொண்டதாய்ப்படும் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் இருந்து தொடங்குவோம். நீங்கள் சென்னை நகரத்தில் சாலைகளின் நடுவே தொங்கவிடப்படும் பண்பலை வானொலிகளின் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஒரு Orgasm or Ejaculation பாவத்தை முகத்தில் காண்பிக்கும் படம் ஒவ்வொரு மின்சாரக்கம்பத்திலும் இருக்கும். வானொலி கேட்பதன் மூலமாக அவர்கள் நமக்கு பாலியல் உச்சத்தை அடையமுடியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இது போல லிரில் சோப் விளம்பரம். சோப்பை முகர்ந்து பார்த்து சிலிர்ப்படையும் ஈரம் சொட்டும் பெண். எலுமிச்சை வாசம் ஆண்மையின் படிமம்.

ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த டென்னிஸ் போட்டிகளின் விளம்பரத்தை யாருக்கேனும் நினைவிருக்குமாவென தெரியவில்லை, ஒரு ஆணின் ஒற்றைக்குரல். பந்தை அடிக்கும் போது வெளியேற்றப்படும் சத்தமென நாம் அதை எடுத்துக்கொள்ளவேண்டுமாம். மட்டையால் பந்தை அடிக்கும் ஒலி மறைக்கப்பட்டிருக்கும் . அவ்வொலி எதனைக்குறிக்கிறது ? பாலுணர்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டும் விதமான விளம்பரங்களை வரிசைப்படுத்திப்பார்த்தால் அறுபது சதவிளம்பரங்கள் சுலபமாக தேறுகிறது. மற்ற விளம்பரங்களில் அவற்றின் சொல்திரன் எனக்கு புரியாமல் இருக்கலாம்.! ஒரு சேட் தனது உயிலை வாசிக்கிறார். வாரிசுகள் மூச்சைப்பிடித்துக்கொண்டு கேட்டு கொண்ருக்கிறார்கள். சேட் தன் சுயபுத்தியுடன் சொத்தை தன் அழகான வேலைக்காரி சாந்தாபாய்க்கு எழுதிவைப்பதாக சொல்கிறார். வாரிசுகள் மூர்ச்சை அடைய மூத்த வாரிசு டேபிளில் இருக்கும் சோடாவை எடுத்துக் குடிக்கிறார். சில நொடிகளில் நாணிகொண்டு ஓரமாய் நின்றிருக்கும் வேலைக்காரிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பஞ்ச் டயலாக்: எங்கள் சோடாவை குடித்தால் அனைத்தும் மிருதுவாக உள்ளிறங்கும். ! கொஞ்ச நாளாக கோப்ரா சோடாவின் இவ்விளம்பரத்தை காணமுடியவில்லை.

விளம்பரங்களில் நம்பகத்தன்மை என்கிற ஒருவிசயமே அபத்தம் என்று நம்புகிற ஒரு தலைமுறை தொடங்கியாயிற்று. சமூக நாணயம் அற்ற இவ்விளம்பர உலகில் பொருளாதார நாணயம் மட்டும் சிலர் பைகளில் குவிகிறது. விளம்பரம் செய்ய விளம்பர உற்பத்தியாளர்களின் கற்பனை உச்சம் என்னைப் போன்றோரினை பெரும் அச்சத்திற்குள் தள்ளுகிறது. யாரைப்பற்றியும் அக்கரைப் படாமல் இருபது வினாடிக்குள் வீடுமனிதர்களை உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்க செய்வதிலும் கண்கலங்கவைப்பதிலும் நூறு சதம் வெற்றி காண்கிறார்கள். அமெரிக்காவுக்கு செல்ல ஸ்காலர்ஷிப் கிடைத்தும் மீதி பணத்திற்கான எண்ணக்கவலையுடன் வரும் மகளை தேற்றும் அப்பாஅழுதுகொண்டே புகுவீடு செல்லும் மகளை காதி விரல்கள் நுழைத்து விளையாட்டு காட்டும் அப்பா.. எத்தனைவகையான நெகிழ்வுக்காட்சிகள்! வார்த்தைகளின் அர்த்தங்களை படிமப்படுத்த எத்தனைவிதமான காட்சியமைப்புகள்! உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு ஏற்படும் வளர்ப்புச்சுமையை ஒரே காட்சியில் எப்படி சொல்வது? ஈன்றெடுத்த பிள்ளையை தகப்பன் கையில் கொடுக்கிறாள் செவுளி.. குழந்தயை கையில் வாங்கியவுடன் குழந்தை வளர்ப்பு சுமையை தாங்கமாட்டாமல் மருத்துவ மனையின் தரையை பிளந்து மூட்டுவரை கீழிறங்கி விடுகிறார் தகப்பன்.. இந்த விளம்பரத்தை மறந்தவர்கள் இது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் என்பதை நினைவுகூர்க. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் வளர்ப்புசுமை இல்லாமல் போய்விடுமாம்.. கேட்பவன் கேனையனாக இருந்தால்.. என்கிற சொலவடை தமிழர்களுக்கு நன்கு தெரிந்ததுதான். அரசவிளம்பரங்களிளிருந்து பண்டிகைக்காலங்களில் கிராமங்களில் குழாய் கட்டி கத்தும் அனைத்து விளம்பரங்களிலும் கேப்பையில் வடிகிறது நெய்.

அருவருக்கத்தக்க விளம்பரங்களாக நான் என்னும் சிலவற்றை பட்டியலிட்டு முடிக்க எண்ணம். குளிர்பான விளம்பரங்கள், காப்பசினோ விளம்பரம், AXE and FASTTRACK விளம்பரங்கள். ஆக்சை தலையில் கவுத்திக்கொண்டு பாஸ்ட்ட்ராக்கை கையில் கட்டிகொண்டும் நடந்ததில் ஒரு பெண்ணும் என்னை சீண்டவில்லை. இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா? அரசியல், பொருளாதாரம், இலக்கியம், மற்றும் அனைத்து வாழ்வுவகைமைகளையும் ஏதாவது ஒரு ஆடிபிம்பத்தின் மூலமாகவே அவதானிக்க வேண்டுமென்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றையும் போலவே உலகளாவிய எமாற்றுதல்களையும் ஆடியில் பார்த்தே அவதானிக்கிறோம். ஆடியில் தெரியும் அனைத்தும் தெரிவதை விட மிக அருகில் உள்ளதை நாம் அறிவோம் நண்பர்களே. அல்லது அவைகள் நம்மைக் கடந்துபோய் ஒரு பிம்பங்களின் உலகத்தை ஏற்கனவே ஏற்படுத்தி நம்மை கபளீகரம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

********

11 December, 2009

paa


இந்த பயங்கரத்தை கற்பனை செய்த மூளை dynamite கண்டுபிடித்த மூளைக்கு நிகரானது இல்லையா?

தடம்



மெல்லிய காற்று
ஈரப்பதம் கூடிய வெயில்
நின்றுபோன மழையின் வாசம்
மணற்ப்புழுதியின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரார்வம்..

புயல்
பெரும்மழை
காட்டாற்றின் வெள்ளம்
உடைந்து மிதக்கும் கிளையின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரலறல்..

நிலம்
மேகமற்ற வானம்
பெயர் தேவையில்லாத நகரம்
வெடித்து சிதறிய கட்டிடத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பதறல்..

கடல்
நீர்ப்பரப்பு
பெருவனத்தீ கண்டம்
பேரறத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பயம்..

பிரபஞ்சம் சொல்லவொன்னாதவொரு
நுண்ணிய கோள்
நீலம்
பெருங்காமத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்க்காதல்...

பெண்
ஆண்
உயிரற்ரதன் பொருள்
வெளியற்றதின் உள்
கற்பிதங்களின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்..

**********




உரையாடல் போட்டிக்காக மற்றொரு கவிதை இது.

சரிதான்...

ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள். கமலும் ரஜினிக்கும் ஒரு காலகட்டத்தில் நடந்தது போல என்று சொல்லலாமா? இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள்! இந்த ட்ராக்கில் ஹமீதின் ரயில் சந்தோஷக்கூவலுடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சாத்தியப்பாடு இணையத்தினால் மட்டுமே வந்தது என நம்புகிறேன். வாழ்க இந்தியாவில் இல்லாத உலகத்தமிழ் வாசகர்கள்.
******
முந்தய பதிவில் ஒரு சிறுகதை (அப்படித்தான் நினைக்கிறேன்) எழுதியதின் விளைவாக ஒரு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன? நாவல் ஒன்றை தொடராக எழுதுவது. பார்க்கலாம். நாவலின் தலைப்பு "சொல்லுவதெல்லாம் பொய்". மாதத்திற்கு இரண்டு அத்தியாயமாவது எழுதிவிட உத்தேசம்.
*******
ஒபாமாவுடன் ச்சாயா சாபிடறதுக்காகவே இந்தியாவிலே பொறந்தேன்னு பெருமை பட்டவாக்கில தல ரஷ்யாவுக்கும் போயிட்டு வந்துட்டது. இங்க ஒருத்தர் பத்துநாளா உள்துறைய தூங்கவிடல. சரி போகட்டுமேன்னு பாகம் பிரிசுடலாம்னு ஸ்டேட்மென்ட் விட்டா.... நூத்தினாலு சட்டமன்ற உறுபினர்களும் நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுதாசி கொடுக்கிறாங்க.
எது நடக்கிறதோ அது நன்றாகவே.........................
********
தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏழெட்டு பேரு கூடி கூடி போஸ் கொடுத்து.. ஒரே கத்திரிக்காய ... சாமிகளா எத்தன கொளம்புகடா உலகத்துல இருக்கு? இதுகளுக்கு தமிழ் பேருக வேற. இந்த படங்களைஎல்லாம் பாத்து செத்து சுண்ணாபாகி போனவனோட கத ஒன்னு என்கிட்டே இருக்கு.. 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்' னு படத்தோட டைட்டில் . யாருக்காச்சும் வேணுமா?
*******

08 December, 2009

என்னத்த சொல்ல...

கூடுமானவரை தலைமுடியை நேர்த்தியாக அமைத்தான். முடியமைப்பை பற்றி அக்கறை படாதவன் போல முகபாவனையை வைத்துக்கொண்டான். பேன்ட்டினுள் சட்டையை திணித்து பட்டனை மாட்டியதும் ஆடி பிம்பத்தில் தன் தொப்பையை கண்டான். எரிச்சலடைந்தான். வயிற்றை எக்கி உள்இழுத்து ஒரு முறை குதித்தான். மூக்குக்கண்ணாடியை அணிந்தான். பாக்கெட்டில் பர்ஸ் இருப்பதை உறுதி செய்தான். வெளியேறினான்.
***
அவளது அளவு முப்பத்துநான்கு. உடல் இளக்கம் தொடங்கும் வயது. மேல்வயிற்றில் இருந்த வெள்ளை தழும்பு சற்று பெரியதாகி
இருந்தது. உடல் இளைத்திருப்பதாக பட்டது. கொக்கிகளை மாட்டி சேலையை கட்டினாள்.
சீப்பில் நின்ற தலைமுடிகளைப் பார்த்து எரிச்சலடைந்தாள். கைப்பையில் வாகன சாவி இருப்பதை உறுதி செய்தவாறு வெளியேறியவள் கதவை பூட்டும் முன் மீண்டும் உள்நுழைந்து தனது உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டாள். வெளியேறினாள்.
******
தனது காரை கிளப்பும் பொது அவன் வயிற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிச்சலடைந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கழிப்பறையில் பதினைந்து நிமிடம் அமர்ந்துவிட்டு பாரமிறங்கிய மனநிலையில் வெளியேறினான். காரை ஓட்டிக்கொண்டிருந்த பொது அவனுக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன: ஒன்று அவன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்து டக்இன் செய்ய மறந்தது, மற்றொன்று வீட்டின் கழிப்பறையில் மின்சாரவிளக்கை அணைக்காமல் வந்தது. அனிச்சையாக அவன் 'ஷிட்' என்றான். 'ஷிட்' என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி தமிழர்த்தம் அவன் மூளைக்குள் நுழைந்தபொது மீண்டும் 'ஷிட்' என்றான். அந்த வார்த்தை அவனிடமிருந்து வெளியேறி காற்றில் மிதந்த போதுஅவனது வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி பெப் வாகனத்தை இடித்தான்.
******
ஸ்கூட்டி பெப்பை ஓட்டி வந்ததவள் 'சனியனே' என்றாள்.
******
காற்றில் மிதந்த 'ஷிட்' அவளிடமிருந்து வெளியேறிய 'சனியனை' பிடித்துக்கொண்டது. அன்றிலிருந்து பதினோராவது நாள் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே நகரின் முக்கிய உணவகத்தில் வழக்கம்போல என்ன சாப்பிடலாம் என்று கேட்டுவிட்டு தேநீர் மட்டும் அருந்தலாம் என முடிவுசெய்தார்கள். அவன் தன் பெயர் 'ச' என்றும் தன்னை எல்லோரும் 'சி' என்றழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அவள் தன் பெயர் 'சை' என்றும் தன்னை எல்லோரும் 'சை' என்றுதான் அழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டாள்.
******
மறுநாள் அவனிடம் பணம் பெற்றுக்கொண்ட டாடா குழுமம் அவர்களிருவருக்கும் பிரத்தியேகமான இரண்டு பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
*****
இவற்றையெல்லாம் அந்தரத்தில் ஜோடிபோட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த 'ஷிட்' டும் 'சனியன்'னும் இனி இவர்கள் என்னவாக ஆவார்கள் என்கிற சாத்தியப்பாடுகளை பட்டியலிட்டு பார்த்ததில்,
௧.
சை தன் கணவனை விட்டுவிட்டு வந்து ச வுடன் நிரந்தரமாக செட்டிலாகி விடுவது. வயதான ச தொண்டை புற்றில் இறந்ததும் சன்மார்கங்களில் அடைக்கலமாகி தூக்கத்திலேயே இறந்து போவது.
௨.
ச தன் குடும்பத்தை பிரிந்து சை இடம் தன் சொத்து முழுவதையும் இழந்து பிறகு கோவலன் மாதிரி மடத்தனமாக திருந்தி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவது. சை அவனிடமிருந்து பெற்ற சொத்துக்களை ஒரு கல்லூரி விடலைப்பையனுக்காக செலவழித்துக்கொண்டிருப்பது.
௩.
ஒரு மிதமான காதலால் இருவரும் இணைந்து, ஒரு அணுக்கியாய் வயதான ச வுக்கு ஹோமரின் இலியட் டை வாசித்துக்காண்பிப்பது.
௪.
முற்பகலில் எதிர்பாராத விதமாய் வீட்டுக்கு வந்த சை இன் கணவனிடம் உடம்பும் கையுமாய் பிடிபட்டு இடதுகாதுக்கு பக்கத்தில் ஆழமான வெட்டுக்காயம் வாங்கி சை அந்த இடத்திலேயே இறந்து போக ச ஓடிப்போய் மதிலேறி குதித்ததில் இரண்டு காலும் முறிந்து போவது.
௫.
ச வுக்கும் சையுக்கும் அழகான ஈ என்ற பெண்குழந்தை பிறந்து பிற்காலத்தில் தமிழக சட்டசபையில் போக்குவரத்துதுறை அமைச்சியாவது.
*****
சும்மா கற்பனை செய்வதை விட்டுவிட்டு நடப்பதை கவனி சனியனே என்றது ஷிட்.
*****
அப்புறம் என்ன நடந்தது என்றால், பனிக்காலம் குளிர்காலம் மற்றும் கோடைகாலம் ஆளுக்கொன்றாய் கடந்தபின்னான ஒரு இனிய வியாழனில் அதே உணவகத்தில் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே வேறுவேறு இருக்கையில் வேறுவேறு நபர்களுக்கு முன்னால் அமர்திருந்த ச வும் சையும் எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். ச ஒரு ஷிட் டையும் சை ஒரு சனியனையும் அனிச்சையாக வெளியேற்றினார்கள்.
*****
ஏற்கனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஷிட்டும் சனியனும் காற்றில் மிதந்த புது ஜோடியை கண்டு இடிந்துபோன மறுநாள் இரண்டு நிகழ்வுகள்:
ஒன்று:
டாடா குழுமம் கட்டப்படாத பில் தொகைக்காக ச வுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இரண்டு:
ரிலையன்ஸ் குழுமம் ச விடம் பணத்தை பெற்றுக்கொண்டு ச வுக்கும் சை யுக்கும் பிரத்தியேகமான பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
********************************

07 December, 2009

அஞ்சலி

மரணவீடேகாதவன்
துர்மரணங்கள் துரத்த
களித்துத் திரிந்த எம் குருத்துக்கள்
சிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது
காய்ந்த மூங்கில் சடசடவென முறிய
வேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல
தெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க
பதுங்கிப் பிழைத்த பாதகன்
கடுகுப் பொதி சுமந்தலைகிறேன்.

***************

துரத்தும் நினைவுகளை என்ன செய்வது. மிலன் குந்தேராவின் தலைப்பு: Unbearable Lightness of Being . . நண்பணின் துர்மரணம் நேற்று. வாகனவிபத்து. எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். கவுண்டமணியின் காமெடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. தண்ணி கிண்ணி/பொம்பள கிம்பள/பீடி சிகரெட்/ கொறஞ்சது வெத்தலபாக்கு.. எதுவும் இல்லை. அவன் செய்தது: முப்பது வயதுவரை ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது.. கர்த்தருக்கு விசுவாசமாய் இருந்தது.. உருப்படியான காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்தது..

முப்பத்தி ஒன்பது வயதில் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்து போனான்.

டிசெம்பர் ஆறாம் தேதி.

*******

வளர்மதியின் மேற்குறிப்பிட்ட கவிதை உள்ளுக்குள் கரைந்தழும் எனக்காக எழுதப்பட்டது போல உணர்கிறேன்.

05 December, 2009

மிமிக்கிரி



ஆசையெல்லாம் பெரியதொன்றும்
இல்லை. ஒரு கவிதை
எழுத முயற்சிப்பதை தவிர
அதற்கு முன்னால்
உலகத்தின் அத்துனை
நாழிதல்களையும்
கிழித்து ப்ருஷ்ட்டம் துடைக்க
வேண்டியிருக்கிறது. நாய்களைப்போல
காலைத்தூக்கி
வாகனங்களின் மீது
மூத்திரம் பெய்ய வேண்டியிருக்கிறது
ஒருகாதலிக்கும்
பல காதலிக்கும் இடையேயான
பயணத்தினால்
ஏற்படும் முதுகுவலிக்கு
சிகிச்சை செய்ய
வரும் கிழவியை
கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது
காலையில் எழுந்து
மலங்கழிக்க
முதல்நாள் இரவே
தூங்கவேண்டியிருக்கிறது
அலுமினியதட்டை ஏந்தி
தாயின் முதுகில் தொங்கும்
குழந்தையை
முகம் சுழித்து விரட்டவேண்டியிருக்கிறது
அரசியல் குறித்தான சொற்பொழியவும்
பெண்கவிகளின் பருண்மை
குறித்தான
கற்பனைகளை கைவிடவும்
சிரமப்படவேண்டியிருக்கிறது
ஒரு ஒற்றனைப்போல் மிமிக்கிரி
செய்யவேண்டியிருக்கிறது.
*****

பகிர்வு

http://www.blogger.com/www.chikkymukky.com
இரண்டு இதழ்கள் வெளியாகி உள்ளது.
நல்ல முயற்சி. உமாஷக்தி, லக்ஷ்மி சரவணகுமார் கதைகளை மட்டும் படித்தேன். நேரம் கிடைக்கிற போது மீதியை படிக்க வேண்டும்.
*****
sivakannivadi.blogspot.com
சிவகுமார் தனது பதிவில் உருப்படியான சில அரசியல் நையாண்டிகள்.
அருமையாய் உள்ளது.
******
makalneya.blogspot.com
எனது கவிதை தோழன் தனது கவிதைகளின் அடுத்தகட்டத்தை தொட்டிருக்கிறான். அவனுக்கு என் வாழ்த்து.
****

03 December, 2009

ஓரியண்ட்டலிசம் 2


என்னை பொறுத்தவரையில் ஒரியேன்ட்டலிசம் என்பதன் ஆணிவேர் காலனியாக்கத்திலிருந்து தொடங்குறது. ஒரு நிலப்பரப்பு அதன் மொத்த வளங்களுடன் சேர்த்து அதன் பூர்வ குடிமக்களையும் வேறொரு நிலப்பகுதியின் அரசியல் குழு பல்வேறு வழிமுறைகளின் மூலம் அதிகாரம் செலுத்துவது என்பதை காலனி படுத்துவது என்று நாம் அறிவோம். அதற்கான உலகின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா. இவ்வாறாக பல்வேறு காலனி நாடுகள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டு அதன் பூர்வ மக்களின் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்களின் மூலமாக சுய அரசியல் ஆட்சி அமைப்புகளை உருவாகிய பின்பான காலத்தினை நாம் பின் காலனீய சூழல் எனலாம். காலனியம் மற்றும் பின்னைய காலனியம் ஆகியவைகள் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் ஓரியென்டலிசம் அந்த நாணயத்தின் மறுபக்கம் எனக்கொள்ளலாம். இந்த நிகழ்வுப்போக்கில் பின்னைய காலனி நாடுகளின் மக்களும் அவர்களின் கலாசார அடையாளங்களும்தான் பலியாடுகள். உதாரணமாக அகதியாக்கம் என்பது இரு நிலைகளில் உணரலாம், ஒன்று சொந்த மண்ணை விட்டு வெளி நிலப்பரப்பில் அகதியாக்கப்படுவது, இரண்டு சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படுவது. ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை). ஒரு நிலப்பரப்பும் அதன் மக்களும் சொத்துக்களும் அரசியல் ரீதியாக அகதிகள் ஆக்கப்படுவது என்பது காலனிய நிலைமை. ஒரு மனிதன் உலகின் ஆகச்சிறந்த மோசமான நிலையை அவன் அகதியாக்கப்ப்படும்போது வந்தடைகிறான். அந்த வகையான மோசமான சூழலை ஒரு நாடு காலனிச்சூழலில் வந்தடைகிறது. அத்தகைய சூழலில் அந்நாடு தாய்மைநாட்டின் (இந்தியாவுக்கு பிரிட்டன் தாய்மைநாடு - சுதந்திரத்துக்கு முன் ) கலாச்சாரம் மற்றும் அரசியல் விவகாரங்களை திணிக்கப்படபட்டும் தனதான சுய அரசியல் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டும் சிதைவுக்குள்ளாகிறது. இந்த இரண்டு வகையான செயல்பாடுகள் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த படுகிறது. புதிதாக திருமணமான பதினைந்து வயதுப்பெண்ணின் புகுந்த வீட்டு சூழலில் ஏற்படும் மனசிதைவுகளுக்கு நிகராக அத்தகைய ஒரு நாட்டின் மொத்த இயங்கியலும் ஒரு குழப்பமான சூழலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இச்சூழலில் ஆராய்கிறேன் என்று பெருமைகொள்ளும் பேர்வழிகள் தாய்மை நாட்டிலிருந்து புறப்பட்டு காலனி நாடுகளுக்குள் நுழைந்து காலனி நாடுகளின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளின் அமைப்பை அவதானித்து பதிவு செய்கிறார்கள். இந்த புள்ளிதான் ஓரியென்டலிசம் மற்றும் பின்னைய காலனிய பிரசச்சனைப்பாடுகளின் ஆரம்பம். இந்த கட்டுரைக்காக இவ்வகையான ஆராய்ச்சியாளர்களை குசும்பினிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இனி இக்குசும்பினிகள் எவ்வாறு தனது வேலைகளை செய்தார்கள் என்று சுருக்கமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


*****


தொடரும்.

02 December, 2009

பெண்

ஆயிரக் கணக்கான கேலக்சிகளும் அந்த ஆயிரக் கணக்கான கேலக்சிகளை விழுங்கக் கூடிய கருந்துளைகளும் விடை காண முடியாத இயற்கையின் மாபெரும் அற்புதங்கள். பிரபஞ்சமும் பெண்களும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்...?!

ஸ்ரீராமின் கேள்விக்கு பதில் சொல்லுவது போல் என் எண்ணங்களை எழுதுகிறேன். இது முழுவதும் ஒரு ஆணின் மனநிலையில் எழுதப்படுகிறது என்று உணர்ந்தே இருக்கிறேன்.

மொத்த பிரபஞ்சமும் தராசின் ஒருதட்டில் வைத்தால் மறுதட்டில் ஒரு பெண்ணை தவிர வேறு எதை வைக்கமுடியும்! பிரபஞ்சம் என்று நம்மால் காணமுடிவது அனைத்தும் ஒரு பெண்ணிடத்திலும் பருண்மையாக காணமுடியும் என்றே தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் அறிய முடியா பெரும் புதிர்களையும் அதன் மர்மத்தன்மையையும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெறலாம். இதை கொஞ்சம் நீட்டி எழுதினால் வைரமுத்துக்களின் சினிமா பாடல்கள் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

எனவே நண்பர்களே பாவம் இந்த ஆண்களுக்கு பெண்களை விட்டால் யார்தான் இருக்கிறார்கள்...!

******

வைரமுத்து என்றவுடன் ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரி: " பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா.. " என்ன வரி பாஸ்..!

******

ஒரு பெண்ணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் ஒரு ஆண் - மாசோக்கிசம். ஒரு ஆணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் அல்லது விரும்பாத பெண் - சாடிசம். இரண்டு வார்த்தைகளும் இரண்டு ஆண் நாவலாசிரியர்களால் உருவான கருத்தாக்கங்கள். சாடிச நாவலை நான் படிக்கவில்லை. மாசொவின் காதல்தேவதை நாவல் - யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது - படித்திருக்கிறேன். 'சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவனை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தான்' என்கிற ஜூடித்தின் வரி எடுத்தாளுகையுடன் எழுதப்பட்ட நாவல், முடியும் போது வாசித்து பாருங்கள்.

******

சர்வ வல்லமை பொருந்திய தேவன் தொடர்ந்து ஆண்களை பெண்களிடம் ஒப்படைத்துகொண்டே இருக்கிறான்..இதில் தேவனுக்கோ ஆணுக்கோ பெண்ணுக்கோ சலிப்பு என்பதே இல்லை..!!!

******

ஆமென்.

*****

01 December, 2009

பயம்

நீங்கள் கீழ் கண்ட கேள்விகளை உங்கள் வாழ்க்கையில் எப்போது சந்தித்தீர்கள்:

1 பொருள் என்றால் என்ன?
2 ஒளிஆண்டு என்றால் என்ன?
3 கருந்துளை என்றால் என்ன?

நாம் எல்லோருக்கும் வாழ்வில் மல்லாக்க படுத்து வானத்தை பார்த்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன். எனக்கு பள்ளி நாட்களில் ஏறக்குறைய தினமும் இந்த அனுபவம் உண்டு. தூக்கமே வானத்துக்கு கீழ்தான். மழை நாட்களில் நான் நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் அடங்கி விடுவேன். இப்பொழுது மாதிரி என்னால் சிறுவயதில் குளிர் தாங்கமுடியாது. நான் பதினோராம் படிக்கும் போது இயற்பியலும் தியாகராஜன் ஆசிரியரும் என்னை கடந்தார்கள். அப்பொழுதுதான் மேற்படி கேள்விகளும் என்னை கடந்தன.

matter, light year, black hole... இம்மூன்று வார்த்தைகளை பற்றி நான் யோசித்தபோது

எனக்கு முதலில் பயம் வந்தது. மீண்டும் சில நாள் வானத்தை பார்த்து விட்டு யோசித்தபோது மரணபயம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மரணபயத்திற்கு அடிமையானேன். ஆனாலும் பிரபஞ்ச கூறுகளின் வசீகரம் என்னை பித்து நிலைக்கு அனுப்பியது. நான் அவற்றை பற்றி எதையும் படிக்கவில்லை. வானத்தை பார்ப்பேன் எதயாவது கற்பனை செய்வேன் அவ்வளவுதான். அதிகமாக கற்பனையில் விமானம் ஓட்டுவேன். அதிலிருக்கும் அழகான பெண்களுக்கு ஆபத்து வரும்.. அவர்களை காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபடுவேன். இரும்புக்கை மாயாவியும் மந்திரகம்பளமும் என் ஆதர்ஷன நாயகர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய குழந்தை பருவ கடவுள் கிருஷ்ணனாய் இருந்தார்! ஐந்துதலை நாகம் எனக்கு பெரும் பயம். தூக்க கனவுகளில் என்னை அதிகம் மிரட்டிய ஜந்து அரவங்கள். பின்னாளில் பாம்பு கனவில் வருவது பொதுவான பாலியல் பிரச்சனை என்று கனவு சாஸ்திரம் சொன்னதும் சற்று வெட்கப்பட்டு கொண்டேன்.

பொருள் என்றால் என்ன?

என்ன அற்புதமான கேள்வி! சற்று திரும்ப திரும்ப கேட்டால் இந்த கேள்வியின் தீவிர தன்மை வெளிப்படும். இயற்பியலின் ஆதாரக்கேள்வி இது. நீங்கள் இந்த கேள்வியை வெற்றுவெளியில் கேட்டுப்பாருங்கள் அதன் தீவிரம் உங்களை தாக்கினால் நீங்களும் பயப்படத்தொடங்கலாம். ஒருவேளை!

ஒளிஆண்டு என்றால் என்ன?

ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோமீட்டர்கள். ஒரு வினாடிக்கு என்பதை நாம் அறிவோம். இதே வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் கடக்கிற தூரம் ஒரு ஒளியாண்டு. இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தூரம் உடையவை.! நம்மிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பத்தாக கேள்வி.! யோசியுங்கள். என்னை போல நீங்களும் பயம் கொள்ளலாம். ஒருவேளை.!

கருந்துளை என்றால் என்ன?

ஈர்ப்புமையம்! பிரபஞ்சங்களை கூட விழுங்கி சேமிக்கும் ஒற்றை புள்ளி.! ஒன்றுமே இல்லைஎன்று கூட அதனுள் ஒன்றுமில்லை என்கிறார்கள்! இதன் தத்துவத்தில் நான் மிகவும் மயங்குகிறேன். ஆம். மயங்குகிறேன். ஒரு நிலையில் என் மரண பயத்தை வெல்ல கற்றுக்கொடுத்தது இந்த கருந்துளை! இப்பொழுது நான் ஏறக்குறைய மரணபயமற்று இருப்பதற்கு இந்த பிரபஞ்ச கருந்துளைகள் ஒரு முக்கிய காரணிகள். நான் இதனடிப்படையின் நீண்ட காலம் எழுதிவரும் ஒரு நாவலுக்கு கருந்துளை என்றே தலைப்பிட்டிருக்கிறேன். எப்பொழுது எழுதி முடிப்பேன் என்றுதான் தெரியவில்லை.

இந்த கேள்விகளால் நீங்கள் பயம் கொள்ள நேர்ந்தால், ஒருவேளை, உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதன் மூலம் பயத்தை கடக்கலாம்.. அல்லது இக்கேள்விகள் உங்களுக்கு அறிவு விசாலத்தை ஏற்படுத்துமானால், ஒருவேளை, நீங்கள் அறிவுஜீவியாக மாறி உங்களை நீங்களே வருத்திக்கொள்ளலாம்!

இந்த பிரபஞ்சத்தையும் பெண்களையும் பற்றி நாளைக்கு எழுதுவதாக எண்ணம்.

*******

30 November, 2009

கமெண்ட்ஸ்


ஸ்ரீராம் ப்ளாகில் நான் படித்த கம்மென்ட். நன்றாக இருந்தது. கேள்வி ஸ்ரீராம் பதில் கௌதமன்!

*****


மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

தீவிரவாதிகள் டீ விற்கிறதுக்குப் போயிடுவாங்க!

*****

வருகை

புதுப்புனல் செப்டம்பர் இதழில் அலிஷியா பட்னாய் என்ற பெண் கவியின் கவிதை ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது மகளுக்காக எழுதிய கவிதையென உணரமுடிகிறது. ஆனால் இதன் அகிலத்தன்மை இக்கவிதையின் வீச்சை முழுமை செய்கிறது.

வருகை:

வெள்ளிகிழமைகளில், அம்மா

பூட்டுகளையும் கதவுகளையும்

உடைத்து திறந்து கொண்டு வருகிறாள்

நிமிடங்களை கணக்கிட்டவாறு உன்னோடு

தட்டமாலை விளையாட . அப்பா

தொலைதூரத்தில் சுவரால் சூழப்பட்ட தனது நாளில்

உன்னுடைய கதகதப்பான தேகத்தையும்

உன்னுடைய கணக்கிடப்பட்ட குறைவான நிமிடங்களையும்

கனவு கண்ட வண்ணம் இருக்கிறார்

என்னால் மட்டும் முடியுமானால்

என்னருமை குழந்தையே, என்னால் மட்டும் இந்த

பூட்டுக்கள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உனக்கு விளக்க முடியுமானால்

இந்த வாயிற்கதவுகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

இந்த கம்பிகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உயரமான சுவர்ர்களுக்கான காரணத்தை

எல்லாவற்றிற்குமான.. எல்லாவற்றிற்குமான

கணக்கிடப்பட்ட நிமிடங்களுக்கான காரணத்தை

அதை மட்டும் என்னால் விளக்க முடியுமானால்

என் அருமை குழந்தையே

என்னால் மட்டும் 'வெளி' யை விழுங்க முடிந்தால்

ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் தொலைவாக

தட்டமாலை சுற்றமுடிந்தால் ..

ஹோ.. அப்படி மட்டும் முடிந்தால்

பின் நாம் சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருக்கலாம்

என் கைகளும்

காலக்கணக்கை

ஆனந்தமாய் தொலைத்துவிடும்..

*****

29 November, 2009

வாதை

அனுபவிக்க இயலாத துயரமொன்றை என் உடலுக்கு பழக்கப்படுத்திவிட தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். அவ்வாதை மிகப்புராதானமானது. மேலும் துல்லியமானதும் கூட. தாட்சண்யம் இல்லாததது என்றும் சொல்லலாம். மரணம் கூட அதை கண்டு மிரள்கிறது. போகிற போக்கில் அனைவரும் அதை புறம் தள்ளுகிறார்கள். சிலர் அதை கையில் பிடித்து லாவகத்துடன் என்முன் ஒரு நிகழ்வை நடத்துகிறார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உடல் இற்று மனம் பேதலிக்கிறது இவ்வாதையை கடக்க. கடவுளை கூட நம்பிவிடலாம் என்கிற அளவு வேதனை.
அவ்வாதையின் இருப்பு ஸ்தூலமானது. ஆயிரமாயிரம் ஊசிகளாய் என் நகக்கண்ணில் நுழைந்து வெளியேற அதற்கு தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அதன் இருப்பு என்னை பயப்படுத்தி நடுநடுங்கசெய்கிறது. நேர்மை என்னும் அவ்வாதைக்கு சொல் தவிர எந்த வடிவமுமில்லை. நேர்மை பயங்கரமானது. வசீகரமற்ற ஒரு ஒட்டு உண்ணியது. உடனடியாக அடித்து கொல்லப்படவேண்டிய வீட்டினுள் நுழைந்த விசப்பூச்சியது. அது ஒழுங்கற்றைவைகளையும் சிதைவுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறது. தன்னை சமன் செய்துகொள்ள கடுமையாய் வற்புறுத்துகிறது. நேர்மை என்னும் அவ்வாதையை தினமும் நான் சிலமணிநேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். மரகிளையில் தாவும் குரங்கின் இயல்பென அந்த பழக்கம் என்னை விட்டு அகலாதிருக்கிர்த்து.
மேலும் தொடந்து என்னை அவமானப்படுத்த முயற்சி செய்து என்னை ஒரு மடையனை போல் உணர்த்தும் அவ்வாதை என் தனியறையில் மதிப்பிழப்பதை காண சகிக்காமல் கதவை இழுத்து சாத்துகிறேன் நீங்கள் அறியா வண்ணம். ஒவ்வொரு முறையும் நான் கதவு திறந்து வெளியேறும் போது பழகிய நாயென என்மீது தாவி ஏறுகிறது. அதன் மலநாற்றத்தை என் நாசியில் கொட்டுகிறது. ஒரு அசுத்தமற்ற பள்ளி சீருடையென அது என்னுடனே இருக்கிறது.

ஓரியென்டலிசம்

Orientalism is the imitation or depiction of aspects of Eastern cultures in the West by writers, designers and artists. An "Orientalist" may be a person engaged in these activities, but it is also the traditional term for any scholar of Oriental studies.

பொதுவாக ஓரியேன்டலிசம் மேற்சொன்னவாறு விக்கிபீடியாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இனக்குழுக்களின் கலாச்சாரங்களை வேறொருவர் அவதானித்து இப்படித்தான் இவர்களின் கலாசாரம், வாழ்வுமுறை, பழக்கவழக்கங்கள் இருக்கிறது என்று பதிவு செய்வதை மற்றவர்கள் படித்து அவ்வகையான இனக்குழுக்களின் கலாச்சாரங்களை புரிந்துகொள்வது ஓரியேன்டலிசம். ஒரு இனக்குழுவின் அகத்தை புறமாக பார்த்து அவர்களின் இருப்பை யூகம் செய்து அதை பதிவு செய்வது என்ன தீமை வந்துவிடப்போகிறது.. நல்ல விசயம்தானே அது என்று நினைத்தால் நாம் தவறாக சிந்திக்கிறோம் என்று பொருள். இது கடந்த சில பதிமன் ஆண்டுகளாக பெரும் அரசியல் பரப்பாக நிகழ்ந்துவருகிறது. இந்த தொடர் பதிவில் ஓரியேன்டலிசம் பற்றிய எனது புரிதல்களை அவ்வப்போது எழுதி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாமென நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் என்றவுடன் நமக்கு தவிர்க்க முடியாத பெயர் எட்வர்ட் செய்த். அவரின் ஓரியேன்டலிசம் என்கிற புத்தகம் ஆசியாவை பற்றிய - முக்கியமாக - முஸ்லிம்களை பற்றிய மேற்கத்திய புரிதல்கள் எவ்விதம் பரப்பபட்டது என்று எடுத்துக்காட்டுகிறது. மற்றவர்கள் பற்றி அதிகுறிப்பாய் விளிம்புநிலை மக்களை பற்றிய மேட்டுக்குடி கருத்தாக்கம் எவ்வாறு அவர்களை அடிமைத்தனம் படுத்துகிறது என்பதை ஆராயும் பார்வை இதில் உள்ளது. நான் இந்தியாவில் இருக்கும் இத்தகைய சூழல் பற்றி மட்டும் எனக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் படிப்பவைகளின் அடிப்படையில் தொடர்ந்து எழுதலாமென்று நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் ஒரு விலாசமான அரசியல் மற்றும் பண்பாட்டு சூழல். அதை பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதை படிப்பவர்கள் (!) ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தெரிவியுங்கள்.


தொடரும்...

26 November, 2009

வாழ்வு ஆப் கந்தராசு 1



உண்டிவில் கந்தராசுவின் போக்கில் அவன் அப்பன் ஆனந்தகுப்பன் பெரும் வருத்தம் அடையதொடங்கியிருந்தான். கந்தராசுக்கு உண்டிவில் கால்பையில் ஒரு அங்கமாகவே இருக்கும். அவனது தப்பாத குறிக்கு ஆச்சர்யப்பட்ட ஊர் ஜனங்கள் அவன் வாய் வார்த்தையை கேட்டு அருவருப்படைய தொடங்கியிருந்தார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கெட்ட வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கந்தராசுக்கு தெரியும். மட்டுமில்லாமல் அதை எல்லாவற்றையும் அவன் சரம்சரமாக பேச தொடங்கினால் ஜனங்கள் எல்லாம் முக்கியமாக பெண்கள் எல்லாம் பஞ்சாய் தெறித்து போவார்கள். எல்லாவற்றையும் விட அவன் அப்பன் ஆனந்தகுப்பனுக்கு அடிவயிற்று நெருப்பாய் சுட்டது கந்தராசு பேணி வளர்த்த "ங்கோத்தா.." என்கிற வார்த்தை. கந்தராசுவின் வாய் இவ்வார்த்தை இல்லாமல் திறக்காது. வைத்தியர்கள், பூசாரிகள், பில்லிசூனியக்காரர்கள் தோற்றுபோனார்கள் கந்தராசுவிடம். விடிவெள்ளியாய் அவ்வூருக்கு வந்தார்கள் அவர்கள். சில வாரங்களிலேயே ஊரின் பிரதான இடத்தில் தோன்றியது கூம்பு வடிவ கட்டிடமும் சிலுவையில் தொங்கும் ஏசுவின் சிலையும். தந்தை மார்கரெட் ஆரோக்கியம் பெண்மையும் மென்மையும் கொண்டவரானாலும் உடல் ரீதியில் ஆண். ஏசுவை காதலித்து காதலித்து அனிச்சம் போல் ஆனவர். எல்லாம் வல்ல ஆண்டவரின் புகழ் கேட்டு புல்லரித்த ஆனந்தகுப்பன் கந்தராசுவை அழைத்துக்கொண்டு த்னதையிடம் போனான். அப்பம் உண்டு ஜீனானந்தம் ஆனார். கந்தராசுவுக்கு கஸ்பர் ராஜா என்ற பெயர் பிடிக்கவில்லை. பல வாத பிரதிவாதங்களுக்கு பின் அருட்தந்தையும் கந்தராசுவும் ஒரு தீர்வை கண்டுபிடித்தார்கள். உண்டிவில் போட்டி! சிலுவையின் கீழ் இருந்த நீண்ட மேஜையில் ஒரு மெழுகுதிரி ஏற்றப்பட்டது. ஒற்றைமெழுகுதான் குறி. மூன்று தவணைகள் கந்தராசுவிற்கும் ஆறு தவணைகள் அருட்தந்தைக்கும் என முடிவானது. கந்தராசு எப்பொழுதும் போல் ஒரு கல்லில் வேலையை முடித்து விட்டான். அடிபட்ட மெழுகுதிரி மீண்டும் உபயோகப்படுத்த லாயக்கற்றதாய் ஆனது. அருட்தந்தைக்கு மற்றொன்று பொருத்தி வைக்கப்பட்டது. முதல் கல் - ஏசுவின் பெயரால் ஜெபிக்கபட்டது - நேராய் வலது சுவர் அருகிலிருந்த முக்காலியின் மீதிருந்த ஒயினின் போத்தலை சிதறடித்தது. ஆரோக்கியம் நெஞ்சில் சிலுவையை இட்டுக்கொண்டார். இரண்டாவது கல் உத்திரத்தில் தொங்கிய அலங்கார விளக்கில் ஒன்றை தரைக்கு கொண்டுவந்தது. பெரும் வருத்தத்தில் ஏசுவே என்று கூவினார். மூன்றாவது கல் விரல் தவறி பின்புறமாக பாய்ந்து ஜீவானந்தத்தின் வயிற்றில் பட்டது. ஜீவானந்தம் கழிப்பறை தேடி போனார். நான்காவது கல்லும் ஐந்தாவது கல்லும் அன்னை மேரியின் பெயரால் ஜெபிக்கப்பட்டு முறையே சிலுவையின் வலது மற்றும் இடது பக்கங்களில் இருத்த ஆடி பொருட்களை ஒச்சப்படுத்தின. ஆறாவது கல் ஆரோக்கியத்தின் அவசரத்தில் தாவீதுக்கு பதிலாக தன் ஞாபகத்திற்கு வந்த யூதாசின் பெயரால் ஜெபிக்கப்பட்டது மிக சரியாக சிலுவையில் தொங்கிய ஏசுவின் ப்லாஷ்ட்டர் ஆப் பாரிஸ் நெற்றியில் நுழைந்தது. "ங்கோத்தா.. ஜஸ்ட் மிஸ் டா" என்ற அருட்தந்தை ஆரோக்கியம் பாவமன்னிப்பு சொல்லும் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டார். இப்படியாக கந்தராசு தன் பெயரை தக்கவைத்துக்கொண்டான்.

How to Tell if Your Ass is Too Small..........!








25 November, 2009

அன்பு

அன்பு என்பதே ஒரு ஏமாற்று வேலை. அன்பின் கொல்திறன் திசை மற்றும் தூரத்தை வெல்லும் திறன். அனால் பேரன்பு எதிர்பார்ப்பை நிராகரிக்கிறது. ஏசுவுக்கும் புத்தனுக்கும் மகாவீரருக்கும் வாய்த்தததாக நம்பப்படும் அப்பேரன்பு அனைத்தையும் உள்ளடக்கும் ஆழ்கடல். அதன் அடர்த்தி சாதாரண மனிதனால் இயங்க முடியாத ஒரு சூழலை உருவாக்குகிறது.

அன்பின் பெயரால் அதிகாரம் செலுத்தவே முடியும். பாசம், நேசம்,அக்கறை, பிரியம் என பல சொற்களைத்தான் ஒட்டுமொத்தமாய் அன்பென்று நாம் உருவகம் கொள்கிறோம். காதலைக்கூட அன்பு கேலி செய்கிறது. எதிர்பார்ப்பின்மை மற்றும் மற்றமையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மட்டுமே அன்பின் ஆதார அலகுகள். அதை புரிந்துகொள்பவர்களுக்கு அன்பு ஒரு இனிய வாழ்வின் சாத்தியப்பாடுகளை அளிக்கிறது. என்னை பொறுத்தவரையில் அன்பு செய்வது என்பது வேறு அன்பாகவே இருப்பது வேறு. நாம் சாதாரண வெகுமக்கள். நம்மால் அன்பு செலுத்தவே முடியும் பதிலாக அன்பையோ துரோகத்தையோ பரிசாக பெற்றுக்கொண்டு. !

அன்பாகவே இருப்பது தவம். நம்மை போன்றவர்களுக்கு அது தேவையில்லை என்றே தோன்றுகிறது. நமது சூழல் கடுமையான காழ்ப்புணர்ச்சிகளாலும் எதிர் தாக்குதல்களாலும் ஆனது. இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கேடயமும் அன்பிற்கு எதிரானது. ஆனால் கேடயங்களை எடுப்பதும் குறுங்கத்திகளை பிரயோகிப்பதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. சே.பிருந்தாவின் ஒரு வரி "என் நகங்கள் அன்பாலானவை" எப்போதோ படித்தது. மறக்கமுடியாத படிமம். நாம் அன்பை பிரயோகிக்கிறோம் ஒரு ஆயுதமாக! எதிர்தாக்குதல் யுத்த கடமை.

****


An Instinct




R P RAJANAYAHEM GETTING DILUTED.



24 November, 2009

உடல்மூடுதல்


புள்ளியைத்தேடி விரிகிறதென் கோடு
அம்பு நோக்கி பறக்கும் பறவையென
நிச்சலமாய் உடல் திறந்து கிடக்கிறாய்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம் போன்ற எதுவுமற்ற
கோளவடிவில்
எதை செய்து என்னை நிறுவுவது
உன்பொருட்டும்
என்பொருட்டும் அல்ல
புணர்ச்சி என்றபின் ?
மதிப்பிழந்த மரணத்திற்கு பின்?
நூற்றின் வாள்களுடன் போரிடும்
என்னை ஒற்றை கேடயத்தில்
கொன்றபின்?
துணியுடுத்தி உடல்மூடுகிறேன்
என்னைவெல்ல
உன்னைவெல்ல
இதைவிட ஏதேனும் வழியுண்டோ
லயம் இழந்த பாடல்
சிதறும் இவ்வேளையில் !
***
வசுமித்ர -வுக்காக.
***

23 November, 2009

ஏன்....

நாம் எமாற்றப்படுகிறோமா ?

இது ஒரு கேள்வி. இந்த கேள்வி தினமும் ஒருமுறையாவது என்னுள் எழுகிறது. ஏமாற்றப்படுகின்றோம் என்றால் எதற்காக. யார் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

Bt கத்தரிக்காய் என்ற திட்டத்தை வைத்துக்கொண்டு யார் யாரை ஏமாற்றுகிறார்கள். அரசாங்கம் வேளாண் திட்டத்தை கிடப்பில் போடுகிறது. அரசாங்கத்தின் வேளாண் பல்கலை Bt திட்டத்தை உறுதியாக வரவேற்கிறது. நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்கிறார்கள். அரசியல் பார்ட்டி எப்பொழுதும் போல் அரசியல் மட்டுமே செய்கிறது. வெகுமக்கள் யாரை நம்புவது. நான் இப்போதைக்கு 'இன்றைய வேளாண்மை' நவம்பர் இதழில் வால்டேர் என்பவரின் தலையங்க கடிதத்தை நம்புகிறேன். ( மூலிகை மருத்துவத்திலும் மனிதர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்கிற சுவாரஷ்யமான தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது).
*******
தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் செய்யப்படும் விளம்பரங்கள் எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவைகள். அதன் உளவியல் ரீதியான விளைவுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றிய ஒரு கட்டுரையை யோசித்துக்கொன்டிருக்கிறேன். நண்பர்கள் உதவலாம். உதாரணத்திற்கு எனக்கு பிடித்த விளம்பரம் ஏர்டெல் , சர்ப் எக்சல். பிடிக்காதது ஆக்ஸ் எபக்ட்.
*******
டிஸ்கவரி போன்ற நம்பகத்தன்மை வாய்ந்தவைகள் என்று சொல்லப்படுகிற சேனல்களின் பித்தலாட்டங்களை இம்மாத உன்னதம் இதழின் ஆசிரியர் கௌமத சித்தார்த்தன் தனது அருமையான கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
(உன்னதம் இதழ் தமிழ்நாட்டின் மிகசிறந்த சிற்றிதழ்).
*******
மொபைல் போன்களின் உதவியால் ஒரே நேரத்தில்/நாளில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேர்களிடம் பேசுகிறார்கள். அவர்களில் யார் ஏமாறுகிறார்கள்/ ஏமாற்றுகிறார்கள் என்ற அனைவருக்கும் பதில் தெரிந்த கேள்வியுடன் இந்த பதிவை முடிக்கிறேன்!

******

படிப்பவர்கள் எதையாவது சொல்லுங்கள். நன்றி.

22 November, 2009

ஆதங்கம்

சில திருமணங்களுக்கு செல்ல முடியாமல் போவது பெரும் துக்கத்தை ஏற்படுத்தும். ஒரு இனிய தொழமைத்தனத்தை, அதை அனுபவிக்கும் கணங்களை இழப்பது போன்ற ஒரு உணர்வு. திருச்செந்தாழை திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. அவருக்கு ஒரு வாழ்த்து.
***
பின்யா மிகஅழகான சிறுமி. அந்த மழை கிராமத்தின் அழகுக்குள் ஒரு அற்புதமாய் சுற்றித்திரியும் அழகி. அவளுடன் கிராமத்து சிறுவர் பட்டாளம் ! அந்த கிராமத்தில் ஒரு டீகடை வைத்து பிழைப்பு நடத்தும் முதியவர் நந்து. அந்த முதியவரின் குழந்தைத்தனத்தால் ஏற்படும் பிரச்சனை படத்தின் கதை. கதைமூலம் ரஷ்கின்பான்ட் உடைய நாவல். இயக்கம் மற்றும் இசை விஷால்பரத்வாஜ். நடிகர் பங்கஜ்கபூர் அந்த வயதான ஆளாய் நடித்திருக்கிறார் (ரோஜா படத்தில் அரவிந்தசாமி பேச்சை கேட்டு திருந்தும் தீவிரவாதியாய் நடித்தவர்). படத்தின் பெயர் ப்ளூ அம்ப்ரெல்லா. தமிழ்கூறும் நல்லுலகின் சினிமா காரர்களே படத்தை பாருங்கள். திருந்துங்கள். கூடவே லோக்கல் மசாலா கதையை எப்படி உலகளாவிய உடலரசியல்/நுண்ணரசியல் மற்றும் தீவிர அரசியல் படமாக எடுப்பது என்பதை இயக்குனர் விஷால்பரத்வாஜின் காமினே படத்தையும் பாருங்கள். திருந்துங்க மக்கா...!!
***






20 November, 2009

அறிவியல் புனைவிலிருந்து வெளியேறும் நான்

முப்பரிமாணங்களின் எதிர்திசையில்
காலமென்கிற நான்காம் பரிமாணத்தின்
மத்தியில் ஒரு பெரிய ஓட்டை
விழுந்தது. முக்கடவுள்களில் முதலானவள்
அதை சூன்யம் என்றாள். இரண்டாமவள்
பொருட்களின் எதிர்மறை என்கிறாள்
மூன்றாமவள் வெளிஏறுதலின் ரகஸ்யம்
என்கிறாள். பின் மூவரும் அவ்வோட்டை
பற்றி ஒரு சமன்பாட்டை நிறுவ
முனைந்தார்கள். யுகம் கழிந்தது.
மூத்தவள் அல்ஜீப்ராவை கண்டுபிடித்தாள்
இரண்டாமவள் தங்கசுரங்கமொன்றின்
வரைபடத்தை நீட்டினாள். மூன்றாமவள்
இரும்புகோட்டையால் அவ்வோட்டையை
மூடி சாவியை காட்டினாள்
நான்
அல்ஜீப்ராவாகவும்
ரகஷ்ய சுரங்கத்தின் வரைபடமாகவும்
கோட்டைவாசலின் சாவியாகவும் ஆகிவிட்ட
காலத்தின் ஓட்டை பற்றி
ஒரு அக்கறையமில்லை எனக்கூறி
விழித்துக்கொண்டேன்.

உஷாஉதுப்

http://www.dhool.com/sotd/underthe.rm

http://www.dhool.com/sotd/lifeis.rm

முதல் பாட்டு மதனமாளிகை என்ற படத்தில். இசை எம் பி சீனிவாசன்..!

இரண்டாவது மேல்நாட்டுமருமகள். இசை குன்னக்குடி அவர்கள்..!!!!!

19 November, 2009

மல்லிகை பூ....

To-day is one of my good day!

நீண்ட நாள் கேட்க நினைத்து கொண்டிருந்த மூன்று பாடல்களை நான் கேட்டேன்! ஒன்று: உஷாஉதூப் பாடிய under the mango tree.. ! மதனமாளிகை என்ற படத்தில். இந்த பாடலை கேட்டு இருபத்திஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதில் அவர் உச்சரிக்கும் மல்லிகைப்பூ.. இன்னும் அற்புதம். தமிழ் படங்களில் உஷா பாடிய பாடல்களில் இதுதான் உச்சம். மேல்நாட்டுமருமகளில் ஒன்றும் இதயகனியில் ஒன்றும் அவர் பாடிய பாடல்களில் இப்போது நினைவில் வருகிறது. இரண்டாவது முத்தானமுத்தல்லவோ என்ற படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் விஸ்வநாதனின் தகரகுரல் அற்புதம். மூன்றாவதாக ஆஷா பாடிய தம் ஒர் தம் ..! ஹரே ராதா ஹரே கிருஷ்ணா.. படம். இதில் ஒரு சின்ன பிட் உஷா பாடியது..!

internet sucks me..!

சங்கீத சாகரம்

எனக்கு இல்லாத பல அறிவுகளில் மிகமுக்கியமானது இசையறிவு. அதை பற்றிய குற்றவுணர்வை எனக்கு முதலில் ஏற்பதியது ரமேஷ்வைத்யா. என் இசையறிவு வெறும் சினிமா பாடல்கள்தான். மற்றவையெல்லாம் எனக்கு பாகவதர் பாடல்கள் வகைகளே. பாகவதர்கள் பாடல்கள் என்றாலே அறுவை. இப்படியிருந்த என்னை ஞானசூன்யம் என்று நம்பவைத்தது ரமேஷ். அது அவருக்கே தெரியாத விஷயம். நான் இது பற்றி ஒருதடவை கூட அவரிடம் பேசியதில்லை. பொதுவாக எல்லா நேரத்திலும் அவர் பேச நாங்கள் கேட்டுகொண்டிருப்போம். தனியாக சந்திக்க நேர்ந்தாலும் அதுவே. எனக்கும் ரமேஷுக்கும் ஆன நட்பை எனது நாவலுக்காக சேமித்து வைத்திருக்கிறேன். மூளைக்குள் இருக்கும் அந்த அனுபவங்களை எப்போது எழுதுவேன் என்று தெரியாது. ஆனால் அந்த அத்தியாயத்தின் முதல் வரி மட்டும் மாறவே மாறாது. அது இப்படி ஆரம்பிக்கும்: அக்கக்கா கிளி செத்து போச்சு.. எப்ப.. இப்ப..எப்பிடி.. இப்பிடி...! பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு பாடலை பாலுசத்யா என் வாகனத்தில் பில்லியனில் அமர்ந்து என் காதருகே பாடிக்கொண்டு வர நான் வாகனத்தை பெரியகுளத்திலிருந்து தேனிக்கு ஓட்டி சென்றது ஒரு இனிமையான நினைவு. முல்ல பூ வாசம் மூக்குல வீசும் கன்னிப்பெண் வாசம் என் நெஞ்சுக்குள்ள.. அத்த மகளே மெத்த வேணுமா.. என்று தொடங்கும் அப்பாடல் எனக்கு முதல் தனிப்பாடல்! அதில் வரும் ஒருவரி: குண்டு விளையாட சேக்கலைனு ரெண்டு வண்டு கண்ணால கண்ணீர் வடிச்சவளே..." இன்னும் இனிமேலும் மறக்காது. அதன் பிறகு த மு எ ச பாடல்கள் முதல் உலகில் எனக்கு கேட்க கிடைக்கும் அனைத்து வகையான சங்கீதத்தையும் கேட்டு வருகிறேன். பல விதமான உணர்வுகளுக்கும் ஆட்படுகிறேன். இதுவரை அதன் கிரமப்படிகள் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. மேற்கத்தி இசை கலந்த இந்திய இசை எனக்கு பெருவிருப்பமாய் இருக்கிறது. இதை எழுதும் பொது பாலமுரளிக்ருஷ்ணா அவர்ளின் ஒருநாள் போதுமா பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

17 November, 2009

மணமும் மழையும்

ஐந்தாறு நாட்கள் பதிவு வேலை செய்யவில்லை. இடையில் பணி நிமித்தமாக தஞ்சாவூர் சென்றிருந்தேன். பிரகதீஸ்வரர் கோவில் (கோவிலா கோயிலா ?) கட்டமைப்புகளை மீண்டும் பார்த்து பரவசம் அடைந்தேன். ஆனாலும் எனக்கு பிடித்த கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம். நெல்லையப்பர் கோவில் உள்ளே சுற்றுப்பிரகாரத்தில் நுழையும்போது மூச்சில் ஒரு வாசனை தெரியும். மல்லிகை, வவ்வால் கழிவு, விபூதி ஆகியவை கலந்த ஒரு அபூர்வ மணம். மிகுந்த மன சிலாகிப்பை அந்த வாசம் எனக்கு கொடுக்கும். அது போல பெரும் மன சிலாகிப்பையும் ஒரு பூதகணத்தையும் தஞ்சாவூர் மியூசியத்தில் பார்த்த ஒரு சிலை எனக்கு அளித்தது. ஆயிரம் வருட பழமை கொண்ட கற்சிலை.! அம்மன் சிலை. அதன் முகத்தில் ஒரு புன்னகை. ஆயிரம் வருட புன்னகை. அற்புதமாக உறைந்திருந்தது. நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன் சட்டென்று தோன்றிய பயத்தில் திரும்ப அதை பார்க்கவேயில்லை. இனிவரும் நாட்களில் இது பற்றி ஏதாவது கவிதை எழுதினால் கண்டுகொள்ளாதீர்கள். அப்புறம் மழை.! தஞ்சாவூரில் நண்பருடன் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்தேன். எழும்போதே நல்ல மழை. கருப்பில் குவாட்டர் நூறுரூபாய்க்கு வாங்கி குடிக்கும் போது காலை எட்டரை! துண்டை மட்டும் எடுத்துகொண்டு வெளியில் கிளம்பி விட்டோம். ரயில்நிலையத்திலிருந்து பெரிய கோவில் வரை நனைத்து கொண்டே நடந்தோம்! நாங்கள் நனைவதை வேடிக்கை பார்த்தவர்கள் கண்ணில் தெரிந்த பொறாமையை பார்க்க வேண்டுமே! அப்படியே போய் ஆற்றில் விழுந்ததுதான் ஒரு ஒன்றரை மணி நேரம் ஊறல். பின்பு கிடைத்த உணவுதான் அற்புதம். மலர் சுயவுதவி குழு நத்தும் சின்ன உணவகம். ரயில்நிலையத்தின் எதிரிலேயே இருக்கிறது. அளவில்லா சாப்பாடு முப்பது ரூபாய். மீன் குழம்பு இருபது ரூபாய். சாப்பிட்டவுடன் எனக்கு தண்ணீர் குடிக்க வயிற்றில் இடமில்லை.

சுகவாசி

தெரியாததை பற்றி
ஒரு போதும் எழுதுவதில்லை
தெரிந்ததை பற்றி எழுதாதவை போலவே
ஆயிரங்களின் வருடங்களில்
சிதைவுகளால் உருவாக்கப்பட்ட
நமதான சமூகத்தை யாருக்கு சொல்ல
ஏனென்றால் நான் ஒரு முழுச்சோம்பேறி
அற்புதமான சுகவாசி. கவலை கொண்டு
என் மணித்துளிகளை கொல்ல
உரிமையில்லை எனக்கு. இந்த
சமூகம் அடைந்து விட்ட மலட்டுத்தன்மை
என்னை என்ன செய்துவிடும். இதை
நான் யாரிடம் சொல்ல வேண்டும்
அல்லது யாரிடம் சொல்லாமல் இருக்க
வேண்டும். மலட்டுத்தன்மையை யார் உணர
முடியும் எல்லா ஆண்களிடமும் விந்து
பெருகும் போதும் எல்லா பெண்களும்
அண்டத்தை பொழியும்
போதும். மொழிகளும் நிறங்களும்
மனிதர்களை தீர்மானிக்கிற
ஆதிப்பழக்கத்தின் மீதான எனது
உமிழ்வு என்ன செய்து விட
போகிறது. நான் பாசாங்கு செய்கிறேன்
சந்தோசமான மனிதனாக
சமூகத்தின் வரையறைக்குள் என்னை
பொருத்திககொண்டதற்காக
பெருமைபடுபவனாக. ஆணென
சொல்லிக்கொள்பவனாக. என்
பாசாங்கு எவ்வளவு தூய்மையானது
வன்முறையை அது வெறுக்கிறது ஒரு
நடனப்பெண்ணை வெறுக்குமளவிற்கு
அடிநாதமாய் அதனுள் இருக்கும்
குரூரதன்மையை
எளிதாய் உதறி தள்ளுகிறது. ஒரு நடன
மாது
அவள் புகைப்பதையும் மதுவுண்பதையும்
நான் எவ்வாறு வெறுக்க முடியும். எனது
விழிகள் அவற்றை எவ்வளவு தாகத்துடன்
உறிஞ்சி விழுங்குகிறது பல்வழி
நீர்கசிய. எனது விருப்ப மஜ்ஜைகள் உற்பத்தி
செய்கிற குருதி கேளிக்கைகளுக்கானது
எல்லோரிடத்திலும் ஒரே நிறத்திலிருக்கும்
அக்குருதியை அரசியலுக்கு குடிக்க தருவது
எவ்விதத்தில் பொருத்தமானது. எனது
குருதி எனக்குமட்டுமேயானது
முடிவு
ஆரம்பம்
அல்லது இவையிரண்டுமேயான
உங்கள் சுயத்தில் அதன் ஒரு துளியை
உருளவிடுகிறேன். அது நிற்குமிடத்தில்
இவ்வுலகம் நின்று போக கடவது
சுகவாசி சொன்ன சொல்
பலிக்கும்.

******* உரையாடல் - கவிதை போட்டிக்காக.

11 November, 2009

லியோ நார்ட் கோகன்- ஐ அம் யுவர் மேன்

If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for youIf you
want a partnerTake my hand
Or if you want to strike me down in anger
Here I stand
I'm your man

If you want a boxer
I will step into the ring for you
And if you want a doctor
I'll examine every inch of you
If you want a driver
Climb inside Or if
you want to take me for a ride
You know you can
I'm your man

Ah, the moon's too bright
The chain's too tight
The beast won't go to sleep
I've been running through these promises to
youThat I made and I could not keep
Ah but a man never got a woman back
Not by begging on his knees
Or I'd crawl to you baby
And I'd fall at your feet
And I'd howl at your beauty
Like a dog in heat
And I'd claw at your heart
And I'd tear at your sheet
I'd say please, pleaseI'm your man
And if you've got to sleep
A moment on the road
I will steer for you
And if you want to work the street alone
I'll disappear for you
If you want a father for your child
Or only want to walk with me a whileAcross the sand
I'm your man
If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for you

நான்குவழிசாலை

**

எல்லாம் போய்விட்ட பின்பும்

ஒன்று உள்ளதாய் சொல்கிறாய்

நம்பிக்கை என்றதன் பெரேன்கிறாய்

அனைவர்க்கும் தெரியும் இந்த பொய்

சாலையை குறுக்கிடும் ஆமை

பொறுமையற்றது என்றால் நம்பவா முடிகிறது.

**

விடுதியொன்றின் கறைபடிந்த

கழிப்பறையில் உரித்து கொண்டிருக்கும்

சுவரில் கருஞ்சிவப்பு பொட்டை பார்த்தேன்

நீர் வரும் குழாயின் மீதொரு கருப்பு பொட்டு

நாள்பட்டு சுருங்கதொடங்கியிருந்தது

நங்கூர வடிவில் மற்றொன்று

ஆறு விழிகளுடன் நான் குளிப்பதை

ரசித்துகொண்டிருந்தன அவைகள்.

**

பெண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றை

தம் கைப்பையில் வைத்திருக்கக்கூடும்

ஆண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாய்

பெண்களை வைத்திருக்கிறார்கள்

**

கடலற்ற அலையொன்று எந்நேரமும்

பொங்குகிறது வாய்க்கால் வழி

வழிந்தோடுகிறது காலம்.

**

பதிவர்கள்

பதிவில் நான் தொடர்ந்து வாசிப்பது இவர்களை:

நாகார்ஜுனன்.
வளர்மதி.
ஜமாலன்.
கலையகம் கலை.
சுந்தர்.
ராஜநாயஹம்.
சாரு நிவேதிதா.
ராமகிர்ஷ்ணன்.
ஜெயமோகன்.
உமாஷக்தி.
சந்திரா.

இவார்களை என் மதிப்பின் படி வரிசைக்கிரமமாக எழுதியுள்ளேன். நாகார்ஜுனன் இஸ் வெரி பெஸ்ட். என் வாசிப்புகளின் மொத்த இயங்குதளமும் இவரின் அறிமுகங்களை வைத்தே நிகழ்கிறது. வாசகர்களுக்காக கடுமையாக உழைக்கிறார். அவர் பதிவு ஒவ்வொன்றும் ஒரு வாசலை என்னுள் திறக்கிறது.
வளர்மதி நாகார்ஜுனனுக்கு சற்றும் குறையாதவர். ஆனால் பதிவுகள் குறைவு. உலகின் பல்வேறு நிகழ்வுகளை துரிதமாகவும் நேர்த்தியுடனும் ஒளிக்காட்சிகளுடன் பதிவேற்றுகிறார் கலை. ராஜநாயஹம் நினைவு மீட்புகள் என்னை ஆச்சர்யபடுதுகிறது. மற்றவர்கள் நல்ல வாசிப்பனுபவத்தை கொடுக்கிறார்கள்.

09 November, 2009

பேய்கிறுக்கு

வசுபாரதியும் நானும் சேர்ந்து எழுதிய கவிதைகளை கருப்புபிரதிகள் நீலகண்டன் பதிப்பித்தார். கவிதை தொகுப்பின் தலைப்பு 'கள்ளக் காதல்'. புத்தகத்திற்கு ஓவியம் பேய்க்காமன். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு இதழ் தொடங்கலாம் என்று எண்ணம் இருந்தது. இபோழுதும் இருக்கிறது. இதழுக்கு பெயர்தான் பேய்கிறுக்கு. இடையில் எபொழுதும் போல ஒரு விடுபட்ட புரிதல். இதழை கொண்டு வருவதில் இனி கால வரையற்ற தாமதம் ஏற்படலாம். இந்த இடைவெளியில் ஒரு இதழ் தொடங்குவது தேவைதானா என்கிற எண்ணம் தோன்றுகிறது. கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பலமுறை நீயும் நானும் பேசாமல் இருந்து விடுவோம் என்று முடிவு செய்து..அதிகமாக ஒரு இரவு நேரம் நீடிக்கும் வசுபாரதிக்கும் எனக்குமான பிரிவு. சச்சரவற்ற காலங்களில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்போம். இந்த மழை நாளில் எங்கள் கவிதை தொகுப்பை நான் மீண்டும் வாசித்தேன். அதி ஏற்பட்ட நெகிழ்வுதான் இந்த பதிவு. இந்த புத்தகம் எங்களை ஒரு கை பார்த்து விட்டது. ஆனாலும் மீண்டுவிட்டேன்/விட்டோம். எதோ ஒரு கன்னி அல்லது முடிச்சு என்றால் எனக்கே சிரிப்பு வருகிறது அவன் இதை படித்தால் செய்யும் கேலிக்கு குறைவிருக்காது. இருந்தாலும் பதிகிறேன்.

06 November, 2009

நீள்வலி

தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன அந்த பெண்ணின் தலையில் வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூக்கள். குழந்தைகள் யாரும் விளையாடாத வண்ணம் தெருவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஊர் பாலத்தை தாண்டியதும் அந்த பெண்ணுடைய அம்மாவின் ஓலம் அம்பட்டையனின் சங்கொலியில் அமுங்கியது. அந்திக்கு மேல் புகை வாடை சுவாசித்து வெளியேறின சில அரவங்கள். கங்கு பொரிந்த சிதைக்குள் வெந்து கொண்டிருந்தது அந்த பெண்ணின் உடல். கீழ் வான சிவப்பில் கன்றியது மயானம்.

காட்சி ஒன்று:

சாட்சி:

பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிகூட தெரு. சில மனிதர்கள். அவர்களின் மூதாதையர்களின் ஆவி. பேரக்குழந்தைகள். பேரக்குழந்தைகளின் அறியாமை. நான்கு மாடுகள். பதிமூன்று ஆடுகள். இரண்டு வைக்கோல்போர்கள். காக்கை பித்ருக்கள். கருப்பசாமி சிலைகல். சில சுவர்கள். மதியநேரதிலும் ஈரப்பதம் உணர்த்தும் காத்து. மனிதர்களின் மனவெளியில் இயங்கும் கருப்பு. சில பூச்சிகள். சம்பவம் நடந்த கணம்.

உரையாடல் ஒன்று:

"இந்த தடவ ங்கொம்மா ஏன் அவள அனுப்பல.."

"போன தடவ என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு தெரியாதா.."

"வகுத்துபிள்ளகாரிக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கேட்டா பிகு பன்றயே.."

"ஒத்தாசைக்கு வந்தவள கொளுந்தியானு பாக்காம கூப்ட ஆளுதான நீயி.."

"ஆமாமா ரெண்டு பேரும் ரம்பா ஊர்வசின்னு நெனப்பு.."

"இல்லைனாலும் உன் பவுசு தெரியாதாக்கும்.. வாத்தியார்னுதான் பேரு.. பள்ளிக்கூட பிள்ளைகளபாக்குறதே சரியில்ல.."

"நிறுத்துடி.. நீ மட்டும் யோக்கியமாக்கும் .. ஊர் மேயத்தான டிரான்ச்பிர்ல போன.."

"இதப்பாருங்க இப்படியெல்லாம் அசிங்கமா பேசாதீங்க .. என்னோட யோக்கியத என்னான்னு எனக்கு தெரியும்..எல்லாம் உங்க மாதிரியில்ல.."

"நல்லாத்தெரியுது உன் யோக்கியம்..மூத்தவளுக்கு உன்ஜாடையா போச்சு.. ஆம்பளையா பொறக்கட்டும் அடுத்து .. அப்பல்ல தெரியும் எவன் ஜாடைனு.."

"................................................."

"என்னடி பதிலக்கானோம்.."



அகங்காரத்தாலும் ஆற்றாமையினாலும் கோபத்தாலும் குரூரத்தாலும் ஆன ஒன்னரைப்படி சொற்கள் தெருவில் சிதறத்தொடங்கின.



உரையாடல் இரண்டு:

"எண்டா.. உப்புத்தொற பூசாரி அடுத்ததும் மகாராணிதான்னு சூடத்த ஆத்துறான்.. என்னடா செய்றது.."

"என்னத்த செய்ய சொல்ற.."

"முத்துத்தேவன்பட்டி வைத்தியச்சிக்கு நெறைய டிமாண்டாம்டா .. நாளப்பாதது இப்பவே சொல்லி வையிடா.."

"எம்மா உனக்கு அறிவே கெடையாதா.. எத.. எத.. எப்ப பேசனும்னு.. "

"ஒம்பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்குற..எங்க அவ.. அடுப்படியில ஓக்காந்து ஒட்டு கேக்குராளா.."

"சும்மாயிருக்கமாட்டியாம்மா நீயி.."

".........................."

".................................."

".................................."



தேள்களும் பெருச்சாளிகளும் தின்றது போக தெருக்களில் ஓடத்தொடங்கின வீச்சமெடுத்த சொற்கள்.



உரையாடல் மூன்று:

"அப்பா .. நான்தான்பா.."

".............................................."

"முடியலப்பா.."

"..................................."

"பாத்துட்டேன்.. ஒண்ணுமே செய்ய முடியல.."

".......................... ................................................"

"எல்லா வழியிலையும் பாத்துட்டேன்..முடி..."

"..............................................."

"அம்மா.."

"............................"

"அதான் அப்பாகிட்டே சொன்னேன்.. முடியலம்மா.."

"..............................................."

"காசு சரியா போச்சும்மா.. முடியல.. வெக்கிறேன்.. "



உரையாடல் நான்கு:

"..........................................................................................................................................."

அவள் பேசிய பேச்சுகள் அவளை சுற்றியிருந்த யாருக்கும் விளங்காத வெறும் ஒலிகளாய் மட்டுமே இருந்ததால் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றை காற்றில் மிதக்க விட்டார்கள். காற்று தள்ளாடியவாறு கனமான அவ்வார்த்தைகளை மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்க விட்டு சென்றன.

அவளை சுற்றி இருந்தவர்கள்:

சுவர்கள். பலாமரத்தாலான அலமாரி. சில காட்டன் துணிகள். துரு பிடித்த ஜன்னல் கம்பிகள். சிங்கர் சாந்து பொட்டு. ஜிமிக்கிகள். கண்ணாடி வளையல்கள். முடிகற்றை நிரம்பிய சீப்பு. சில கரப்பான்கள். அழுக்கு பெட்டியை சுற்றி கொசுக்கள். கழிப்பறை. தட தட வென்று சுற்றும் மின்விசிறி. சில பெருமூச்சுகள். புழுக்கம். சில சென்சார் செய்யப்பட்ட பொருட்கள்.



காட்சி இரண்டு:

சாட்சி:
வேப்ப மரங்கள். காங்க்ரீட் கட்டிடங்கள். நாய் நுழையக்கூடிய அளவு துளைகள் கொண்ட ஜன்னல்கள். தகர கட்டில்கள். ரொட்டித்துண்டுகள். பால் வாசனை. பீடி வாசனை. அழுகுரல்கள். பெண்கள். வலுவற்ற ஆண்கள். பீதியூட்டப்பட்ட ஒரு பிணவறை. அவளின் உடல்.
உரையாடல் ஐந்து:
"போஸ்ட் மாடம் பண்ணுறதுக்கு முன்னாடி வேற பார்மாலிட்டீஸ் எதுவும் இருக்கா .."
"இல்ல சார்.. அனா விசரா எடுக்கணும் சார்.."
"எடுத்துடலாம்.."
"ரேகொசிசன் எதுவும் தேவைப்படுமா சார்.."
"வேண்டியதில்லை.. எடுத்துடலாம்.."
"தேங்க்ஸ் சார்.."
"அஞ்சு மாச பேபி ஒன்னு இருக்கு ஷ்பெசிமனுக்கு எடுத்துக்கலாமா.."
"எதுவும் பிரச்சனை வராதில்லை சார்.."
"பார்மாலிட்டீஸ் எதுவும் இல்ல .. பட் அவங்களுக்கு என்ன தெரியவா போகுது.."
"எடுத்துக்கலாம் சார்.."
"கல்யாணம் ஆகி அஞ்சு வருசம்தான் ஆகுது..ஆர்.டி.ஒ என்கொயரி சார்.."
"அப்ப வேணாம் .. எதுக்காக பண்ணிக்கிட்டாளாம்.."
"வேற எதுக்கு சார்.. வகுத்து வலிக்குதான்.."
"ஹ..ஹ..ஹா.. பி எம் முடிஞ்சதும் பியூன் பார்சல் பண்ணிடுவான் கையெழுத்த போட்டு வாங்கிகிட்டு போக சொல்லுங்க.."
"சரிங்க சார்.."

சில கேள்விகள்
பேர் விலாசம் என்ன. மொதல்ல பொணத்த பாத்தது யாரு. கடைசியா உசிரோட யார் பாத்தது. புருசனுக்கு ஒரே பொண்டாட்டியா. காது குத்தியிருக்கா. இன்சூரன்ஸ் பண்ணியிருக்கா. எந்தப்பக்கம் கெடந்துச்சு. பஞ்சாயத்து ஆளுக யாரு. பாடி வாங்க யார் கையெழுத்து போடுவா. எந்த சுடுகாடு. சொன்னத வாங்கிட்டு வந்தாச்சா.

குஷ்டம் பிடித்த சொற்கள் ஈக்களுக்கு இரையாகி கழிவுகளாய் சாக்கடையில் மிதக்கின்றன.

காட்சி மூன்று:
சாட்சி:
செழுமையாக ஒழுக்கமற்று கட்டப்பட்ட பெரிய கட்டிடம். பல அறைகள். மரத்தாலான நாற்காலிகள். வயர்கள். மரங்களை மூலக்கூறுகளாய் கொண்ட எண்ணிலடங்கா காகிதங்கள். குப்பை தொட்டிகள. தலை முடி இழந்த மனிதர்கள். திருவுருவப்படங்கள். பெரிய குளிர் பதன அறை. கண்ணாடி ஜன்னல்கள். திரைச்சீலைகள். அக்குவாபினா பாட்டில்கள். கப் அண்டு சாசர். ஆணைகள்.

உரையாடல் ஆறு:
"அடுத்த மீட்டிங் ஷெட்டியூல் என்ன.."
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பத்தினது..சார்.."
"யார் வந்திருக்கா .."
"கவுன்சலிங் டீம்..ஹெல்ப் லைன் மெம்பெர்ஸ்.. டி எஸ் பி டௌரி செல்.."
"வெல்.. அவங்கள கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லுங்க.. நாம கலால் மீட்டிங் முடிச்சிடலாம்.. "
"அசிஷ்ட்டேன்ட் கமிஷனர் கலால் .. நீங்கதான.."
"எஸ் சார்.. "
"இந்த மாசம் ஆப்டேக் என்ன.."
"ஒன் ட்வென்டி பெர்சென்ட் சார்.."
"லாஸ்ட் டைம் ஒன் சிக்ஸ்டி இருந்தது இல்ல... கேஸ்கள் எதுவும் இருக்கா.."
"இருபத்தியேழு இருக்கு சார்.. ஆல் ஆர் மைனர் இன் நேச்சர்..சார்.. "
"குட்..ட்ரை டு கீப் ரைஸ் தி ஆப்டேக்.. மீட்டிங் மே பி வின்ட் அப்.. ஸிராஸ்தார்.. அவங்கள வர சொல்லலாம்.. "

போதையேறிய சொற்கள் தெருவில் ஆண்களை அம்மணமாக்கி கிடத்தின.

உரையாடல் ஏழு:

"வெல்கம்.. இந்த மாசம் என்ன விசேசம்.. "
"ஒன்னும் இல்ல சார்.. இயர் எண்டு .. சூசைடு பர்சென்ட் அதிகமாயிருக்கு.."
"எல்லாமே பெண்களா.. "
"இல்ல சார்.. மொத்தம் நூத்திநாற்பத்துஏழுல தொன்னுத்துநாலு பெண்கள்.. ஐம்பத்துமூணு ஆண்கள்..சார்.."
இது என்ன பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல வருதா.. "
"இல்ல சார்.. பட் .. கவுன்சிலிங் டீம்ல இருந்து முறையா உங்க நோடீஷ்க்கு கொண்டு வரணும்.. அதனால்தான் சார்.. சொல்றோம்.. "
"இதுக்குன்னு தனி மீட்டிங் இருக்கில்ல அப்ப பாத்துக்கலாம்.. "
"சரிங்க சார்... ஆனா..."
"என்ன சொல்லுங்க.."
"எல்லாம் வயித்து வலியில தற்கொல பண்ணிக்கிட்டதா சொல்றாங்க சார்.. "
"எல்லாருமேவா.. "
"இல்ல சார்.. நூத்திநாற்பத்து ஏழு பேர்ல நூத்திஏழு பேரு வயித்துவலியில மனம் வெறுத்து தற்கொல பண்ணிக்கிட்டதா போலிஷ் சைடு சொல்றாங்க சார்.."
"நாங்க சொல்லலை சார்.. புகார்ல அப்படித்தான் கொடுக்குறாங்க.. நாங்க என்ன செய்றது.."
"வருசா வருஷம் சூசடு ரேட் அதிகமாயிட்டுதான் இருக்கு.. பாப்புலேசன் அதிகமாகிட்டு இருக்கில்ல.. ஹ..ஹா.. "
"சிரிக்க முடியாது.. டீ அரேஞ் பண்ணுங்க.."

வெள்ளை சட்டை போட்ட சொற்கள் கழிப்பறை குழாய்கள் வழியாக நகரை கடக்கின்றன. சொற்களை உண்டு கொழுக்கின்றன பன்றிகள்.

காட்சி நான்கு:
சாட்சி:
கடவுள் என்கிற நிகழ்வுபோக்கு. இயற்கை என்கிற அர்த்தத்தில் வருகிற அனைத்தும். எதார்த்தம் என்கிற முட்டாள்தனம். மலட்டுத்தனத்தை வெளியெங்கும் விதைத்த பிரத்தியேகமானதொரு குழுமனம். குடித்து செழித்து துடைத்து அலையும் அறிவு வாடை வீசும் எழுத்தாளர் உடல்கள். நான். அவரவர் ஊர்களில் இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடு.

உரையாடல் எட்டு:
கேட்பத்தற்கு யாரும் இல்லாததால் சொல்லப்படவில்லை.

அவளின் மகளை அவளின் தாய் அழைக்க வந்தபோது மகள் தெருவில் சிதறிக்கிடந்த பூக்கள்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள். ஆச்சர்யப்படும்படியாக தெருவெங்கும் மல்லிகை மனம் கமழ்ந்தது.

நீண்ட தெருக்கள் இருக்கின்றன. நீண்ட சாலைகள் இருக்கின்றன. தேவையற்றவை மற்றும் தேவையானவை எல்லாம் நீண்டு கிடக்கின்றன. சவ ஊர்வலங்களின் நீளம் மட்டும் குறையத்தொடங்கியுள்ளன. அதனால் காக்கை பித்ருக்கள் கவலை கொண்டு கரைந்தலைகின்றன. வெளியெங்கும் சொற்கள் தொடர்ந்து பிறந்து பரவிக்கொண்டுள்ளன. சப்தத்தினால் ஆன சொற்கள் சில மீட்டர்கள் பயணம் செய்கின்றன. காகிதங்களின் மீதும் அறிவியல் உபகரணங்களின் மீதும் அறையப்பட்ட சொற்கள் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றன. பின்னர் ஏதோ ஒரு மர்மப்புள்ளியில் மரணித்து வீழ்கின்றன. மரணம். சுபம்.

04 November, 2009

கே பி.

கொடியது கேட்கின் வரி வடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றேனார்க்கொரு நோய்

அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையார் புற உண்பதுதானே.

********************

கடைசி வரியை சரியாய் எழுத கேட்டு எழுத முடியவில்லை நண்பர்களே.!

*********************

புண்ணியம்

மரணத்தை பற்றி பேசிய பின் நேற்று மீண்டும் ஒரு உடல் பார்த்தேன். காலம் விரும்பியோ விரும்பாமலோ என்னை ஒரு வெட்டியானாக்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் மூன்று உடல்கள். நேற்று பார்த்ததுதான் கொஞ்சம் முழுசாக இருந்தது. தலையும் உடலும் தனித்தனியாக. இன்னொன்று சிதைந்த சிறுபெண். பதினேழு வயது. அந்த கிராமத்தில் அழகான பெண் என்று சொன்னார்கள். அவளுடன்இருந்தது அவள் தாய். அவளுடன் இறந்ததும் அவள் தாய். தாயும் மகளும் வாழ்க்கை பிடிக்காமல் ரயிலுக்கு முன் பாய்ந்து விட்டார்கள். தாய் அறைந்துபோனாள். சிறுபெண் உடல் துண்டுகளுக்கும் தண்டவாள கற்களுக்கும் வித்யாசம் தெரியவில்லை. அப்புறம் இன்னொரு நாளில் ஒரு ஆண் கொத்துகறி கிடைத்தது. அநாதியாய். ரயில்வே நிர்வாகம் அடையாளம் தெரியாத உடல்களுக்கு புதைக்கும் கூலியாக எண்ணூறு ரூபாயும் காவல் நிர்வாகம் நானூறு ரூபாயும் கொடுக்கிறது. ராஜா என்கிற அழகான இளைஞன் ஒற்றை ஆளாய் போஸ்ட் மாடம் செய்த உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு அழுத்துகிறான். நானும் சில வேளைகளில் மண் அள்ளி போடுகிறேன் யாரென்று தெரியாத முகங்களில். புண்ணியங்களின் மேல் நம்பிக்கையில்லை. ஆனாலும் இது புண்ணியம் என்று உடனிருப்புவர்கள் சொல்லும் போது மனசு நிறைகிறது. ரயிலுக்கு முன் பாய தைரியமளிக்கும் வாழ்க்கைக்குள் பாய சமுதாய அமைப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது பற்றி மீண்டும் எழுதுவேன்.

01 November, 2009

சிலுவைச்செடி

இரவு மழை பொழிந்தது தெரியவில்லை காலையில் இதமான குளிரில் கழுவிவிட்ட மாதிரியான சாலையில் வாகனத்தை ஓட்டிவந்தேன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு. நிறைய பச்சை. தாமரைப்பாடி தாண்டியதும் சாலையில் மேற்கில் ஒரு சிறிய கல்லறை இருக்கிறது. நாலைந்து பேர் மண்வெட்டி கொண்டு கல்லறையை களையெடுத்து கொண்டிருந்தார்கள்! சுத்தமான நிலத்தில் நடப்பட்ட சிலுவைகள் பளிச்சென தெரிந்தது. உடல் தின்று வளர்ந்த சிலுவை செடிகள். தினமும் மாலை வேளைகளில் வரும் மரணத்தை பற்றிய எண்ணம் இன்று காலையிலேயே வந்தது. பொதுவாக மாலை நேரத்தில் பயமுறுத்தும் மரணம் காலை வேளையில் நேர்மறையான மனநிறைவை அளித்தது. ஒரு சுகமான சிறந்த தப்பித்தல் மரணம். எவற்றிடமிருந்து என்றுதான் தெரியவில்லை. கே பி சுந்தராம்பாள் பாடல்கள் பதினைந்தை தொடர்ந்து கேட்டேன். மரணபயம் மீறி உயிர் வாழலாம் தப்பில்லை என்றே தோன்றுகிறது.

31 October, 2009

எலிகாலம்

1

அவனுடையது ஒழுங்கான வீடு

அவன் ஒழுங்கானவன் அல்ல

தன் சகோதரர்களின் நண்பர்களின்

தெருவாசிகளுடைய குழந்தைகளின்

பெற்றோரின் மற்றும் நகரத்தின்

மற்றவர்களின் பழக்கத்தில் இல்லாததான

பாதாள சாக்கடையிலிருந்து தினமும்

பின்னிரவில் வீடு நுழையும் ஒரு

எலியுடன் பழகத்தொடங்கினான் . பளுத்த

எலி வால் நீண்டது

கரும் இருளின் சொட்டுக்களாய்

இரண்டு கண்கள் இரண்டு

வெளிச்ச புள்ளிகளை பிரதியெடுக்க

அலைபாயும். தேவகணத்தில் இருவரும் நெருக்கமானார்கள்

நகரின் அனைத்து வீடுகளுக்கும்

பாதாள சாக்கடையில் ஒரு வாசலிருப்பதை

அவனுக்கு பகிங்கிரப்படுத்தியது எலி

பின்பாக அவ்வெலி புத்தகங்களை

மட்டும் தின்று செழித்த காலத்தில்

அனைத்தையும் அறிந்த அவன்

நகரின் ஒழுக்க சீலன் என அறிவிக்கப்பட்டான்

எச்சில் ஒழுக உறங்கிக்கொண்டிருந்த

எலி வருவதற்கான முன்னான பொழுதில்

அவன் கனவின்கல்லில் பதித்த வாசகத்தை

உறக்கப்படித்தேன்

'புத்தகத்தை தின்பதும் மற்றவர்களின்

அந்தரங்கத்தை அறிந்து கொள்வதும்

ஒழுக்கத்தின் முதல் பாடமென...

2

அவனுடைய குப்பைத்தொட்டியை

தனது வீடாக்கிக்கொள்ள சம்மதங்கேட்ட

எலியை பரிதாபத்துடன் பார்த்து சம்மதிக்கிறான்

எலி தன் துணைஎலியுடன்

நிறைந்த அம்மாவாசையில் பால்காய்ச்சியது

பத்து மாதத்தில் ஒரு அழகான யானையை

ஈன்றது துணைஎலி. யானை போய்வர ஏதுவாய்

சாகடைத்துளையை அகலமாக்கினான்

வேறு வழியின்றி அவன்.

3

எலியுடனான பழக்கத்தில்

அவனுக்கான சிறு வால் முளைத்ததுகண்டு

தன் தாயிடம் பெருமை கொண்டான்

முன்பற்களும் பெரிதடைவதாய் தாய்

கண்டு சொன்னாள்தகப்பனுக்கு கொள்ளை

சந்தோசம். எலிப்பொறி சாதனங்களின்

கடையொன்றை நகரின் நடுவில் திறந்தான்

அரசன் வைத்த முதல் பொறியில்

தன் வாலை இழந்த அவனுக்கு

தாய் மருந்து வைத்து கொன்றுபோட்டாள்.

25 October, 2009

தொலைவான ஓரிரவு

என் அம்மா ..
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது.
பிரிவென்று கருதாதே.

என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
நுடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது
தீண்டளற்ற இடை நொடி
தனிமையோ என்று திகைக்காதே.

என் தங்கையே உன்னை தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில்
நீ மிரளாதிரு.

உறங்கு என் மகளே
தோள் மாற்றி சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.

சகலமும் ஆன பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப்பார்த்தது...


யூமாவாசுகியின் என் தந்தயின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற தொகுப்பிலிருந்து.

24 October, 2009

புள்வனம்

மழைக்காற்றில் நடுங்கும் இலையென
இமைகள். மெல்லிய பிரவாகமென
பொங்கி வழிகிறது வெறுப்பின் நீர்
வெம்மை தாங்காமல் வெளியேறும்போது
தெரு நுழைகிறான் பிச்சாந்தேகி
புன்சிரிப்போடு கடக்கிறான் என்னை
வீடு திறந்து நீ அளித்ததை
உமிழ்நீர் வழிய உண்கிறான். தெருமுனையில்
அவன் மீண்டும் என்னை கடக்கும்போது
திருவோடை தவரவிடுகிறான். உடைந்து
சிதறிய பாத்திரத்திலிருந்து கிளம்பி
பறக்கிறது புள்வனம் ஒன்று
பசிய பூனையாய் மாறி
எவ்விக் கவ்வுகிறேன் அவற்றில் ஒன்றை
அதன் சிறகுகள் படபடக்க தின்னும்
என் கண்களுக்கு தெரியுமாறு
பெருங்கிளையின் கயிற்ரிலுன்
உடல் தொங்கும் சித்திரத்தை
வானத்தில் வரைந்திருக்கிறான்
பிச்சாந்தேகி.

23 October, 2009

பார்க்காத கோணம்

சாருநிவேதிதா மீது ஆயிரத்தெட்டு எரிச்சல் இருந்தாலும் அவரது சினிமா விமர்சனத்திற்கு நூறு சதம் நான் உடன்படுகிறேன். ஒரு சினிமாவை கூட விமர்சனம் செய்ய நான் முயன்றதில்லை.
நிறைய படங்கள் பார்க்கிறேன். ஸ்தம்பிக்க வைக்கிற அளவு கொட்டி கிடக்கிறது. தமிழ் சினிமா ஒரு சதவிகிதம் கூட கவரவில்லை. நான் பார்த்த உலக படங்களை நண்பர்கள் விமர்சனம் செய்வதை படிக்க நேருகிற போதுஒரு சந்தோசம். அதுவும் நான் பார்க்காத ஒரு கோணம் அவற்றில் தெரியும் போது ஒரு ஆச்சர்யம். சாருஒப்பீட்டளவில் பல தலங்களில் விமர்சனத்தை முன் வைப்பார். கமலை பற்றிய அவர் பார்வை விசேசமானது. உமாஷக்தியும் ராமகிருஷ்ணனும் தான் பார்த்த படங்களின் கதைகளை துல்லியமாக விவரிக்கிறார்கள். ஒரு படத்தை பார்த்துவிடுகிற நேர்த்தி கிடைத்து விடுகிறது. பழைய படங்களை தன் அனக்டோடில் குறிப்புகளாய் தெறிக்க விட்டு சிலிர்க்க வைக்கிறார் ராஜநாயஹம். போன வாரத்தில் நான் பார்த்த மூன்று படங்கள் த்ரி மன்கீஸ், ஹங்கர் , விக்கி muகிறிஸ்டினா பார்சிலோனா. முதல் படத்தை ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதனுடைய விசுவல் பிரம்மாண்டமானது. இரண்டாவது , சிறையில் அறுபத்தியாறு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்து இறந்து போகும் ஒரு கேரக்டர். ஒரு முறை சாப்பிட மாட்டாரா என்று ஏங்கவைத்தது. மூன்றாவது வூடிஆலனின் படம். தயவு செய்து படத்தை பாருங்கள் அவ்வளவுதான் இதற்குவிமர்சனம்.

22 October, 2009

போதை

ஒரு பயணம் அதன் நோக்கம் பொறுத்து அயர்வை அளிக்கிறது. நாற்பது மணி நேரங்களில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, சென்னை என வாகனத்தில் சுற்றுவது சம்பளம் தரப்படுவதால் செய்ய வேண்டிய வேலை என்பதால் அலுப்பு, சோர்வு , வலி, எரிச்சல் எல்லாம் சேர்ந்து ரணகளபடுத்துகிறது. நேற்று இரவு வசுவையும் சுரேசையும் பார்த்த பிறகுதான் கொஞ்சம் உற்சாகம். நாளைக்கு அக்டோபர் இருபத்தி இரண்டு என்றேன். என்ன விசேசம் என்றார்கள். அவர்களிடம் சொல்ல வில்லை. ஒரு அற்புதமான இல்லறத்தை நல்கி வரும் என் மனைவியை பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண நாள்.

பத்து வருடங்களுக்கு முன் ஆவடிக்கு வந்தது. இன்றும் அதே மன அழுத்தத்தை அளிக்கிறது. ஹைதராபாத் பிரியாணி மட்டும் விலக்கு.!

வலைப்பதிவு ஒரு விதமான போதையை உண்டுபண்ணுகிறது.

19 October, 2009

வியப்பின் பாடல்

காதலை பற்றிய பாடல்
ஒன்றை எழுதத்தேவையான
கச்சாபொருளை
எப்படி சேர்ப்பேன்
மனித கூட்டமாய் அது
இருக்கும் போது
அதிகாரப்படுதலில் ஆனந்திக்கும்
அதற்குத்தான் எத்தனை வேலைகள்
அவர்களின் தொலைந்து போன
கச்சா பொருள் காதல் தான் என்றால்
உருளைக்கிழங்கு கொதிக்க வைக்கும்
கலன்களில் என்னை அழுத்துகிறார்கள்
சமனற்ற உருளைக்கிழங்குகள்
கொதித்து நொதித்து இனிமையும்
தெயவீகமானதுமான சாராயம் வடிவது போல
நான் சொட்டு சொட்டாய் கரைவதை
அவர்கள் அலச்சியம் செய்கிறார்கள்
காற்றில் நான் மது வாசமாய் திரிகிறேன்
காற்று மாசு என்று எனை காணும்போதெல்லாம்
நாசி மூடுகிறார்கள்
நான் காதலை மட்டுமே பாடுகிறேன்
அதை அவர்கள் ஆணின் கொழுப்பென
நாய்களுக்கு இரையிடுகிறார்கள்
அவற்றை யுண்டு நிலவை பார்த்து
ஊளையிடும் நாய்களின் சத்தம்
காதலின் கச்சா பொருளென
என் விரல் நகங்களில் படருகிறது
கனவில் தூங்கிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு என் விரல்களை
உண்ணத் தருகிறேன்
உயிர் நடுங்க உறிஞ்சிக்குடிக்கும்
அவர்களின் முகத்தில் தெரிவது
என்னவென்று அறியமுடியா வியப்பு.

வெடிக்கார பாண்டிகள்.

சுமாராக 15 கிராம் அலுமினியம் தூள் கொஞ்சம் வெடியுப்பு கலந்து சின்ன காகிதத்தில் வைத்து பொடிப்பொடியாக பத்து சரளை கற்களை போட்டு காகிதத்தை மடித்து நூலால் கட்டினால் கிடைக்கிறது வேங்காயவெடி. ஒரு மூடைக்கு 1000 வேங்காயவெடி வைத்து ரெண்டு மூடைகளை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறக்கும் போதுஒரு மூடை வெடித்து அவன் தலையை சிதறடித்தது. அவனருகில் இருந்த இன்னொருவன் உடல் கிழிந்து போனது.
பள்ளிப்பட்டு பட்டாசு குடோன் தீ பிடித்து 32 பேர் கருகி விட்டார்கள். தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான வெடிக்கார பாண்டிகள் தொழில் புரிகிறார்கள். படாசுக்கான மூலப்பொருள்கள் மிகமிக சுலபமாக நகர்களில் கிடைக்கிறது. தீபாவளி அன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டமாக சாலையில் வெங்காய வெடிகளை உபயோகித்தார்கள். ஏறக்குறைய அனைவரும் குடித்திருந்தார்கள். வெடி பொருட்களுக்கு அறிவு இல்லை. வெடிபொருள் செய்பவர்களுக்கு அறிவு தேவையில்லை.