11 November, 2009

நான்குவழிசாலை

**

எல்லாம் போய்விட்ட பின்பும்

ஒன்று உள்ளதாய் சொல்கிறாய்

நம்பிக்கை என்றதன் பெரேன்கிறாய்

அனைவர்க்கும் தெரியும் இந்த பொய்

சாலையை குறுக்கிடும் ஆமை

பொறுமையற்றது என்றால் நம்பவா முடிகிறது.

**

விடுதியொன்றின் கறைபடிந்த

கழிப்பறையில் உரித்து கொண்டிருக்கும்

சுவரில் கருஞ்சிவப்பு பொட்டை பார்த்தேன்

நீர் வரும் குழாயின் மீதொரு கருப்பு பொட்டு

நாள்பட்டு சுருங்கதொடங்கியிருந்தது

நங்கூர வடிவில் மற்றொன்று

ஆறு விழிகளுடன் நான் குளிப்பதை

ரசித்துகொண்டிருந்தன அவைகள்.

**

பெண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றை

தம் கைப்பையில் வைத்திருக்கக்கூடும்

ஆண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாய்

பெண்களை வைத்திருக்கிறார்கள்

**

கடலற்ற அலையொன்று எந்நேரமும்

பொங்குகிறது வாய்க்கால் வழி

வழிந்தோடுகிறது காலம்.

**

2 comments:

p said...

Is this a quote?
It is so different from the poems you posted earlier.

adhiran said...

yes. this is kind of it. i wrote that few years back. when i raed it today it is fun. i enjoyed.