24 November, 2009

உடல்மூடுதல்


புள்ளியைத்தேடி விரிகிறதென் கோடு
அம்பு நோக்கி பறக்கும் பறவையென
நிச்சலமாய் உடல் திறந்து கிடக்கிறாய்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம் போன்ற எதுவுமற்ற
கோளவடிவில்
எதை செய்து என்னை நிறுவுவது
உன்பொருட்டும்
என்பொருட்டும் அல்ல
புணர்ச்சி என்றபின் ?
மதிப்பிழந்த மரணத்திற்கு பின்?
நூற்றின் வாள்களுடன் போரிடும்
என்னை ஒற்றை கேடயத்தில்
கொன்றபின்?
துணியுடுத்தி உடல்மூடுகிறேன்
என்னைவெல்ல
உன்னைவெல்ல
இதைவிட ஏதேனும் வழியுண்டோ
லயம் இழந்த பாடல்
சிதறும் இவ்வேளையில் !
***
வசுமித்ர -வுக்காக.
***

No comments: