23 November, 2009

ஏன்....

நாம் எமாற்றப்படுகிறோமா ?

இது ஒரு கேள்வி. இந்த கேள்வி தினமும் ஒருமுறையாவது என்னுள் எழுகிறது. ஏமாற்றப்படுகின்றோம் என்றால் எதற்காக. யார் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

Bt கத்தரிக்காய் என்ற திட்டத்தை வைத்துக்கொண்டு யார் யாரை ஏமாற்றுகிறார்கள். அரசாங்கம் வேளாண் திட்டத்தை கிடப்பில் போடுகிறது. அரசாங்கத்தின் வேளாண் பல்கலை Bt திட்டத்தை உறுதியாக வரவேற்கிறது. நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்கிறார்கள். அரசியல் பார்ட்டி எப்பொழுதும் போல் அரசியல் மட்டுமே செய்கிறது. வெகுமக்கள் யாரை நம்புவது. நான் இப்போதைக்கு 'இன்றைய வேளாண்மை' நவம்பர் இதழில் வால்டேர் என்பவரின் தலையங்க கடிதத்தை நம்புகிறேன். ( மூலிகை மருத்துவத்திலும் மனிதர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்கிற சுவாரஷ்யமான தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது).
*******
தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் செய்யப்படும் விளம்பரங்கள் எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவைகள். அதன் உளவியல் ரீதியான விளைவுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றிய ஒரு கட்டுரையை யோசித்துக்கொன்டிருக்கிறேன். நண்பர்கள் உதவலாம். உதாரணத்திற்கு எனக்கு பிடித்த விளம்பரம் ஏர்டெல் , சர்ப் எக்சல். பிடிக்காதது ஆக்ஸ் எபக்ட்.
*******
டிஸ்கவரி போன்ற நம்பகத்தன்மை வாய்ந்தவைகள் என்று சொல்லப்படுகிற சேனல்களின் பித்தலாட்டங்களை இம்மாத உன்னதம் இதழின் ஆசிரியர் கௌமத சித்தார்த்தன் தனது அருமையான கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
(உன்னதம் இதழ் தமிழ்நாட்டின் மிகசிறந்த சிற்றிதழ்).
*******
மொபைல் போன்களின் உதவியால் ஒரே நேரத்தில்/நாளில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேர்களிடம் பேசுகிறார்கள். அவர்களில் யார் ஏமாறுகிறார்கள்/ ஏமாற்றுகிறார்கள் என்ற அனைவருக்கும் பதில் தெரிந்த கேள்வியுடன் இந்த பதிவை முடிக்கிறேன்!

******

படிப்பவர்கள் எதையாவது சொல்லுங்கள். நன்றி.

2 comments:

vasu said...

'Bt' thittathin arasiyalum Vilambarathaararin emaatru yukthiyum ore alavukolin kil vara vaippillai...........
Emaatruvathu therindhum ethum seiya mudiyaatha nilai thane anaivarukkum............
Maximum we can list out those things,tats all........

(Ezhuthu pizhaikalai thavirka muyarchikkalaam)

adhiran said...

ezhuththu pizhaikal koodap pranthavaikal. mannikkalaam.

emaatruvathil enna alavukol enru puriyavillai. listouts makes courage.. listouts itself wants courage.

thanks vasu.