26 November, 2009

வாழ்வு ஆப் கந்தராசு 1



உண்டிவில் கந்தராசுவின் போக்கில் அவன் அப்பன் ஆனந்தகுப்பன் பெரும் வருத்தம் அடையதொடங்கியிருந்தான். கந்தராசுக்கு உண்டிவில் கால்பையில் ஒரு அங்கமாகவே இருக்கும். அவனது தப்பாத குறிக்கு ஆச்சர்யப்பட்ட ஊர் ஜனங்கள் அவன் வாய் வார்த்தையை கேட்டு அருவருப்படைய தொடங்கியிருந்தார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கெட்ட வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கந்தராசுக்கு தெரியும். மட்டுமில்லாமல் அதை எல்லாவற்றையும் அவன் சரம்சரமாக பேச தொடங்கினால் ஜனங்கள் எல்லாம் முக்கியமாக பெண்கள் எல்லாம் பஞ்சாய் தெறித்து போவார்கள். எல்லாவற்றையும் விட அவன் அப்பன் ஆனந்தகுப்பனுக்கு அடிவயிற்று நெருப்பாய் சுட்டது கந்தராசு பேணி வளர்த்த "ங்கோத்தா.." என்கிற வார்த்தை. கந்தராசுவின் வாய் இவ்வார்த்தை இல்லாமல் திறக்காது. வைத்தியர்கள், பூசாரிகள், பில்லிசூனியக்காரர்கள் தோற்றுபோனார்கள் கந்தராசுவிடம். விடிவெள்ளியாய் அவ்வூருக்கு வந்தார்கள் அவர்கள். சில வாரங்களிலேயே ஊரின் பிரதான இடத்தில் தோன்றியது கூம்பு வடிவ கட்டிடமும் சிலுவையில் தொங்கும் ஏசுவின் சிலையும். தந்தை மார்கரெட் ஆரோக்கியம் பெண்மையும் மென்மையும் கொண்டவரானாலும் உடல் ரீதியில் ஆண். ஏசுவை காதலித்து காதலித்து அனிச்சம் போல் ஆனவர். எல்லாம் வல்ல ஆண்டவரின் புகழ் கேட்டு புல்லரித்த ஆனந்தகுப்பன் கந்தராசுவை அழைத்துக்கொண்டு த்னதையிடம் போனான். அப்பம் உண்டு ஜீனானந்தம் ஆனார். கந்தராசுவுக்கு கஸ்பர் ராஜா என்ற பெயர் பிடிக்கவில்லை. பல வாத பிரதிவாதங்களுக்கு பின் அருட்தந்தையும் கந்தராசுவும் ஒரு தீர்வை கண்டுபிடித்தார்கள். உண்டிவில் போட்டி! சிலுவையின் கீழ் இருந்த நீண்ட மேஜையில் ஒரு மெழுகுதிரி ஏற்றப்பட்டது. ஒற்றைமெழுகுதான் குறி. மூன்று தவணைகள் கந்தராசுவிற்கும் ஆறு தவணைகள் அருட்தந்தைக்கும் என முடிவானது. கந்தராசு எப்பொழுதும் போல் ஒரு கல்லில் வேலையை முடித்து விட்டான். அடிபட்ட மெழுகுதிரி மீண்டும் உபயோகப்படுத்த லாயக்கற்றதாய் ஆனது. அருட்தந்தைக்கு மற்றொன்று பொருத்தி வைக்கப்பட்டது. முதல் கல் - ஏசுவின் பெயரால் ஜெபிக்கபட்டது - நேராய் வலது சுவர் அருகிலிருந்த முக்காலியின் மீதிருந்த ஒயினின் போத்தலை சிதறடித்தது. ஆரோக்கியம் நெஞ்சில் சிலுவையை இட்டுக்கொண்டார். இரண்டாவது கல் உத்திரத்தில் தொங்கிய அலங்கார விளக்கில் ஒன்றை தரைக்கு கொண்டுவந்தது. பெரும் வருத்தத்தில் ஏசுவே என்று கூவினார். மூன்றாவது கல் விரல் தவறி பின்புறமாக பாய்ந்து ஜீவானந்தத்தின் வயிற்றில் பட்டது. ஜீவானந்தம் கழிப்பறை தேடி போனார். நான்காவது கல்லும் ஐந்தாவது கல்லும் அன்னை மேரியின் பெயரால் ஜெபிக்கப்பட்டு முறையே சிலுவையின் வலது மற்றும் இடது பக்கங்களில் இருத்த ஆடி பொருட்களை ஒச்சப்படுத்தின. ஆறாவது கல் ஆரோக்கியத்தின் அவசரத்தில் தாவீதுக்கு பதிலாக தன் ஞாபகத்திற்கு வந்த யூதாசின் பெயரால் ஜெபிக்கப்பட்டது மிக சரியாக சிலுவையில் தொங்கிய ஏசுவின் ப்லாஷ்ட்டர் ஆப் பாரிஸ் நெற்றியில் நுழைந்தது. "ங்கோத்தா.. ஜஸ்ட் மிஸ் டா" என்ற அருட்தந்தை ஆரோக்கியம் பாவமன்னிப்பு சொல்லும் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டார். இப்படியாக கந்தராசு தன் பெயரை தக்கவைத்துக்கொண்டான்.

No comments: