24 October, 2009

புள்வனம்

மழைக்காற்றில் நடுங்கும் இலையென
இமைகள். மெல்லிய பிரவாகமென
பொங்கி வழிகிறது வெறுப்பின் நீர்
வெம்மை தாங்காமல் வெளியேறும்போது
தெரு நுழைகிறான் பிச்சாந்தேகி
புன்சிரிப்போடு கடக்கிறான் என்னை
வீடு திறந்து நீ அளித்ததை
உமிழ்நீர் வழிய உண்கிறான். தெருமுனையில்
அவன் மீண்டும் என்னை கடக்கும்போது
திருவோடை தவரவிடுகிறான். உடைந்து
சிதறிய பாத்திரத்திலிருந்து கிளம்பி
பறக்கிறது புள்வனம் ஒன்று
பசிய பூனையாய் மாறி
எவ்விக் கவ்வுகிறேன் அவற்றில் ஒன்றை
அதன் சிறகுகள் படபடக்க தின்னும்
என் கண்களுக்கு தெரியுமாறு
பெருங்கிளையின் கயிற்ரிலுன்
உடல் தொங்கும் சித்திரத்தை
வானத்தில் வரைந்திருக்கிறான்
பிச்சாந்தேகி.

1 comment:

padma said...

மழைக்காற்றில் நடுங்கும் இலையென
இமைகள்.

class