22 October, 2009

போதை

ஒரு பயணம் அதன் நோக்கம் பொறுத்து அயர்வை அளிக்கிறது. நாற்பது மணி நேரங்களில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, சென்னை என வாகனத்தில் சுற்றுவது சம்பளம் தரப்படுவதால் செய்ய வேண்டிய வேலை என்பதால் அலுப்பு, சோர்வு , வலி, எரிச்சல் எல்லாம் சேர்ந்து ரணகளபடுத்துகிறது. நேற்று இரவு வசுவையும் சுரேசையும் பார்த்த பிறகுதான் கொஞ்சம் உற்சாகம். நாளைக்கு அக்டோபர் இருபத்தி இரண்டு என்றேன். என்ன விசேசம் என்றார்கள். அவர்களிடம் சொல்ல வில்லை. ஒரு அற்புதமான இல்லறத்தை நல்கி வரும் என் மனைவியை பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண நாள்.

பத்து வருடங்களுக்கு முன் ஆவடிக்கு வந்தது. இன்றும் அதே மன அழுத்தத்தை அளிக்கிறது. ஹைதராபாத் பிரியாணி மட்டும் விலக்கு.!

வலைப்பதிவு ஒரு விதமான போதையை உண்டுபண்ணுகிறது.

No comments: