05 December, 2009

மிமிக்கிரி



ஆசையெல்லாம் பெரியதொன்றும்
இல்லை. ஒரு கவிதை
எழுத முயற்சிப்பதை தவிர
அதற்கு முன்னால்
உலகத்தின் அத்துனை
நாழிதல்களையும்
கிழித்து ப்ருஷ்ட்டம் துடைக்க
வேண்டியிருக்கிறது. நாய்களைப்போல
காலைத்தூக்கி
வாகனங்களின் மீது
மூத்திரம் பெய்ய வேண்டியிருக்கிறது
ஒருகாதலிக்கும்
பல காதலிக்கும் இடையேயான
பயணத்தினால்
ஏற்படும் முதுகுவலிக்கு
சிகிச்சை செய்ய
வரும் கிழவியை
கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது
காலையில் எழுந்து
மலங்கழிக்க
முதல்நாள் இரவே
தூங்கவேண்டியிருக்கிறது
அலுமினியதட்டை ஏந்தி
தாயின் முதுகில் தொங்கும்
குழந்தையை
முகம் சுழித்து விரட்டவேண்டியிருக்கிறது
அரசியல் குறித்தான சொற்பொழியவும்
பெண்கவிகளின் பருண்மை
குறித்தான
கற்பனைகளை கைவிடவும்
சிரமப்படவேண்டியிருக்கிறது
ஒரு ஒற்றனைப்போல் மிமிக்கிரி
செய்யவேண்டியிருக்கிறது.
*****

1 comment:

thenammailakshmanan said...

ரொம்பக் கஷ்டம் தான் ஆதிரன்

மிமிக்கிரி

நல்லவந்து இருக்கு கவிதை

வெற்றி பெற வாழ்த்துக்கள்