19 November, 2009

மல்லிகை பூ....

To-day is one of my good day!

நீண்ட நாள் கேட்க நினைத்து கொண்டிருந்த மூன்று பாடல்களை நான் கேட்டேன்! ஒன்று: உஷாஉதூப் பாடிய under the mango tree.. ! மதனமாளிகை என்ற படத்தில். இந்த பாடலை கேட்டு இருபத்திஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதில் அவர் உச்சரிக்கும் மல்லிகைப்பூ.. இன்னும் அற்புதம். தமிழ் படங்களில் உஷா பாடிய பாடல்களில் இதுதான் உச்சம். மேல்நாட்டுமருமகளில் ஒன்றும் இதயகனியில் ஒன்றும் அவர் பாடிய பாடல்களில் இப்போது நினைவில் வருகிறது. இரண்டாவது முத்தானமுத்தல்லவோ என்ற படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் விஸ்வநாதனின் தகரகுரல் அற்புதம். மூன்றாவதாக ஆஷா பாடிய தம் ஒர் தம் ..! ஹரே ராதா ஹரே கிருஷ்ணா.. படம். இதில் ஒரு சின்ன பிட் உஷா பாடியது..!

internet sucks me..!

2 comments:

chandra said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் 'தம் மரு தம் ஹரே ராதா ஹரே கிருஷ்ணா' தவிர எதையும் கேட்டதில்லை. இந்தப் பாடல் மூன்று முகம் படத்தில் வரும் 'தேவாமிர்தம்,ஜீவாமிர்தம் பெண்தான்' என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது. சில சமயங்களில்
வெளிமனநிலை மறந்து இந்த மாதிரியான பாடல்களைக் கேட்டால் உற்சாகம் வரத்தான் செய்கிறது.

adhiran said...

both comments are same. that's why I delete other one. thanks chanra.