19 October, 2009

வெடிக்கார பாண்டிகள்.

சுமாராக 15 கிராம் அலுமினியம் தூள் கொஞ்சம் வெடியுப்பு கலந்து சின்ன காகிதத்தில் வைத்து பொடிப்பொடியாக பத்து சரளை கற்களை போட்டு காகிதத்தை மடித்து நூலால் கட்டினால் கிடைக்கிறது வேங்காயவெடி. ஒரு மூடைக்கு 1000 வேங்காயவெடி வைத்து ரெண்டு மூடைகளை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறக்கும் போதுஒரு மூடை வெடித்து அவன் தலையை சிதறடித்தது. அவனருகில் இருந்த இன்னொருவன் உடல் கிழிந்து போனது.
பள்ளிப்பட்டு பட்டாசு குடோன் தீ பிடித்து 32 பேர் கருகி விட்டார்கள். தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான வெடிக்கார பாண்டிகள் தொழில் புரிகிறார்கள். படாசுக்கான மூலப்பொருள்கள் மிகமிக சுலபமாக நகர்களில் கிடைக்கிறது. தீபாவளி அன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டமாக சாலையில் வெங்காய வெடிகளை உபயோகித்தார்கள். ஏறக்குறைய அனைவரும் குடித்திருந்தார்கள். வெடி பொருட்களுக்கு அறிவு இல்லை. வெடிபொருள் செய்பவர்களுக்கு அறிவு தேவையில்லை.

No comments: