18 October, 2009

தெருவில் கிடந்த கல்

தீபாவளி என்னுடைய அத்தையம்மாவின் சிகேன்குனியா வுடன் தொடங்கியது. ஹாஸ்பிட்டலில் அனுமதித்து விட்டு மனைவி பார்த்துக்கொள்ள, நான் நண்பர்களுடன் கிராமத்துக்கு சென்றேன். ஊர் பழைய மாதிரி சுத்தமாய் இல்லை. நம்மை போல் நண்பர்கள் தொடர்ந்து புலம்புவதை போல் நானும் பழைய நாட்களைப் பற்றி புலம்பி விட்டு தெருத்தெருவாய் நடந்தலைந்தேன்.கொஞ்சம் குடித்திருந்தேன் . மறந்து போய் விட்டது என்று நினைத்தது எல்லாம் ஞாபகம் வந்தது . தாத்தா வாழ்ந்த தெரு நிறைய உயரமாகி விட்டது. போஸ்ட் மரத்தின் கீழே கிடந்த ஒரு கல் மட்டும் இன்னும் இருக்கிறது. சாக்கடையை மறைக்க உபயோகப்படுத்தப்பட்டது . எண்பதுகளின் கிராம தெருச் சாக்கடையின் வீச்சத்தையும் பள்ளி காலத்து நினைவுகளையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் மூளைக்குள் ரீப்ளே செய்தது அந்த கல். அப்புறம் அந்த வழுக்க பழ மரம். சற்று நெகிழ்ந்துதான் போய்விட்டேன். பல தடவை ஊருக்கு போயிருந்தாலும் ஊர் சுற்றாமல் வந்ததை நினைத்தது வெட்கமாய் இருந்தது. ஊரில் பாஷ்கர்சக்தி மற்றும் நூனையன் என்கிற ரமேஸ் ஆகியவர்களை பார்த்தது தீபாவளியை பழைய தாக்கியது.

2 comments:

siva said...

Hello adhir,i am very much pleased to read your words on internet.I hope we can get more to read on psycological context.

adhiran said...

thanks sures.