09 November, 2009

பேய்கிறுக்கு

வசுபாரதியும் நானும் சேர்ந்து எழுதிய கவிதைகளை கருப்புபிரதிகள் நீலகண்டன் பதிப்பித்தார். கவிதை தொகுப்பின் தலைப்பு 'கள்ளக் காதல்'. புத்தகத்திற்கு ஓவியம் பேய்க்காமன். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு இதழ் தொடங்கலாம் என்று எண்ணம் இருந்தது. இபோழுதும் இருக்கிறது. இதழுக்கு பெயர்தான் பேய்கிறுக்கு. இடையில் எபொழுதும் போல ஒரு விடுபட்ட புரிதல். இதழை கொண்டு வருவதில் இனி கால வரையற்ற தாமதம் ஏற்படலாம். இந்த இடைவெளியில் ஒரு இதழ் தொடங்குவது தேவைதானா என்கிற எண்ணம் தோன்றுகிறது. கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பலமுறை நீயும் நானும் பேசாமல் இருந்து விடுவோம் என்று முடிவு செய்து..அதிகமாக ஒரு இரவு நேரம் நீடிக்கும் வசுபாரதிக்கும் எனக்குமான பிரிவு. சச்சரவற்ற காலங்களில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்போம். இந்த மழை நாளில் எங்கள் கவிதை தொகுப்பை நான் மீண்டும் வாசித்தேன். அதி ஏற்பட்ட நெகிழ்வுதான் இந்த பதிவு. இந்த புத்தகம் எங்களை ஒரு கை பார்த்து விட்டது. ஆனாலும் மீண்டுவிட்டேன்/விட்டோம். எதோ ஒரு கன்னி அல்லது முடிச்சு என்றால் எனக்கே சிரிப்பு வருகிறது அவன் இதை படித்தால் செய்யும் கேலிக்கு குறைவிருக்காது. இருந்தாலும் பதிகிறேன்.

No comments: