01 November, 2009

சிலுவைச்செடி

இரவு மழை பொழிந்தது தெரியவில்லை காலையில் இதமான குளிரில் கழுவிவிட்ட மாதிரியான சாலையில் வாகனத்தை ஓட்டிவந்தேன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு. நிறைய பச்சை. தாமரைப்பாடி தாண்டியதும் சாலையில் மேற்கில் ஒரு சிறிய கல்லறை இருக்கிறது. நாலைந்து பேர் மண்வெட்டி கொண்டு கல்லறையை களையெடுத்து கொண்டிருந்தார்கள்! சுத்தமான நிலத்தில் நடப்பட்ட சிலுவைகள் பளிச்சென தெரிந்தது. உடல் தின்று வளர்ந்த சிலுவை செடிகள். தினமும் மாலை வேளைகளில் வரும் மரணத்தை பற்றிய எண்ணம் இன்று காலையிலேயே வந்தது. பொதுவாக மாலை நேரத்தில் பயமுறுத்தும் மரணம் காலை வேளையில் நேர்மறையான மனநிறைவை அளித்தது. ஒரு சுகமான சிறந்த தப்பித்தல் மரணம். எவற்றிடமிருந்து என்றுதான் தெரியவில்லை. கே பி சுந்தராம்பாள் பாடல்கள் பதினைந்தை தொடர்ந்து கேட்டேன். மரணபயம் மீறி உயிர் வாழலாம் தப்பில்லை என்றே தோன்றுகிறது.

No comments: