25 September, 2010

குறுந்தொகை 4

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே

ஒல்வா ளல்லலென் றவரிகழ்ந் தனரே

ஆயிடை. இருபே ராண்மை செய்த பூசல்

நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

...................................................................................... குறுந்தொகை - அவ்வை - பாலை.

இப்பாடல் என்னைப்பொருத்தவரையில் மிகமிக முக்கியமானது. இதில் "ஆளுமை" ( personality) என்கிற பதத்தில் ஆண்மை என்கிற சொல்லை உபயோகித்திருப்பார் அவ்வை. மேலும் அக்காலத்திய புதுக்கவிதை இதுவென்று அறுதியிடலாம். அவ்வையின் மற்ற கவிதைகளைப் போலவே இதுவும் புரட்சிகரமானதே. (நண்பர்களே.. சங்கத்தில் பல அவ்வைகள் இருந்திருக்கி-றார்களென அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.)

பிரியமாட்டானென நினைத்தேன்

பிரிவதை சொன்னால்

தாங்கமாட்டாளென

நினைத்து சென்று

விட்டான் சொல்லாமல்.

நல்ல பாம்பு கடித்தது போல

அலமலக்கிறது மனம்

அவ்வேளையில்

இரண்டு ஆளுமைகளும் செய்த

பூசல் நினைத்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No comments: