25 September, 2010

குறுந்தொகை

நல்லுரை யிகந்து புல்லுரை தா அயப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந்தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே...


.......................................................................................... குறுந்தொகை - அவ்வை - குறிஞ்சி.


மறுத்தாள் இன்றிரவு.

ஆசை கொண்டு
நல்லது கேட்டேன் இல்லது சொன்னாள்
மழைநீர் கொள்ளாத பச்சைமண் கலையம் போல
துக்கம் தாங்காத உள்ளம் கொண்டேன்
நெஞ்சே. துயர் என்பது உயரக்கிளையில்
தாவும் மந்தியின் நெஞ்சைக் கவ்வும் குட்டி போல கவ்வும்.

* * * * * * * * * * * * * * * *


வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்

மலையுடை யருஞ்சுர மென்பநம்

முலையிடை முனிநர் சென்ற வாறே..


.................................................................................. குறுந்தொகை - அவ்வை - பாலை.



ஆற்றாத மனம்:


முலைகளிடையில் தலையழுந்த தூங்கியவன் பிரிந்த

பாதையென்பது வெக்கையால் சூடான

காற்று வாகைமர பொந்தில் வீசி அதன் விளைச்சலை

முடமாக்கும் மலைகளுக்கிடையேயான பாதை.

* ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * *

No comments: