24 November, 2010

ஆணின் மரணம்.

முன்னால் கிடக்கிறது கடல். சாம்பலின் வெண்மையில். நிலாவுக்கு கீழே என்பதில் காட்சிபிழை ஏதுமில்லை. ஒளிரும் கருமையை சாத்தியமாக்குகிறது அந்தி. மணல் மிதித்தபடி நிற்கிறான். தூரத்தில் தெரியும் எதோ ஒன்றை பார்த்தபடி. கணத்தில் நிலா சாத்திக்கொண்டது தனதான ஜன்னலை. மூடப்பட்ட ஜன்னல் சிலுவையை ஒத்தது. பாரம் தாங்காது மணலுள் புதைக்கிறான். தூரத்து மீன்கள் வேடிக்கை பார்த்து கண்சிமிட்டுகின்றன. சிரிக்கவும் செய்யலாம். உடம்பொற்றி பரவுகிற துகள்மணலை உறுஞ்சி குடிக்கிறது துரோகம் நிரம்பிய ஊசிமுனைக் காற்று.

இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள் அவனைப் பார்த்தபடி. அவர்களுக்கு இடையில் இருக்கிறது வெளி. அவர்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது விருப்பமின்மை. வேறொரு வெளியில் அவன் இருப்பை அவர்கள் பாரமென நினைத்து ஒரு துகள் மணலை விட்டெறிகிறார்கள். துகள் அவனை விரட்ட புதைந்த மணலை விட்டு ஓடமுடியாமல் அவன் கதறுகிறான். ஒரு சிவந்த நாற்சக்கர பட்டத்தின் வால் நீண்டு இறுக்குகிறது அவன் குரலை.

இரு ஓரங்களும் சீர்படுத்தப்பட்ட சாலையும் சாம்பல் வண்ணத்தில் நீள்கிறது. சாலையின் மறுமுனையில் இருக்கலாம் அவன் பார்த்துக்கொண்டிருந்த எதோ ஒன்று. இம்முனையில் அவன்மட்டுமே கடல் போன்ற தனிமையில். பறந்து வந்த ஒற்றை துகள் கண்ணில் பட சாலைக்குள் பாய்கிறான். உப்புசுவையில் எரிகிறது காலம். அவனது கடல் நீக்கத்தை விரும்பாத ஒன்று அவனை உற்று நோக்குகிறது.

பின் நிகழ்கிறது..

1 comment:

ஜெயசீலன் said...

நல்ல பதிவு நண்பா... தொடருங்கள்