08 March, 2010

பகிர்வு

மகளிர் தினம்!

எனக்கு இது ஒரு தனிப்பட்ட சிறப்பு தினம் கூட. எனது துணைவியாரின் பிறந்த தினம். அவர்களுக்கு ஒரு வாழ்த்து.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ! பெண்களைக் கொண்டாடும் ஆண்களுக்கும் வாழ்த்துக்கள்!!

********

இன்றைய தினத்தையொட்டி நான் படிக்க நேரிட்ட மூன்று தினசரி செய்திகள் பற்றிய சிறு பகிர்வு. ஆந்திராவில் என்டியார் ஜூனியருக்கு ஐநூறு கோடி ரூபாய் வரதட்ச்சனை கொடுத்து கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் முப்பத்துமூனு சத இடதுக்கீடு மசோதா நிறைவேறினால் அத்தனை பெண்களுக்கு எங்கு போவது என்று எதோ ஒரு பத்திரிகை கவலைப்பட்டிருக்கிறது. சைனாவில் மனைவிகளுக்கு வீட்டு வேலைக்கு கணவன் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. கேயாஸ் தியரியில் ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திப்பார்க்க அவசியமில்லாமல் தெளிவாக ஒற்றை காரணியாக பெண் இருக்கிறாள். அனைவர்க்கும் அனைத்திலும்! இந்த செய்திகளில் ஒன்று மாநிலம், அடுத்தது தேசம். மூன்றாவது சர்வதேசம். வாழ்க இப்பிரபஞ்சம்!

************

மீடியா வைரஸ்களின் கடுமையான தாக்குதல்களை மீண்டும் நித்த்யானந்தா மூலம் வெளிறிப்போய் அனுபவத்த நம் மகாப்பொது மக்கள் மீது ஒரு கண்ணுக்குக்கு தெரியாத மீடியா வைரஸ் பற்றி சொல்லவேண்டும். அது "பூம் டீவீ" என்கிற பெயரில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

************

3 comments:

padma said...

wow happy birthday to mrs aathiran

Vasu said...

தாய்மார்கள் தினம் , காதலர் தினம் போன்று ஒரு நாளை ஏதாவது ஒரு தினமாக கொண்டாடுவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. நான் ஏன் தினத்தை ஒரு ஏதாவது ஒரு உணர்வு நாளாய் கொண்டாட விரும்பவில்லை என்றால், அந்த ஒரு தினத்தை தவிர மற்ற நாட்களில் அந்த உணர்வு பற்றி ஒரு அக்கறை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதனால்தான்.
??????????????????????????????
Then What is the Special in Women's Day? Its also one another daaaaaaaay.....
Anyway Thanx for Ur Wishes:)

adhiran said...

thanks vasu.
because this is women's day! I have no choice!!

thanks padma.