15 March, 2010

ஆளுமைகள்

Mr. BT
வாருமையா பி வீ.. சௌக்கியம்தானே.. ஊனு எடுத்தாச்சோ? பாத்து பலவருசம் ஆகுதே. எப்பிடியிருக்கு நம்ப ஜனங்க நெலை.. எல்லா பயல்களும் பெசிவேச்சமாதிரி ஆயிட்டனுங்கோ.. அப்ப நாம நெனச்சது சரிதானடே...

Mr. BV
நோ நோ மிஸ்டர் பி டி.. நான் பொதுவா என்னோட நாட்டு உணவு பொருள்கள் அடங்கின வேஸ்டேஜ.. முக்கியமா அதனோட காலை உணவு பழக்கங்கள நான் தொடுறதே இல்ல. புல்ஷிட்.. நானே சமைக்கிறேன்.. யு நோ .. நான் ஆலிவ் ஆயில்தான் உபயோகிக்கிறேன். . காலையில ப்ரீ டாய்லேட் தான் எனக்கு குறிக்கோள்.
Mr. BT
என்னடே உனக்குன்னு என்ன ஒரு நாடு இருக்கு எழவு.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுத.. இதபாரு பலவருசத்துக்கபுறமா நாம இதே நாளுல பாத்துக்கிடனும்னு பேசிகிட்டோமில்ல.. அதுக்காகத்தானே இப்போ ஏகப்பட்டபேர ஏமாத்தி யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.. எப்படி போகுது நாம செஞ்ச யோசன..

Mr. BV

மேன்.. அதுக்காக நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா.. என்னோட வேலையை பிடுங்கினது கூட எனக்கு கோவமில்ல .. எம்பையன் என்னை போடா தேவிடியாப் பையான்னு திட்டுனது கூட எனக்கு கோவமில்ல.. நான் .. நானே எழுதுன எல்லாத்தையும் நான் எழுதலன்னு சொல்லிகினு திரியுறாங்களே.. அவங்க அம்மாக்கள என்ன செஞ்சா தகும்..
Mr. BT
அதுக்காகத்தான் இவங்கள சுலபமா திசைதிருப்புற வழிவகை ஒன்ன கோதாவரி தாண்டி இல்ல தாண்டாம மேற்கு மலை தொடர்ச்சி முடியுற இடத்துல ஒரு வெள்ளைக் கல்ல கண்டுபிடுச்சு அதுக்கடியில முன்னூறு நாலு தியானம் பண்ணினேன்.. அந்த சோர்வுலதான் என்னோட ஆயிரம் பக்க நாவல எழுதினேன்.. அதுக்குப்பிறகு நா சிறுகதைகளை எழுதுன மகத்தான செயலையும் .. இரண்டு சிறுகதைகளுக்கு நடுவுல என்னோட மண மற்றும் மன நிலைய சமன்செய்ய நாவல்கள எழுதவும் தொடங்கினேன்.. பின்னால நான் என்னை உற்சாகப்படுத்தவும் நான் மொத்தமா எழுததொடங்கிட்டேன் ... மொத்தத்துல..
Mr. BV
.. நிறுத்து மேன்.. இன்னும் நீ பதினஞ்சு மார்க் பதில் சொல்ற பழகத்த விட்டு தொலைக்கலையா.. அவனவன் ஒன் வோர்டுக்கு மாறி இப்போ ட்வீட் வரைக்கும் வந்துட்டானுங்கோ.. நானும் அந்த சமயத்தில சீனா லேர்ந்து ஷெலே வரைக்கும் பலவித கலாச்சாரங்கள்ள புகுந்து திளச்சு.. கடைசியில இப்போ மலையாளம் கத்துக்கினு இருக்கேன்..
.....................

இவர்களைப்பற்றி எதுவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகள். புத்தகம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இவர்களிடமிருந்து எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களைப்பற்றி வெகுஜன ஊடக வடிவிலான ஒரு கற்பனை உரையாடலைத் தொடங்கினேன். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினால் எப்படியிருக்குமென்று. சுவாரஷ்யமாய் இருந்தது. ஆனால் தொடரப் பிடிக்கவில்லை. இது ஆரோக்கியமாக படவில்லை.
***********************
ஜெயமோகனின் சில சிறுகதைகளும், விஷ்ணுபுரம், கொற்றவையும் ஏழாம் உலகமும் தமிழுக்கு கொடைசாருவின் சிறுகதைத்தொகுதியும், ராசலீலா நாவலும் இதே தமிழுக்கு கொடை. எழுத்தாளர்களுக்கு தற்பெருமை அடிப்படை குணம். இவர்களின் தம்பட்டம் அவ்வாறானதே. இந்த எழுத்தாளுமைகள் - அனைத்து எளிய மனிதர்களை போன்றே - மதிக்கப்படவேண்டியவர்களே. என்னைப்பொருத்தவரையில், வரலாறு தொன்மம் போன்றவற்றை தேடி கொள்ள ஜெயமோகன் சிறந்த வழிகாட்டி. உலக எதிர்கலாச்சாரம், திரைப்படம் போன்றவற்றை தேடி கொள்ள சாரு. ஆக, ஜெயமோகன் ஒரு biological typewritter. சாரு நிவேதிதா ஒரு biological vibrator.
*****************

1 comment:

ஜெகநாதன் said...

நீங்களும் விளாச ஆரம்பிச்சாசா?
குட்!
என் முதல் பதிவே இது பற்றிதான்:
http://jaganathank.blogspot.com/2009/06/blog-post_14.html