01 April, 2010

முட்டாள்

தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!
******************
பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.
******************
சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!

**************************
அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள்.
***********************

1 comment:

padma said...

ohh u celebrate this alone ? same to you enjoy the day