15 December, 2010

வானவில் வண்ண மின்னல் 9

தேஜா கேட்டாள், "மகி ஆம்பளைங்களும் பொம்பளைகளும் கல்யாணம் செய்யாம ஒண்ணா வாழுறாங்கலாமே.." . எனக்கு கௌசல்யாவின் சமீபத்திய பதிவு ஞாபகம் வந்தது. சேர்ந்து வாழும் முறைக்கு ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் கொண்ட பதிவு. ஆனாலும் பிரச்சனைகளை தெளிவாக சொல்ல முயன்றிருக்கிறார். (இதில் நான் சொல்லும் எனது கருத்து அவரின் பதிவுக்கு எதிர்பதிவாக இருக்கும்). என்னைப்பொருத்தவரைக்கும் இந்த முறை மிகவும் சிக்கலான காலத்தில் உருவாகி இருக்கிறது.

"எப்பயும் போல பில்ட் அப் தானா.."

"லைட்டா ..! ஆனாலும் சொல்றத கேளு.. இந்த சேர்ந்து வாழ்தல் முறை இப்போதைக்கு சதவீதப்படி இந்தியாவில ஆரம்ப நிலையில இருக்கு. சித்தாந்தப்படி (theoritically) சேர்ந்து வாழ்தல் முறை மனித உறவுகளில் மிக அற்புதமான ஒன்று. நடைமுறைக்கு வரும்போது அதன் அனைத்துக் கூறுகளும் குழைந்து போவதற்கு இன்றைய குடும்ப அமைப்பினுள் இருந்து கொண்டு இந்த முறையை ஒப்பிட்டு பார்ப்பதுதான். .."

"இரு .. இரு.. குடும்ப முறையா.. அப்படின்னா ..?"

"அதசொல்லத்தானே இந்த தொடர்பதிவு.. நம்ம நாட்டில சேர்ந்து வாழ்தல் முறைக்கு வேறொரு பாரம்பரிய அர்த்தம் இருக்கு.. கூட்டுக் குடும்ப முறை.. அறியாமை கட்டுப்பாடுகள் ஆணாதிக்க தன்மைகளோட சுருங்கிய வட்டத்தில பெருங்குடும்பமா வாழ்கிற முறை. இதில் தீமைகள் பெருமளவு இல்லையென்றாலும் நன்மைகள் மிகக் குறைவு. அதில் எனக்கு தெரிந்து ஒரு நல்ல விஷயம் பெண்களுக்கு இடையேயான நட்பும் கதைகளும்.."

"கதைகள்னா.. குடும்ப பிரச்சனைகளா..?"

"எல்லாமும்தான்.. கதைகளும் பாட்டுகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு முறையது..ஆனா படிப்படியா இந்த கூட்டுக் குடும்ப முறை காலாவதி ஆனதுக்கும் பெரும்பங்கு பெண்களுக்குத்தான்.. தனிக்குடித்தனம் கெட்ட வார்த்தையா இருந்த காலம் போய் வேறு வழியில்லாத நிலைக்கு வந்து விட்டது.. (மாமியார்களுக்கு இன்னமும் இது ஏமாற்ற உச்ச நிலைதான்). வரிசைக்கிரமப்படி பார்த்தால் அடுத்தது சேர்ந்து வாழ்தல் முறைக்குத்தான் மனிதகுல பாதை செல்கிறது என்று எண்ணினாலும் பிரச்சனை அத்தனை ஒன்றும் எளிதானதல்ல. அதற்கான தடைக்கற்கள் ஒரு பாடு உண்டு.. "

"பாடுனா..?"

"கிலோ கணக்குல என்று அர்த்தம் .. குறுக்க வராதடா.. ஒரு flow கெடுதில்ல.. தடைகளின் மொத்த காரணம் நான் என்ன நினைக்கிறேன்னா மனிதர்களின் மனத்திலிருக்கிற இறுகிப்போன கருத்துப் பாறைகள்தான்.. வரலாறு என்பதை அறிய வழியில்லாத அதை அறிவதற்கு முறையான வழிமுறைகள் இருந்தும அதைப்பற்றிய பிரக்ஞையை அறிய விடாத ஒரு கேடுகெட்ட சமுதாயம் உருவாகி வெகு காலமாகிவிட்டது.."

"ஏய்..என்னது இது சாதாரணமா சொல்ல வரவே வராதா உனக்கு.. ?"

"கவனமா கேளு இல்ல எழுதிவெச்சு திரும்ப திரும்ப படிச்சுப் பாரு.. புரியும்.. இன்றைய மனித மனம் கருத்துக் கற்களால் கட்டப்பட்ட வெற்றுக்கட்டிடம்.. ஒரு வாக்கியம் சொல்றேன் "குடும்ப உறவு என்பது உற்பத்தி உறவுதான்". எனக்கும் புரியாத வாக்கியமாதான் இருந்தது .. புரிஞ்சமாதிரி இருந்தப்போ நின்னுகிட்டிருந்த பூமி கழண்டுபோனது மாதிரி உணர்வு.. "

"எப்படி புரிஞ்சுக்கிட்ட.."

"மொத்தமா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லவே முடியாது.. ஆனா புரிஞ்சுகிறதுக்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்ல .. புத்தகங்கள் கிடைக்கிற தூரம்தான்.. "

"books .. செம bore .. மகி.."

"யாரையாவது படிக்கச்சொல்லி கேளு.. இப்ப நான் சொல்றத கவனி .. இங்க ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் சேர்ந்து வாழறாங்க.. படிக்கிறதுக்காகவும் வேலை சூழல் காரணமாகவும்... உனக்கு எத்தின வயசு தேஜா..?"

"பதினஞ்சு முடிஞ்சு இப்பதான் இருபது நாளாகுது.. ஏன்..?"

"தப்பில்ல இங்க பதிமூணு வயசு பொம்பளைங்க குழந்த பெத்துகிற கொடுமைகள் இன்னும் மாறல.. நான் சொன்ன மாதிரி ஆணும் ஆணும் சேர்ந்தோ பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ ஒண்ணா வீட்டுல வாழுறது சட்டப்படி தப்பில்லை.. ஆனா அவர்களுக்கிடையே ஒரு பால் புணர்ச்சி உறவு இருக்கும் பட்சத்தில அத பத்தின புகாரின் பேருல அரசாங்கம் சட்ட ரீர்தியான நடவடிக்கை எடுக்கும்.. அதே சமயத்தில ஒரு ஆணும் பெண்ணும் தனியா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்ந்தா சட்டப்படி தப்பு இல்ல.. வயசு மட்டும் 18 ஆகியிருக்கணும்.. யாராவது புகார் பண்ணினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது.. "

"சுவாரஷ்யமா இருக்கே.."

"ஆமாம்.. அதனால குடும்ப அமைப்புக்கும் சேர்ந்து வாழறதுக்கும் இருக்கிற வித்தியாம் சடங்குகளும் தாலியும் தான் அப்படின்னு பொதுவா நினைச்சுக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை இப்படி ரெண்டையும் ஒப்பிட்டு பாத்தோம்னா உண்மையான சேர்ந்து வாழ்தல் முறையோடட அற்புதத்த புரிஞ்சுக்க முடியாத போகும்.. "

"நான் ஒன்னு கேக்கவா மகி.. பெரியமனுசத்தனமா இருக்கும்.. கோச்சுக்காத.. நீ ஆம்பள இப்படித்தான் சொல்லுவ .. ".

"பின்னிட்ட போ.. இதப்பத்தி நான் தொடர்ந்து பேசுறேன்.. இப்போ நான் போகணும்.. "

"ங்கோயாள தப்பிக்கிற .. இல்ல..ஒழுக்கமா உண்மைய சொல்லு.." என்றார் தேஜா.

*********

1 comment:

arasan said...

பகிர்வுக்கு நன்றி