15 January, 2010

என்றொரு ஆதிப்பெண் 4

****************

காமா...

இலைத்துளியின் மேலேயும்

தடாகநீரின் ஆழத்திலும் ஒரேநேரத்தில்

பறக்கும் ஆகாய பறவை நீ

நீரில்விழும் எச்சத்துளியில் களைந்து

மேலேறிப்பரவும் சிறுவட்ட அலைவிரிசல் நான்

களைப்புற்று முகமமிழ்ந்துறுஞ்சும்

வேட்டை மிருகத்தின் தாகம் அது.

காமா..

உயிரெடுத்து வலைப்பின்னும்

உறுபசி சிலந்தியின் இரைக்கான காத்திருப்பு நீ..

இலையிலிருந்து உருண்டுவிழுந்து

வலையின் மீது தொங்கும் சிறுபனித்துளி நான்..

மழைநின்றகருவானில் குளிர்நிலவின் எரிதல் அது.

காமா..

அசந்தர்ப்பங்களின் மீது வன்மத்துடன்

காலம் செய்யும் முத்தத்தெறிப்பு நீ..

முடிவுறா சந்தர்ப்பங்களை தவறவிடும்

ஒழுங்கீனச் சோம்பல் நான்...

மன்னிப்பை உண்டு கொழுக்கும் கடல்பிராணி அது..

காமா..

முத்தம் நீ..

அம்முத்து நான்..

அமுதம் அது.

**********

No comments: