01 August, 2010

சொல்


படிக்கிற கவிதை வாழ்நாளுக்கும் போதுமாக இருக்கிறபோது மீதமுள்ள காலத்தை தலைமீது பொதிஏற்றுகிற வாழ்வை சபிக்க நடைமேடையில் அனாதையாக்கப்பட்ட சிறுமியின் அழுகைக்குப் பரிசளிக்கிறேன். இனிப்பொன்றிற்கும் சிறிய நேர நீட்சிக்கும் சிரிக்க மறுத்தவள் தாயைக் கண்டதும் என் உயிரை சிரிப்பாக்கி தருகிறாள் அவளிடம். உதிர்ந்த உயிர் தண்டவாளத்தில் படிய மெல்லிய கரி நாற்றத்தோடு தேநீர் கடை நுழைகிறேன் கவிதை சுமந்த வௌவால் போல தொங்கும் புத்ததகங்கள் அடைகாக்கும் கடை விட்டு. தேநீர் மணத்துடன் கரைந்து உரமேற்றுகிறது தாயின் நன்றியறிவித்த சொல்.


************