07 September, 2010

அப்பா .....


பள்ளி வெளியேறிய

யாமத்தில் சில்லுகள்

நள்கையில் வில்லெய்திக்

கொய்கிறேன் ஒடிந்த மின்னலை.

எரிந்து அடங்குகிறது கானகத்திமிர்.

ஏறி மிதிக்கிறது பரிதிவெளிச்சத்தை

வாங்கி உமிழும் உருண்டை.

ஒவ்வொரு செதிலாய் பிடுங்கிகொண்டு

பறக்கிறது இரவுநிற வெட்டுக்கிளி.

நான் பள்ளி மீள்கிறேன்.

கதவை திறக்கிறார் அப்பா.

தவிரவும் இல்லை தவறவும் இல்லை.

இளஞ்சூட்டுடன் உள்ளங்கை

அழுந்த பிடித்து அழைத்துச்செல்கிறார்

உள்ளே. திறந்துகொண்டே இருக்கிறது

முடிவுராக்கதவுகள் திசைகளற்ற வெளிக்குள்.

பட்டென்று வெடித்த காய்க்குள்லிருந்து

மிதக்கும் சிறுபஞ்சென உணர்கிறது நாசி.

கையை விடாதீர்கள்

ஒரே ஒரு கதவு அடைபடும் வரையேனும்...

No comments: