07 September, 2010

பார்த்திபன் கவிதைகள் 1

பார்த்திபனின் தலைப்பிடப்படாத கவிதை.

* * * * * * * * * * * * * * ** * * * * * * * * *

அங்குதான்
கடவுள் கொலையுண்டிருப்பதாகச் சொன்னார்கள்

பார்வைச் சுவாரஸ்யமற்றவை பிணங்கள்
எனினும்
கால்களை அங்கு இட்டுச் சென்றது
இனியொருமுறை கடவுள் கொலையுறுவாரா என்ற ஐயம்

கொலையுண்ட கடவுளின்
சுவடின்றி வீசிக்கொண்டிருந்தது காற்று

வேப்பம்பூ மணத்த மரத்தின்
இலைகள்
கிளைகளுக்கிசைந்தபடி ஆடிக்கொண்டிருந்தன

வேப்பம்பூ மணத்த மரத்தின்
பறவைகள்
இன்னும் கூட்டைந்திருக்கவில்லை

திசைகள் இருந்தன அதனதன் இடத்தில்

விரைந்து சென்ற பேருந்தின்
ஜன்னலோரக் குழந்தை
கையசைத்துப் போனது
நெஞ்சைப் பிசைந்த புன்னகை வீசி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No comments: