20 September, 2010

ஒரு துளி குருதி


சிதறிய கொலுசுமணிகள்
சுமந்த கால்களின் சொந்தக்காரி
கட்டாந்தரை காய்ந்தபுல்லில்
உருட்டிவிடப்படுகிறாள் உடையற்று
எனது சாட்டையடி பட்டு
சிவப்பாய் நைந்து கிழிகிறது
பச்சை வரியுடல்
முகடுகள் ஏறி தப்பிக்கவே முயலும்
அவள் தலையில் பாய்ச்சுகிறேன்
ஒரு தனித்த குண்டை
தலை சிதற என் துப்பாய்க்கி முனை
ஊதுகிறேன்..

துர்கனவில் அவள் என்னை
தூக்கிப் பறக்கிறாள்
மாயக்கம்பளத்தில்
கடந்து போகும் நிலக்காட்சிகளில்
தெரியும் என்னை
ஓநாய்கள் தின்னுகிறன

பார்க்கவே பார்க்க அவள்
உதடோரம்கசிகிறது
குளிர்ந்து உறையும் ஒரு துளி
குருதி.

No comments: