01 October, 2010

பேதங்கள்

பறக்கும் ரயில் திட்டம். சென்னை வடபழனி நூறடி சாலையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டோவிற்கு நூறு வருட தெம்பிருந்தால் சுவாரஷ்யமான பதிவாய்இருக்கும். இந்த வருடம் செப்டம்பர் இருபத்தி எட்டாம் தேதி எனது மொபைல் போன்மூலம் எடுத்த படம். மாட்டுவண்டி இதன் தனிச்சிறப்பு.



************************************
பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு - மகாபாரதம். இது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரத்த சரித்திரம் என்கிற படத்திற்கான பிடி வாக்கியம். சென்னை நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஷ்டர்களில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகம் ஒரு மட்டமான இசை வடிவம் எனக்கொண்டால் காமமும் குரோதமும் அதன் இரண்டே ஸ்வரங்கள். இந்த இரண்டு ஸ்வரங்களை கொண்டு இவர்கள் ஏற்படுத்தும் ராகங்கள் எல்லாம் - ஒன்று விடாமல் - ஸ்ருதி பேதங்கள். இதில் எந்திரன் ஒரு இரும்பு மகுடம். NDTV யில் கூட செய்தியாகச்சொல்கிரார்கள். வாழ்க நம் தமிழ் பேசும் மனிதர்கள்.
****************************
இரண்டாவது நாள் இன்று. எனக்கு சென்னைக் கண் நோய். கண்களில் மிளகாய் துகள் தூவியது போன்ற துயர். எனது புகைப்படத்தில் போட்டிருக்கும் கண்ணாடிக்கு இதுதான் காரணம். மற்றபடி நான் பந்தா எல்லாம் செய்வதில்லை! ஒரிஜினல் போட்டோ எனது புகைப்படத்தளத்தில் உள்ளது.
******************************

1 comment:

பத்மா said...

adada kanvaliyaa ? athaan romba uththu uththu paarkka koodaathu ...hehehehe! ..anyways get well soon ..