29 December, 2011

புணர்ச்சி நாற்பது - 2




அதரம் இற்றுப்போகும்

விடிகாலைப் பனியில்

விரியிதழ் குவித்தூதி உடைக்கிறது

வெறிகொண்ட தனிமையை..

ஊறிய வெம்மையில்

வெளியேறும் ஆவி

வெண்மையாக்குகிறது சூரியனை.

நிதானமாய் கவிகிற ஒளியை

புணர்ந்து மலர்த்துகிறது

புல்வெளி

மஞ்சள் வண்ண நெருஞ்சிகளை


நினைவெங்கும். பின்

வீழ்ந்து கிடக்கும் மேகத்தில்

கரையுமென் முத்தம்

கொத்திச் செல்லும்

நிதானமிழந்த பால் பறவை

ஒலியுதிர்த்து பகிர்கிறது

முடிந்த கலவியை

வெட்கமுற்று.



No comments: