22 December, 2011

வௌவ்வால் கவிதைகள் - 1







கரும்பழம் சிறகு
விரிக்கிறது
பால்வெளிச்ச
நதிகலக்கும் விசும்புக்கடலில்
கவிதையின்  பிரதான சொல் அர்த்தமிழக்கிறது...

இறகற்ற சிறகின் ஏழ்நுனிகள்
கவ்வி பறக்கிறது துயர தேவதையின்
இரண்டு பால்சுரப்பிகளை
இடைவிடாத குருதிக் கசிவுடன்
கவிதையின் தாளம் உடைந்து தெறிக்கிறது..

விடியும் வரை தூக்கிப்பாய்ந்த
கணம் தாங்காமல் தளரும்
புள்ளி   உடைகிற வானம்
திரும்பிப் பார்க்கையில்
தகித்து பழுத்து மலர்கிறது வெண்சாம்பல் காலம்..

பொருளற்ற
கவிதையின்
சுயமரணம்
மூலம்
நிர்மூலம் தொடங்குகிறது உயிர் கதிர் கசிவில்.



.

No comments: