29 January, 2010

வாழ்வு ஆப் தங்கராசு 2

*******************************

"...... இல்லையென்றால் நான் ஒப்புக்கொள்கிறேன் இது முதல்முறை இல்லையென்பதை. உனக்கு எது தேவைப்படவையில்லை என்பதை எனக்கு தெளிவு படுத்துவதன் மூலம் உனக்கு எது தேவை என்பதை எனக்கு தெளிவாக சொல்லுகிறாய்.."

"இல்லை என்பதை சொல்லவே நான் எப்போதும் பிரியப்படுகிறேன். ஆனாலும் அது எனக்கு நானாக சொல்லிக்கொள்ளும் பொய் என்பதை நீ அறிந்துகொள்வது எனக்கு குறைவான விதத்தில் ஏமாற்றமே"

" எதையும் நீ நேரடியாக சொல்ல மாட்டாயா.. தொடக்கத்தில் என்னிடம் நீ ஐம்பத்து ஐந்து நிமிடங்களுக்கு குறையாமல் பேசுவதில்லை.. நேராகவும் சரி .. கைபேசியிலும் சரி.. அனால் இப்போது உனக்கு ஏனோ நான் பிடிக்காமல் போய் விட்டேன்.."

"ஆமாம்.. நான் ஆரம்பத்தில் உன் பேச்சுக்கு விருப்பப்பட்டேன் .. இப்போழுதும்தான்.. உன் பேச்சு எனக்கு புரியாவிட்டாலும் எனக்கு பிடித்திருந்தது.. இப்போது நீ பேசுவது எனக்கு புரியவில்லை என்றாலும் என் மனதில் ஒருவகையான கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.. "

"பிறகென்ன.. நானும் அதைத்தானே சொல்கிறேன் என்பது ஏன் உனக்கு புரியவில்லை.. நான் சொல்லவருவது என்னவென்றால் நீ பேசுவதும் எனக்கு புரியவில்லை.. ஆரம்பத்திலும் சரி .. இப்பொழுதும் சரி.. ஆனால் எனக்கு பிடிகிறது உன்னை.."

"சரிவிடு.. சொல்லு அப்புறம்... "

"சரி.. அப்புறம்.."

"அப்புறம் என்ன.. எல்லாம் எப்பயும் போல் போய் கொண்டிருக்கிறது.. நீ இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்.."

"படுத்திருக்கிறேன்.."

"யார் கூட.."

"உனக்கு வேற வேலையே கிடையாதா.. ஏன் இப்படி பேசுகிறாய்.. சரி சொல்லு .. நீ எப்போது வருவாய்.."

"எதுக்கு படுக்கவா.. "

"நான் வைத்துவிடுகிறேன்.. உனக்கு கிறுக்கு பிடித்துக்கொண்டுவிட்டது.. "

"பிறகு.. என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.. இப்போது கூடவா நான் பேசுவது புரியவில்லை உனக்கு.. எனக்கு நீ வேண்டும்.. "

"நானா.."

"இல்லாமல் உன் பெரியப்பாவா.. நீதான்.. நீ மட்டுமேதான்.."

"என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்.. நீ பேசுவது எனொக்கொன்றும் புரியவில்லை.. ஆனால் எனக்கும் நீ வேண்டும்.. நீ என்றால் நீ மட்டுமே வேண்டும்.."

"என்னதான் சொல்லவருகிறாய்.. நான் சொல்வதையே நீயும் சொல்வதினால் சரியாய்போய்விடுமா.. எனக்கொன்றும் புரியவில்லை.. உன் மனதறித்து சொல்.. உன்னிடம் எத்தனை முறை கேட்பது..

".......... ஒப்புக்கொள்கிறேன் .. இது முதல்முறை இல்லை என்பதை.."

*********************************

மறுபடியும் முதலில் இருந்தா...என்று வெறுப்பேறி ஒட்டுகேட்பத்தை நிறுத்திவிட்டு தண்ணியடிக்க போய்விட்டான் தங்கராசு.!

********************************

1 comment:

padma said...

இப்படி எத்தனை உரையாடல்கள் காற்று வெளியில் மிதக்கின்றன வாழ்வு செல்போன் காரனுக்குக்தான்.நல்ல நகைச்சுவை
padma