12 March, 2010

wrong

"there should be somethin wrong..." என்றான் அவன்.
"there should be somethin wrong..." என்றாள் அவள்.
"there should be somethin wrong..." என்றது அது.
"where" என்றேன் நான்.
"there" என்றாய் நீ.

................வேறொன்றும் இல்லை நகுலனை மீண்டும் எடுத்தேன்.

********************

இரண்டு நாவல்கள் ஒற்றை மூச்சில் படித்தேன். மீண்டும். ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு மண்ணாய் இருந்திருக்கிறேன்! (இப்ப மட்டும்..?) இப்போதைய என் இருப்பை ஒரு கேலியாக்கி, அற்பத்தின் அற்பமாக்கி, திருவிழாக்கூட்டத்தில் துணியற்றவனாக்கி .... ன்னும் என்நெல்லாமொவாக்கியது அப்புத்தகங்கள். படித்துமுடித்த கணத்தில். இப்பொழுது இந்த மனநிலை இல்லை. பரபரப்பு அடங்கி நிதானமாகிவிட்டேன். ஒரு மனதின் கற்பனைசக்தியை, அந்த கற்பனை மூலம் ஏற்படும் பரவசத்துடிப்பை வாசகனுக்கு பரிமாற்றம் செய்வதில் ஒருநூலும் மனிதர்களின் சாதாரண உறவுமுறைகளில் கீழ் மற்றும் உள் அடுக்கில் நிகழும் மன உரையாடல்களை ஒரு மூன்றாம் ஜாம நாய் குரைப்பு போல குரூரப்புதிர் வழி வெளியேறும் வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு நூலும்.

நித்தியகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

படித்து துன்புறுங்கள் நண்பர்களே.
****************

No comments: