06 April, 2010

உலைக்கலன்


உங்களுக்குத்தெரியுமா நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று. நம் சாலைகள் திருத்திய கணித சமன்பாடுகளால் துல்லியமாக விரவப்பட்டிருக்கிறதென. தினமும் கிலோரின் கலந்த நிலத்தடி நீரால் அச்சாலை தூய்மை படுத்தப்படுகிறதென. மேடுபள்ளமற்ற குறுக்கில் மலைப்பாதைஎன்றாலும் கணவாய்துளைத்து மிக நேர்த்தியாக ஜல்லிகளால் மெத்தபடுத்தப்பட்டதென. வளைவுகளை சகிக்காதாத நேர் பாதையென. குறிப்பிட்ட காலாவதிநாளைக்கொண்டதென. திரும்ப வியலாத ஒற்றைப்பாதை என. உங்களுக்குத்தெரியுமா எல்லா சாலைகளும் நமக்கு வலது புறத்தில் அமைக்கப் பட்டிருக்கிறதென.

********
உங்களுக்குத் தெரியுமா சூளைக்குள் மணல்கட்டிகளைத்தவிர உயிர்ப்பொருள்கள் வாழமுடியாதென. சுவாசிக்க ஏதுவான சூழல் அதனுள் இல்லை என. மணற்துகள் கூட்டமாய் அடைக்கப்பட்ட இடத்தில் சூளை பழுதாகுமென. நிறுத்தப்படாமல் நெருப்பேறும் சூளையில் வேகும் மண்கட்டிகள் உபயோகம் தராதென.

**************

உங்களுக்குத்தெரியுமா தலைப்பென காணப் படுபவைகளுக்குள் நிலம் நிறைத்திருக்கிறதென. அதில் மனிதர்கள் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறார்களென.
அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.

***************************
உங்களுக்குத்தெரியுமா ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒழுக்கத்தின் மீதிருக்கும் தனதான காதலை தங்கள் உள்ளங்கையில் பொங்கச் செய்வார்களென.

*****************************



1 comment:

padma said...

அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.

சுயத்தில் உரசிபார்தல் ஒரு obsession ஆகத்தான் போய்விடுகிறது