15 April, 2010

யதார்த்த சினிமா என்றால்,

இந்தியாவில் உலகத்தரத்தில் எதுவும் இல்லை என்கிறான் பார்த்திபன். ஊழல் கூட உலகத்தரத்தில் இல்லையாம்! உலகத்தரம் என்றால் என்ன என்கிற நியாயமான கேள்வியும் இருக்கிறது. இது பற்றி நான் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.

மற்ற விசயங்களை தொடவில்லை. சினிமாவை மட்டுமே எடுத்துக்கொள்வோம். என்னைப்பொறுத்தவரை இந்தியத்தரம் இருந்தாலே போதும். பதிவர்களில் நான் படித்தவரைக்கும் அங்காடித்தெருவை கொண்டாடியே இருக்கிறார்கள். ஒரு தினசரி இதழில் வரும் செய்திகளைவிட நமக்கு யதார்த்தத்தை அள்ளிக்கொட்டும் ஊடகம் ஏதேனும் இருக்கிறதா?

செய்தித்தாள்களில் வரும் பல்வேறு செய்திகளை எடுத்து வெட்டி ஒட்டி கதை செய்து அதை திரைக்கதையாக்கி இனிமா.. மன்னிக்கவும் சினிமா செய்தால் என்னவென்று சொல்வது. யதார்த்தமற்ற கருத்துருவாக்கங்களை யதார்த்தமாக நம்மை ஊடகங்கள் நம்ப வைத்து வெகு காலமாயிற்று.

காதல் என்கிற படம் வருவதற்கு முன்னாள் இவ்வகையான படங்கள் எத்தனை வந்திருக்கும்? இதில் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் தவிர எத்தனை படங்கள் வெற்றியடைந்தன?

இவர்கள் சொல்லுகிற எதார்த்தம்தான் என்ன. சினிமா என்றாலே மிகை எதார்தம்தானே. மனித உறவுகளில் நடைமுறைச்சிக்கல், தனிமனித இயக்கம் சமுதாயத்தின் மீது கொள்ளும் உறவு, இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் மற்றும் கிடைக்காதவனுக்கும் கிடைக்கிறவனுக்கும் இடையே நிகழும் வன்முறை, நம்பிக்கையின் மேல் விழும் அடியின் வலி போன்று மிகக்கடுமையான பிரச்சனைப்பாடுகளை பற்றியெல்லாம் சொல்லி கடுப்படிக்கப் போவதில்லை.

இதெல்லாம் யதார்த்த சினிமா என்றால், வீடு (அர்ச்சனா!! ) போன்ற படங்களை கலைப்படங்கள் என்று ஒதுக்க முடியுமா? என்னுயிர்தோழன் போன்ற படங்களும் தமிழில் வந்திருக்கிறது. யதார்த்த கதாப்பாதிரங்களை உயிர்ப்புள்ள சினிமாவில் காட்டமுடியாதா.

எண்பதுகளில் வெளியான சினிமாக்களில் எத்தனை எடுத்துக்காட்டுகளை சொல்ல! திஸ் இஸ் சினிமா என்று டைட்டில் கார்டில் முழங்கிய அவள் அப்படித்தான், எந்திரனின் எங்கேயோ கேட்ட குரல்.. இன்னும் எத்தனை...

பணம் சம்பாதிக்க வேண்டும். எப்படி எடுத்தால் ஓடும். எடு அதை. அவ்வளுவுதான். நாம் பார்த்து தீர்க்கிறோம் வெட்கமில்லாமல். ஏனென்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றே நமக்குத்தெரியாது.

வங்காளம், சத்தியஜித் ரே, ஷ்யாம் பெனகல், அக்ரகாரத்தில் கழுதை என்றெல்லாம் உளறவில்லை. சமீத்தில் ஹிந்தியில் வெளியான காமினே, லாஸ்ட் லியர் பாருங்கள். லாஸ்ட் லியரில் அமிர்தாபின் உச்சகட்ட திறமையை உணருங்கள். எனக்குத்தெரிந்து தமிழில் மனித உணர்வுகளுக்கு திரைக்கதை செய்த படம் காதலுக்கு மரியாதை. அதுவும் அந்த படத்தின் நிறைவுக்காட்சி மட்டும்தான்.

பசங்க என்றொரு படம். நல்லாத்தான் இருந்தது. ஒரு பாடல் காட்சி மட்டும். ப்ளூ அம்ரெல்லா (நீலக்குடை) பாருங்கள். குழந்தைகள் படம் எப்படி இருக்க வேண்டுமென்று. இரானியப்படங்களைப் போல அற்புதங்களை எதிர்பார்க்க தேவையில்லை. குறைந்த பட்சம்...

வெண்ணிலா கபடி குழு படம் தான் என் பார்வைக்கு சற்றேறக்குறைய யதார்த்த சினிமாவாக இருக்கிறது. மொத்தத்தில் நான் சொல்லவருவது, இப்போது வரும் யதார்த்த வகைமைகளில் வரும் சினிமாவிற்கும் யதார்த்தத்திற்கும் குறைந்த பட்சம் உங்கள் இருப்பிடத்திற்கும் அதற்கு சமீபமான திரையரங்கிற்கும் இடையே உள்ள தூரம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

************

டிஸ்கு.

சாரு நிவேதிதாவின் வாசனை வீசுகிறது இந்த கட்டுரையில் என்று கண்டுபிடித்தவர்களுக்கு இன்னும் பதினேழு நாட்களுக்குள் சொர்கத்திலிருந்து சுஜாதா மேனகையிடமிருந்து வாங்கிய வாடா மலரொன்றை பதிவுத்தபாலில் அனுப்பி வைப்பார்.

*****************

5 comments:

நேசமித்ரன் said...

:)
ஆதிரன் சார் உங்களின் இறுதி வரி குறித்து,
அந்த இடைவெளிதான் சினிமாவோ ?

எனில் கூத்துகள்.. நாடகங்கள்...

விரிவா பேசுங்களேன்

அப்புறம் உங்களின் கல்குதிரை எழுத்தை பற்றி தஞ்சாவூரில் இருந்து நண்பர் ஒருவர் ஐ எஸ்டி யில் சிலாகித்து வாழ்த்துகளை தெரிவிக்க சொன்னார்

வாழ்த்துகள்

adhiran said...

thanks Nesa Mithiran.

par said...

The irony is while you, who I suspect watch most of the Tamil films, thrash them out, I, who watched only two Tamil films (Angaadi Theru is not one of them) in the last year and half, try to 'defend' them :)

//இரானியப்படங்களைப் போல அற்புதங்களை எதிர்பார்க்க தேவையில்லை.//
That's my whole point. You can't expect 'Paruthi Veeran' to be in the class of 'Children of Heaven'. 'Paruthi Veeran' is a commercial movie made for the Tamil audience. I wonder how much of a success 'Children of Heaven' was in Iran. It may have been a hit movie world wide. But it was still a niche movie. Same like Kaminey, Last Lear, A Wednesday... The market in Hindi is such that the film maker doesn't have to worry about the average mindset of all the movie goers put together. He can choose to cater to only the multiplexes. If at all we get that many multiplexes in Tamilnadu, we 'may' get good films in Tamil too. Or there should be some brave enough producers who are willing enough to produce 'export quality' movies in Tamil. Till then, Bad Luck.

adhiran said...

very right parth.

par said...

Have a look
http://en.wikipedia.org/wiki/Cinema_of_Iran

Commercial cinema in Iran

'The internationally award-winning cinema of Iran is quite different from the domestically oriented films. The latter caters to an entirely different audience, which is largely under the age of 25. This commercial Iranian cinema genre is largely unknown in the West, as the films are targeted at local audiences.'

'These films have similarities with Indian popular cinema'