24 April, 2010

இருப்பு என்கிற வெற்றிடம்


கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************

7 comments:

ராகவன் said...

அன்பு ஆதிரன்,

"நீர் நோக்கி மீண்டும் இம்முறை அவனது வெற்றிடம் நிரம்புகிறது ஒளியூடாடும் உடலிலி மீன்கள்".

அமெரிக்கையான கவிதை ஆதிரன்... படித்து படித்து பிரமித்து போயிருக்கிறேன் உங்களுடைய எழுத்தை படித்து... பத்மாவின் மூலம் ஒரு நல்ல படைப்பாளியின் அறிமுகம் எனக்கு... கடைசி மூன்று வரிகளில் கவிதையின் வீச்சு பன்மடங்காகிறது என்று தோன்றுகிறது...பசியற்ற பொழுது... ஒளியூடாடும் உடலிலி மீன்கள்... அற்புதம் ஆதிரன்... தொடர்ந்து படிக்கிறேன்... வருகிறேன்... நமக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆதிரன்...

அன்புடன்
ராகவன்

adhiran said...

thanks ragavan. tips !!?

நேசமித்ரன் said...

நமக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆதிரன்...

for me too

:)

adhiran said...

thanks nesamithran.

tips again!?
enaiya vechu kaamadi keemadi pannalaiye!?

padma said...

நா டிப்ஸ் கேட்டா தான் காமெடி .
கேட்டவங்கலாம் ஜாம்பவான் .நடத்துங்க

par said...

This is the best ever from you.

adhiran said...

thanks parth.