14 April, 2010

விக்ருதி

தையில் பிறந்த இந்த ஆண்டை மறுபடிக்கும் சித்திரையில் பிறக்கவைக்கிறது நடைமுறை. தவிரவும் வருடத்திற்கு ஐந்தாறு வருடப்பிறப்பை கொண்டாடுகிறது சுதந்திர இந்தியா. என் வீட்டில் தெலுங்கு பேசுகிறேன். எந்த பரம்பரையில் இருந்து வந்தேனென்று தெரியவில்லை. இருந்தாலும் தமிழன். கனவும் சிந்தனையும் தமிழில்தான் நிகழ்கிறது என்பதே நான் தமிழன் என்பதற்கு அடையாளமென கொள்கிறேன்.

எனவே,

இன்று 14.04.2010 புதன் கிழமை, காலை 06.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அம்மாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீனராசி, மேஷ லக்னத்தில் நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்ப ராசியில் புதன் ஹோரையில் வைதி ருதி நாம யோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்ச பட்சியில் மயில் துயில் கொள்ளும் நேரத்தில் புதன் தசை ராகு புத்தியில் (ங்கொய்யால ....) பிறந்ததாக சொல்லப்படும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது விக்ருதி வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.

இன்று தினமணி இதழில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதின் விக்ருதி பற்றி ஒரு சுவாரஷ்யமான கட்டுரை இருக்கிறது.

அனேகமாக அடுத்த விக்ருதியில் சீனா நம்மை இலங்கை போர்தளத்திளிருந்து நம்மை தாக்கலாம். தமிழ் கடற்கரை மிக நீண்ட வருடங்களுக்குப்பின் போர்கோலம் பூணலாம். நம் பேரப்பிள்ளைகள் ஜாதிகள் மறந்து தமிழன் என்கிற உணர்வுடன் வேறுவழியில்லாமல் தமது முன்னோர்களின் வீரத்தை(!) மெச்சியவண்ணம் போரில் வீரமரணம் அடையலாம். லாம்...லாம்... லாம்..ம்ம்.ம்ம்.

*************************

***********************************

No comments: