12 August, 2010

ரசமிழக்கும் கண்ணாடி 3


some flashes:

ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது... அன்புள்ள மான்விழியே - பாடலில் ஜமுனாவின் கண்களில் மிளிரும் நூறு சத காதலை தொலைக்காட்டினார்கள். புல்லரித்துப்போய் நின்றேன். எடிசன் பல்பு எரிவதை பார்த்தவுடன் எப்படி ஆச்சர்யத்தில் பார்த்திருப்பானோ அந்தமாதிரி!
*************
வெவ்வேறு சந்தர்பங்களில் சமீபத்தில் மூன்று ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். மனதிற்கு இனியவர்களான ஏஞ்சலீனா ஜோலி யும் கேமரூன் டயஸ் உம் தங்களது முகங்களை வயோதிகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். வருத்தமாய் இருக்கிறது. day and knight, salt, the last air bender ஆகிய மூன்று படங்கள். முதல் படத்தில் டாம் க்ரூஸ் டயஸ் இணைகள். இரண்டு படங்களும் அமெரிக்காவின் பிரபல ஏஜென்சிகளைப் பற்றியவை. தங்களது ஆட்களுக்குள் ஏற்படும் ஈகோ அல்லது ரசிய/ரகசிய உளவுகளின் செயல்பாட்டு முறிப்பு என்பது போன்ற மிக மிக ஆதி காலத்து கொடுமைகள். ஆனால் தொழிநுட்பம் பிரமிக்க வைக்கிறது. ஆக்ஸன் பிரியர்களுக்கு கொண்டாட்டமான படங்கள். மூன்றாவது ஷ்யாமளனின் படம். ஐந்து பூதங்களும் மிக உயர்வகை தொழில்நுட்பத்தில் சண்டையிட வைத்திருக்கிறார். தீ அனைத்தையும் அடக்கி ஆள நினைக்கிறது. படத்தின் கடைசி பிரேமில் தோன்றும் ஒரு பதின்மச்சிறுமியின் முக பாவம் கொடுத்த காசுக்கு போதுமானதாக இருந்தது. இதில் சொல்லாமல் விட்ட மற்றொரு படம் deception. ரூம் போட்டு யோசிப்பது என்றால் என்னவென்று தெரியவேண்டுமென்றால் இந்த படத்தை பரிந்துரைக்கிறேன்.
**********
நண்பன் ஸ்ரீதர் தனது சகாக்களான ஏறக்குறைய முன்னூறு உதவி இயக்குனர்கர்களை ஒன்று சேர்த்து ஒரு திரைப்பட நிறுவனத்தை சாப்ளின் என்கிற பெயரில் தொடங்கி உயர் தொழில்நுட்ப வல்லுனர்களால் தங்களது முதல் படத்தை தயாரிக்கப்போவதாக சொன்னான். நல்ல மற்றும் உருப்படியான முயற்சி. பிரபல வல்லுனர்கள் தங்களது இலவச சேவையை முதல் படத்திற்கு அளிக்க முன்வந்துள்ளது அவர்களுக்கு பெருமை. வாழ்த்தும் நன்றியும்.
****************
திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு பயங்கரத்தை உணர்ந்தேன். ஒருமணிநேரத்தில் நான் கண்ட எந்தவொரு தனியான பெண்ணும் சும்மா உட்காரவில்லை. எல்லோரும் செல் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய நான் எண்ணியது மட்டும் அறுபத்திமூன்று பேர்கள். இணையுடனோ உறவினர்களுடனோ வந்த பெண்களும் முக்கியமாக பதின்ம வயது பெண்கள் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆக மக்களே இனிய ஆண் மக்களே எந்த பெண்ணையும் நீங்கள் தனிமையில் விட்டு வைக்கவில்லை என்பதை நினைக்கும் போது பெருமையாய் இருக்கிறது என்று சொல்ல ஆசைதான். ஆனால் நான் பார்த்த ஆண்களில் மூன்றே பேரைத்தவிர யாரும் செல்லில் பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆக ... இனிய பெண்களே அப்படி யாருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.! இனி cellphone அடுத்த தலைமுறையினரின் ஜீனில் இருக்கும். பிறக்கும்போதே மினியேச்சர் டவரை காதுக்கு பின்னே துளைபோட்டு செருகிவிடுவார்கள் போல. சில பையன்கள் பத்து சிம் கார்டுகளை வைத்திருப்பதை பார்க்கும் பொது கொஞ்சம் உதறலெடுக்கிறது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிற போது ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவது இந்த காலகட்டத்தின் திணிக்கப்பட்ட பொதுவிதி. அதே சூத்திரம் இந்த ஆண் பெண் இணைதேடும் நிகழ்வுப்போக்கிலும் இருக்கிறது. அதற்கென பெருமளவு உபயோகமாய் இருப்பது தகவல் தொடர்புகளுக்கான விஞ்ஞான தொழில் நுட்பங்கள்.
***************
திருவரங்கம் சென்றேன். காவிரி குளியல். சிற்றுண்டி உண்பதற்கு தேடிச்சென்ற கடை பெயர் "பில்டர் காப்பிகடை ". அருமையான நெய் கேசரி மற்றும் கீரை வடையுடன் ரகளையான காப்பி. குளித்த களிப்பில் மற்றும் களைப்பில் உண்டி தேவாமிருதமாய் இருந்தது.
***************

4 comments:

Kousalya Raj said...

//ஏறக்குறைய நான் எண்ணியது மட்டும் அறுபத்திமூன்று பேர்கள்//

நல்ல ரசனையான வேலைதான்...!

adhiran said...

yes kousalya..

that was an inresting game I alway do!!

thanks :-))

பத்மா said...

யாரோ ரயில் நிலையம் செம போர் என்று புலம்பியதாக நினைவு... அந்த வெறுமையை போக்க புது வழிகள் கிடைத்தாயிற்று போல
enjoyyyyyyyyyyyy

மாற்று ஏற்பாடாக கண் படும் இடமெல்லாம் ஜமுனா படம் பொருத்தினால் ,வேலை முடிந்து கூட வீடு செல்ல மாட்டீர்கள் .உயர் அதிகாரிக்கு suggest பண்ணலாம் என்று தோணுகிறது ..
jamunaphile !!!!!

பத்மா said...

interesting game i always do!!! note this point your honour ....