20 December, 2010

ஒரு குறுகிய பிணிக்காலம்

உடம்பெல்லாம் மாரியாத்தாள் உழுது போட்டிருக்கிறாள்! பார்பதற்கு நட்சத்திரங்களும் கிரகங்களும் சிதறிக்கிடக்கும் இருள் வானமாய் கிடக்கிறது. ஐந்தாம் நாள் இன்றுதான் சற்று வலியற்ற விரலசைவு சாத்தியமாகியது. இது அம்மை அல்ல வெம்மை. எனது ஊர் மார்கழி கொஞ்சம் காப்பாற்றியது. சும்மாவே நம்ம மூஞ்சி அப்பிடி இருக்கும்.. இதில் இன்ச்சுக்கு ஏழு புண்ணு.. சகிக்கவில்லை! ஆனால் வீட்டில் கிடைக்கும் கவனிப்புக்காகவே இப்படியே கிடக்கலாம் போல.

மற்றபடி இந்த வலிவரவால் எனக்கு இரண்டு நல்லதுகள்: ஒன்று பதினைந்து நாட்கள் விடுப்பு. இரண்டாவது உடலின் தொடர்வலி அனுபவம். இது ஒரு வகையான பிரக்ஞை அற்ற தத்துவப் புரிதலுக்கு வழிசெய்கிறது. பின்னிரவின் பேரமைதியில் கடும் மவுனத்தை கேட்க்கும் பயங்கர அனுபவம்..

நல்லதுக்குத்தான் எல்லாமுமே.