26 January, 2011

கனவு தின்பவன்

எல்லாம் கிடைத்துவிடுகிறது
நொடிகளுக்குள்

ஒரு தீவு
பசிய ஒளியுடன் ஆம்பர் மணக்கும்
குளிர் மரங்கள்

ஆழ்கடல் கூட்டிச்செல்லும்
குட்டிதிமிங்கலம் பேசும்
நீலச்சுடர் கடல் கதைகள்

நிகழ்த்திய சாகசங்களுக்கு கிடைக்கும்
முடிவுறா கன்னி முத்தம்

ஒரு நாடு அல்லது இருக்கும் நாட்டின்
நிரந்தர அமைதியும் இனிய மாலை
ரோஜாக்காடுகளுக்குள் புணர்ந்து கொழிக்கும்
மனிதர்களும் தடைச்சான்றுகளை
கூளங்கலாக்கி எரித்துகுளிர்காய
மக்கள்களை அழைக்கும் மென்னரசு


எதைக்கேட்டாலும் தரும்
சக்தி கொண்ட
ஒரு கடவுள் அதனிடம்
ஒன்றும் வேண்டாம் என
அடம்பிடிக்கும் குழந்தை

புகையிலை மணக்கும் ஈரப்பெண்
நட்சத்திரங்களை கடக்கும்
அவளுடனான நீண்ட பயணம்

இன்னும்
இன்னும்

நிறைய கிடைக்கும் நொடிகளில்
நிறுத்தத்தில் எரியும் சிவப்பு விளக்கு
மாறும் வரை.

3 comments:

Raja said...

கனவுகளில் எல்லாமும் கிடைத்துவிடுகின்றன,,,நீண்ட நாளைக்குப் பிறகான கவிதை...நன்றாக வந்திருக்கிறது...வாழ்த்துக்கள் ஆதிரன்...

பத்மா said...

superb

க. சீ. சிவக்குமார் said...

என்னே பிரமாதமான கனவுத் தருணம்