01 February, 2012

வவ்வால் கவிதைகள் 2



பசிய நிசி
நிலவின் கொள்குள
மீன்தாவ
விரல் கொக்கியில்
பற்றி யிழுக்கிறது
புள் வடிவ பாலூட்டி

நிதானம்
கடவுளின் ருசி
தெறிக்கிற நீர்த்துளிகளின்
முனையில்
வளர்ந்து
நீள்கிறது
சாத்தானின் நகம்

பிரதி
பலிக்கிற
பிம்பம்
வவ்வாலின் வாலினை
மென்சுக்கானாக்குகிறது

பிறகான
தவிப்புடன்
பறக்கத்தொடங்குகிறது
மீன் 

வவ்வாலின் திசையில். 




No comments: