04 April, 2011

சொற்களின் நதி..

நதி ... அமைதியற்று தவிக்கிறது. அதன் தேவைகளை தீர்மானித்த பின்னே தனது பாதைகளை தீர்மானிக்கிறது. பாதைகளின் திசையறிவு குரூரமானது அது நினைவுகளை நொதிக்கசெய்து விடுகிறது. போதம். நதியின் பாதைகள் பிளவுபடுகிறது. நதி ... பிளவுபட்ட பாதைகண்டு குதூகலிக்கிறது தனதான ஆயிரமாயியிரம் நீண்ட விரல்கால் திசைகளை உண்கிறது. தீர்ந்து போன திசைவெளியில் தானே திசையென தன்னையே தொடர்கிறது. மோகம். அதன் ஒலிவாங்கும் சவ்வில் சிறு வெடிப்பு. நிதானம் மாற்றுகிறது. நதி... பாதையற்ற சமவெளியில் பரவுகிறது. காவு கொள்கிறது வெளியலையும் உயிர்மரங்களை. நீரின்றியமையாத அவைகள் நீரை சபிக்கின்றன. அதன் வேர்களை கற்களாய் உருட்டி நதியின் பாதைகளில் உருட்டுகின்றன நிரம்பிபரவுகிறது கூலாங்கற்கள் .. நதி .. ஒவ்வொரு கல்லின் உருலளிலும் சமனிழக்கிறது தொடர்ந்து.. நதி ஆனந்த கூத்தாடுகிறது.



......................................................................... நண்பன் வசுவுக்கு.



No comments: