06 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 3


********

29.04.1997
00.06
போன வெள்ளிக்கிழமை தேனி வந்திருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நிறைய சிகரெட் பிடிக்கிறார். ரம் இல்லாமல் இரவு தூங்குவது இல்லை. அம்மாவுக்கு பழகிப்போய்விட்டதாம். அப்படியே உன்னையும் பார்க்க வரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. காலையில் வந்து அன்று இரவே ஊர்திரும்ப வேண்டியதாகிவிட்டது. நாள்முழுக்க வீட்டிலேயே இருந்தேன். காலையில் அம்மா தக்காளியும் உழுந்தும் போட்டு சட்டினி அறைத்திருந்தார்கள். சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிற்று. எனக்கு அந்த சட்டினி பிடிக்கும் என்று எபோதுமே அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்பா மிகவும் சோர்த்து இருந்தார். உடல் ரீதியாகத்தான். மனம் எப்பொழுதும் போல உற்சாகம். சுகவாசி. சுத்தமாக மரண பயம் இல்லை. எனக்கு எப்பவும் போல நிறைய மரண பயம். யோசித்துப்பார்த்தால் அங்கயற்கண்ணி, ஒவ்வொருவருக்கும் தன் மரணத்தை விட தன் தகப்பனின் மரணம்தான் அதிக பயத்தை தரும்போல. அப்பா இறந்துபோவதைப்பற்றி என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. ஆனால் உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஒரு தகப்பனால் மரண பயத்தை விட அதிகப்படியான பயத்தை தரவியலும் என்பதை அப்பா நிரூபித்ததை. அவர் முதலில் கண் தானம் செய்தார். யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்த வருடமே அவர் புகைப்படம் ஒன்று நாளேட்டில் வந்திருந்தது. அவர் தன் உடலை தானம் செய்திருந்தார். மருத்துவக்கல்லூரிக்கு. ஆராய்ச்சிக்கு உதவுமாம். நடுங்கிப்போய்விட்டேன். நாளொன்றுக்கு அனாதைப்பிணங்கள் எத்தனை கிடைக்கின்றன தெரியுமா அரசு மருத்துவமனைகளுக்கு. தமிழ்நாட்டில் மட்டும். இவரின் அறம் ஒரு பிரயோசனமும் இல்லாததது என்பதை எப்படி சொல்லுவேன். தேனிக்கு நான் போயிருந்தபோது நல்ல வெயில். கோடை ஆரம்பிப்பதற்கு முன்னமே இவ்வளவு வெயிலா. சென்னையில் இருப்பது போல உணர்ந்தேன். தேனியில் இந்தளவுக்கு வெயில் அடித்தால் உலகம் வேறு நிலைக்கு மாறுகிறது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். பூமிக்கு சனிபிடிக்க தொடங்கிவிட்டது. நீ சொன்ன மாதிரி கவிதை எழுத முயற்சி செய்துபார்த்தேன். சரியாக வரவில்லை. அவற்றின் கருக்களை சிறுகுறிப்புகளாக பத்திரப்படுத்திவைக்கிறேன். எப்பொழுதாவது உன்னிடம் காண்பிப்பதற்கு.

12.12.1998

00.07

குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். ....................................................................................................



..........................................................................................................குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். .................................




இன்றுடன் மூன்று வருடங்கள்.........


02.11.96

00.07


டிசாசொவுடன் சென்னையில் இருந்தேன் இன்று. நம்பமுடியவில்லை. டிசாசோ சென்னைக்கு வந்திருந்தாள். நேராக வீட்டிற்கு வந்து கதைவை தட்டும் போது ஆறேகால் மணி. என்ன கொக்குப்பையா காலையில் சீக்கிரம் எழும்பும் பழக்கத்தை மறந்துவிட்டாயா.. என்கிறாள். கனவு என்றுதான் நினைத்தேன். போர்ச்சுகலில் இருந்து சாந்தோம் ஆலயத்திற்கு வரும் பாதிரியை பார்க்க வந்திருக்கிறாள். அவளுடன் வந்தவர்களை சர்ச்சுக்கு அனுப்பிவிட்டு இங்கே வந்துவிட்டாள். அவள் முதல் முதலில் என்னை கொக்குப்பையா என்று அழைத்தபோது நான் எட்டாம் வகுப்பு முழுப்பரிச்சை விடுமுறையில் இருந்தேன். அங்கயற்கண்ணி பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். நான் ஒன்றும் அவ்வளவு உயரமான பையன் இல்லை. ஆனால் எந்நேரமும் ஒருகாலைத்தூக்கி எதன் மீதாவது வைத்து நின்றுகொண்டிருப்பேன். ஒற்றைக்காலில் நிற்பதனால் கொக்குப்பையன். அவள் அப்படி சொல்லும் வரை அப்படி ஒரு பழக்கம் இருந்ததை நான் உணரவே இல்லை. அதன் பிறகு அதை உணர்ந்தாலும் அந்த பழக்கம் என்னை விலகவில்லை. இந்த விஷயம் அறிந்த பையன்கள் ஒற்றைக்காலைத்தூக்கி ஒன்னுக்கு போகும் நாயை பகடி செய்து என்னை நாயப்பன் என அழைக்கத்தொடங்கினர். இரண்டு பேரும் கிளம்பி நடராசன் கடையில் இட்டிலியை சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சாந்தோமில் இறங்கினோம். புனித தாமசின் பிணத்தின் மேல் நின்றிருந்த வழிபாட்டு ஆலயம். மிகஅழகான கட்டிடம் அங்கயற்கண்ணி. 'பென் துமா' வென போர்த்துகீசியர்களால் ஆயிரத்து ஐநூற்று இருபத்து மூன்றாம் வருடம் முசல்மானிடமிருந்து மீட்டு கட்டப்பட்ட தேவாலயம். 'பென் துமா' வென்றால் என்னவென்று கேட்டேன். தாமசின் வீடு என்று அர்த்தமாம். தாமஸ் உள்ளூர் அரசியலுக்கு பயந்து வீட்டை விட்டு நாலு கிலோமீட்டர் தெற்கில் இருக்கும் அடர்ந்த காடுடைய குன்றின் நம்ம ஊர் முருகன் சாமி ஸ்டைலில் சென்று தஞ்சம் அடைந்து அங்கிருந்தவாறு புனிதப்பணி செய்து நல்லபேர் பெற்று பின் சொந்த வீட்டில் அடக்கம் பண்ணிவிட்டார்கள். இப்பவும் அந்தகுன்று வீடுகலடர்ந்த கரடாக செயின்ட் தாமஸ் மௌன்ட் என நெரிசலடைந்து கொண்டிருக்கிறது சென்னையில். கடற்கையில் அலைந்தோம். மணல் சிப்பம் ஒன்றை செய்தேன். எப்பொழுதும் போல ஒரு குடிசை. அதில் ஏறி மிதித்து தன் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தினாள் டிசொடா. பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்து அரைப்போத்தல் ரம்மை பக்தவச்சலம் வருவதற்கு முன்பாகவே குடித்துவிட்டு கண்களில் நீர் வழிய வழிய அழுதேன்.

*******************************

தொடரும் ....

**********************************

No comments: