12 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 4

******************

சன்னாசியின் இரண்டாயிரத்து நான்காம் வருட நாட்குறிப்பில் மடித்து வைத்திருந்த காகிதத்தில் அவனது கவிதைக்குறிப்பு. இதற்கு அவன் திருமறை ஒன்பது என தலைப்பிடிருந்தான்.


*****************


ஏதுமற்ற பால்வெளி

சாத்தியமின்மையின் நிதர்சனம்

நிழல்தேடிய பருப்பொருளின் இயலாமைசிரசின்

செங்குத்தாய் வெப்பரேகை

பகலின் மொத்த விசாலமும் அடங்கும்

ஒற்றைக்கணம். குறுக்கீடுகள் அற்ற

பாதையின் நடக்கிறேன் துயரம் தோய்ந்த

பாடலாய். எதிர்வருகிறீர்கள் எல்லோரும். நான்

தனியாய் எந்தவொரு துணிவு கனிவு

மற்றும் ஏதுமற்ற பால்வெளியுடன்

உங்களை எதிர்கொள்கிறேன்

உங்களுக்கென்று ஒன்று இருந்ததை

மட்டும்சுட்டிக்காட்டியவண்ணம்

இருக்கிறீர்கள் என்பதைப்பற்றிய ஞானம்

எனக்கில்லாமல் ஒரு பனையேறியின் கவனத்தை

பெற முயற்சித்துக்கொண்டிருபேன்

பனையேறி ஒரு பெண்ணாய் காணும்

நாளில் என் மரணம் உறுதிசெய்யப்படும்

அல்லது எனக்கு நிதமும் ஒன்பது கலயம்

குருதி பனையிலிருந்து பீய்ச்சி தரப்படும்

என்பதான சமிக்கையை பெற

ஒரு சபித்தல்

நிகழும் பின்னான ஒவ்வொரு

முழுநாளும் பனைக்குருதியின்

வெறியால் மழுங்கடிக்கப்படும். நான்

மகிழ்வுகொண்ட பேரிண்பனாக

என்னைக்கற்பனைசெய்ய உதவுமது. என்

பல்லாங்குழிப்பருவம் மேலெழும் நான்

உங்களுக்கு பல்லாங்குழி வித்தையை

அறிவிக்க முயல்வேன் சகலமும் சுலபமும்

இனிமையும் ஆகும் நடைபாதையில்

முற்கள் முளைக்கும் சிறு நெருஞ்சியும் பூக்கலாம்

உங்களுக்கும் அது

பிடிக்கும்அனைத்தும் உணர்ந்த ஞானியென

நான் என்னை அறிவித்துக்கொள்வேன்.

நீங்கள் அனைவரும் மேலும்

என்னை வெறுக்கத்தொடங்குவீர்கள்

அதையறியாமல் நான் பனையேறக்கற்றுக்கொள்வேன்

பனைக்குருதி பீய்ச்ச நான் தனிமையில்

பனை நாடுவேன் நீங்கள்

பனைகள் மூன்றாம் சந்ததிக்கானவைகலென

கதறித்துடிப்பீர்கள். ஏதுமறியாதவன் போல

இருந்து கொள்வேன் எனக்குத்தெரியும்

காலத்தின் வேகம் என்றவாறுநீங்கள்

சுயமாக புலம்பித்திறியும் மனப்பிரழ்வாளநென

என்னை பிரகடனபடுத்துவீர்கள். அதையேற்று

குடும்பங்களும் தெருக்களும் சேர்ந்த

கிராமமொன்றின் நாற்சந்தியில்

மனிதத்தன்மையற்றவனாய் அறியப்படும்

அல்லது வெயிலையோ மழையையோ அணிந்தவுடலுடன்

அலையக்கூடும் வேளையில் அடுத்தது

என்னவென்று நான் மறந்துபோவேன்.

திரும்பப்பெறவியலாதஞாபகச்சிக்கலுக்குள்

அமிழ்ந்துபோவேன். பெயரற்ற வட்டமும்

வெள்ளையுமான பிரகாச உஷை

கொண்ட பள்ளிக்குழந்தைகளின் குறிப்பில்

நிலவென அறியப்பட்ட பெரிய

கோளம் நேர்க்கோட்டில் முகில்களை

விரட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில்

அக்கிராமத்தின் தாய்நகரின்

அரசகட்டிலில் அமர்ந்தவனின் அறிவிப்பால்

உங்கள் முதுகு மீது கசையடி விழும்

கடவுள் எனும் சொல்லின் தூதர்கள்

அரசன்தான் மருவிக்கடவுளானான் என்று செய்தி

சொல்லிய கணம் நான் எனதான எட்டாவது கலயம்

தேடி மூன்றாம் தெரு கடப்பேன். கடவுள்

மருவி அரசனானான் என திருத்திய பதிப்பில்

அச்சுப்பிழை குறிப்புடன் நாழிதல் கண்டு

சுயமிழந்து பிறழ்வாய் அரற்றத்தொடங்குவேன்.

தாய்நகரிலிருந்து பெருங்கலயம் தரவாகி

பெருமாள் கோவிலின்

முச்சந்தியில் வைக்கப்பட்டிருக்கும். பெருங்கலயம்

மரணமென பறையப்பட்டிருந்த அவ்வூரின்

ஏழாம் தெரு கடந்து ஐந்தாம் கலயத்தில்

நுழைந்து நுழைந்து நுழைந்து

வெளியேற வெளியேற வெளியேற

அடுத்தது என்னவென்று உங்களுக்கு

ஏற்ப்பட்ட குழப்பம் எனக்கு நிகழாவண்ணம்

நான் நான் நான் நான் நான்

ஐந்து முறை நீங்களாக

மாறியதும் ஆறு ஏழு எட்டு தொடர்ந்து

ஒன்பதாம் கலயம் என்னை உங்களிடமிருந்து

மீட்டுத்தரும். பின்பு நான் முற்றிலும்

புதிய வூரில் ஆதி மொழி பேசும்

ஆண்களிடம் நாணயங்கள் பெற்று உடலின்பம்தரும்

பெண்ணாயிருந்து அவர்களுக்கெதிராக வெளியேறி

சகலமும் துறந்த முனிவனொருவனின் பதிவிரதையாவேன்

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வென

முனிவன் உச்ச நேரத்தில் உளரும்

போதுகடவுளென அரசன் வருவான்.

வாளுருவி முனிவனைக்கொன்று

என்னை அந்தப்புரம் சேர்ப்பான் பகலிரவற்ற

புணர்வில் அமைச்சனின் மகள்

எனக்கு பிறப்பாள் என தோன்றும்

கணம் சாலையின் ஓரப்பூன்காவில் மண்

கிளரும் கிழவன் தன் பால்யத்தில் செய்த

வன்புணர்ச்சியின் ஞாபகத்தில்

வெடித்த சிரிப்பொன்றாய் மாறி

புல்வெளியில் நடக்கத்தொடங்குவேன்.

இயலாமையால் தொடங்கிய நாளின்

இறுதியில் இரண்டு மைதுனம் கழித்து

தூங்கமுடியாமல் பிரபஞ்சத்தை யோனியாக்கி

பால்வெளியில் வெளியேறியபின் நீங்கள்

பெண்களாய் மாறி நீண்ட அங்கிகள் அணிந்து


வெகுதொலைவில் மனப்பிரழ்வாளனான என்னை
பற்றி சிந்திக்கக்கூடும் என்கிற கற்பனையொன்றின்
விளிம்பில் நான் தூங்கத்தொடங்குவேன்
விடியும் பொது மீண்டும் ஒற்றைப்பாழ்வெளி
சாத்தியமின்மையின் நிதர்சனம்
நிழல் தேடும் பருப்பொருளின் இயலாமை.
வெயில் நிழலற்ற மரமற்ற உங்களை
நான் நான் நானென எதிரொலிக்கும் மலை
பின்பு எல்லாம் முடிந்த உங்களால் யூகிக்கவே
வியலாத தனிமை ஆகியவற்றின் முன்னிலையில்
உங்களை கதறக்கதற புணர்ந்த இந்த பாடலை
முடிவிற்கு அழைத்துவருவேன். பின்பு நீங்களும் நானும்
எதிரெதிர் திசைகளில் கடந்து செல்வோம்
இறைவன் ஆண் பெண் எனப்படுகின்ற பருப்பொருளை
படைத்துக்கொண்டிருப்பான் சொற்கள் மீது எந்த
நம்பிக்கையையும் இழக்காத என்னைப்பார்த்து
வியந்தவாறு.



******************************
தொடரும்
***************************

No comments: