27 February, 2010

குளம்

தாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.

**************

சூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.

****************

பலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்!

*********************

No comments: