24 February, 2010

சாயம் போன நிலம் 1

அந்த மண்ணின் தரம் ஏதுவாக இருந்தது தேவையான அளவை சேகரித்துக்கொண்டேன் அந்த இடம் ஏதுவாக இருந்தது தேவையான இடத்தை சுத்தம் செய்து வேலியிட்டேன் அவன் சொன்னான் அந்த இடம் ஏதுவானதென்றுஅங்கு ஓர் ஆழ்துளை செய்து தேவையான நீரைஎடுத்துக்கொண்டேன். அந்த மரம் காய்ந்து போனதுஅதை வெட்டி தேவையான விறகுகளை பத்திரப்படுத்தினேன்தேவையான அளவு இடத்தில்தேவையான அளவு மண்ணைக் கொட்டிதேவையான அளவு நீரை சேர்த்துகுழப்பி பரப்பினேன். உயிர் குடிக்கும் குரல் கொண்டுஒரு நாடோடியின் பாடலை முனுமுனுத்தவாறு நீஅந்த பரப்பில் கீறலிட்டாய். காயவைத்து ஒவ்வொன்றாய் அடுக்கி தேவையான அளவு விறகு வைத்து எரியூடினேன். மண்சுட்டு கல்லானது இப்போது தேவையான அளவு இடமில்லைஇப்போது தேவையான அளவு மண்ணில்லை இப்போது தேவையான அளவு நீரில்லைவேறு இப்போது வேறெங்கோ துளையிட அவன்போய்விட்டான்நாடோடிப்பாடல் நாட்டுப்பாடலானது இனி எப்போதும் தேவையான அளவு கல் இருக்கும் என்னிடம்.
**************
இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய் அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும் பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள். தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி. ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.

*************

1 comment:

chandra said...

சிறுமிக்கு காகிதத்தை கொடுத்துவிடலாம்
கப்பல் ஓடும் தெரு மிக அழகாக நினைவில் விரிகிறது ஆதிரன்.
மாற்றுக்கவிதை அருமை.