25 June, 2010

தனிமைக்குள் புகுந்த காண்டாமிருகம்



நண்ப
நேசக்கரம்நீட்டுமுன் விரல்களை
ஒடித்து குருதி கொப்பழிக்க கடவாயில்
திணித்து மேல்லுகிறேன்
வலி பற்றிய பிரக்ஞை என்னிடமில்லையெனும்
பார்வையை ஒரு இறகுபோல மிதக்கவிடுகிறாய்
காற்றில்..
எனது குரோதம் நீ எப்பொழுதும்
அறிந்ததுபோல் சொற்கலாலானவை
அவற்றிக்கு ஜீவனில்லை பாவமில்லை
துளி கருணையும் உன் மேல் அது கொண்டாடாது
கேள் ..

நண்ப
மரணித்தவனின் ஜீவனுக்கும் எனக்கும்
தொடர்பில்லை மாறாக நான் ஒரு
எளிய கொலைகாரனென அறிவாய்தானே
நான் ஒரு

சொல்
செயல்
வியப்பு
அடிமை
தனிமை
தூரம்
கத்தி
நிழல்
நான்
விருப்பம்

காலமற்ற நேரமற்ற தூரமற்ற விசும்பில்
எனது கொலையாயுதத்தை உபயோகிக்கிறேன்
அது உன்னை தவிர வேறரியாது
என் இலக்கு நீ

நண்ப
சாந்தம் கொள் நிதானமாய் மரணிக்க
பழகியதுதான் துர்மரணம் உனக்கு
எனக்கும்தான்.. கபால மோட்சம்
சொல் விடுதலை.
சொல் விடுதலை.
சொல்விடு தலை.

நண்ப
விடுதலை சொல்
என் பானம் ஏற்கனவே தைத்து
விட்டது.

************

1 comment:

பத்மா said...

சொல் விடுதலை.
சொல் விடுதலை.
சொல்விடுதலை.


கிளாஸ் ஆதிரன் .