19 October, 2011

கடவுளின் வினை.




அவன் அமர்ந்திருந்தான்
மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை
ஆனால் மற்றவர்கள் அனைவரும்
அவனுக்காக அலைந்துகொண்டிருப்பதாக ...
அதாவது சிலர் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்கள்
அவனுக்காக. சிலர் ஒரு பெரிய பண்ணையில்
சுவை மிகுந்த பன்றிகளை வளர்தெடுத்தர்கள்
அவனுக்காக சிலர் உணவு தேடும் மனிதர்களை
காரி உமிழ்ந்தார்கள் சிலர் காடுகளிடையே
பயணம் செய்து பசிதீர்க்கும் பூச்சிகளை
சேகரித்து பதப்படுத்தினார்கள் சிலர்
குதிரைகளுடனும் பசுமாடுகளுடனும்
சல்லாபத்தில் ஈடுபட்டார்கள்... ஒருவன்
குடிக்கவும் மற்றொருவன் ஈட்டியால்
மீன்களை வேட்டையாடவும் வேறொருவன்
சுயமைதூனம் செய்யவும் கூட இருந்தவன்
தானியங்களை பறவைகளுக்கு வீசவும்
மற்றும்
அனைவரும் அவனுக்காக
எதையாவது ஒன்றை செய்தவண்ணம்
இருந்தார்கள் ....

அவன் அமர்திருக்கிறான்
அவர்கள் செய்வதெல்லாம் எளிய
கேள்விகளாய் மாறி அவனது
கூர்மையான நாசித்துவாரத்தில்
கவுச்சியின் வாசமென நுழைகிறது...

மனிதர்கள் அயர்வுருகிரார்கள்
மனிதர்கள் உற்சாகமடைகிரார்கள்
மனிதர்கள் வாங்குகிறார்கள் எதையாவது
மனிதர்கள் நுகர்கிறார்கள் வாங்கியவற்றை
மனிதர்கள் திருப்தி அடைகிறார்கள்

அவன் அமர்ந்திருக்கிறான்
புதிய சீருடையுடன் ஒரு இளம் ஆண்
அவனை பார்க்கிறான்.. அவனை எங்கோ
பார்த்த ஞாபகத்தை பொருட்படுத்தவில்லை
அவனது மூளை ஏற்கனவே
சொல்லப்பட்டது..

தன்னிடமிருக்கும் ஒரு சிவந்த
மெல்லிய மொட்டுகளை கொண்ட
ருசியரியும் நாவை சுழற்றி சொல்லாக்குகிறான்..
வார்த்தையின் முடிவில் வளைந்து நிற்கிறது
கேள்விக்குறி ..

மௌனம் மறுக்கப்பட்ட புதிய
சூழலில் பதிலறியாத அவன்
ஒரு பாறையின் மீது அமர்திருக்கிறான்
மக்களிடம் கூவுகிறான் அவ்விளைஞன்
அவனை கண்டுபிடித்து விட்டதாக.
கூடிய மனிதர்கள் ஆராவாரத்துடன்
அழைத்துச் சென்றார்கள் பாறையை

பிருஷ்டம் கிழிய நின்றிருந்தவனின்
குதத்தில் கழி செருகி தொண்டை கனைத்து
தொடங்குகிறான் கனிவான முகம் கொண்ட
அதி ஆண் காரணம் வேண்டிய
முதல் கேள்வியை.

அவன்
பிறகு
எல்லாவற்றையும்
ஒப்புக்கொண்டு
மற்றவர்களைப் போலவே
அவனுக்காக
எதயாவது
செய்ய தொடங்கினான்
ஆசீர்வதிக்கும் கடவுலொன்றின்
நாமத்தை ஜெபித்தவாறு.

எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருந்த நான்
நீங்களான வினோதம்
என்பது
புதிர்

எல்லாம் அந்த கேடுகெட்ட.


No comments: