14 October, 2011

sad jobs

இறந்த மனிதனை பற்றி அவதூறு பேசுவது தவறு - மனித அறங்களில் ஒன்று. இருந்தாலும் சற்று அறத்தை மறந்து ஒரு இறந்த மனிதனை பற்றிய ஒரு பதிவினூடாக சில சந்தேகங்கள்.

இறந்தவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 எழுபத்து நாலிலிருந்து இந்த ஆண்டு வரை களத்தில் இயங்கி உடல் புற்றின் காரணமாக காலமாகிய அவருக்காக கார்பொரேட் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் முக்குக்கு முப்பது பேர் நிமிசத்துக்கு செத்துக்கொண்டிருந்தாலும் இவர் செத்தது சற்று வருத்தம்தான். அதற்கான இரண்டு வலுவான காரணங்கள் இரண்டு எனக்குண்டு. ஒன்று அவர் புத்தனை தழுவியவர். இரண்டாவது அவரது போதைக்கான பரிசோதனை. இதற்காக அவர் இந்தியாவைத் தேர்தெடுத்தார். அவரது தந்தை ஒரு முசல்மான். அவரை தத்தெடுத்தவர் கிருத்துவர். வீணாய்ப்போன பால்யமாய் இருக்கலாம்.. ஆனால் நிர்வாகத்திறனும் சிக்கலானவற்றை எளிமைப்படுத்தும் கற்பனைத்திறனும் அவரை கார்பொரேட் அரசர்களில் ஒருவராக்கியது.

அவரது மரணம் துக்ககரமானது.

சரி சந்தேகம் ? அவரை பற்றி அல்ல. மூன்று சமீபத்திய செய்திகளை பற்றியது.

1 . சவரக்கடையில் நுழைந்து சிரைத்துக்கொண்டிருந்த எட்டுபேரை ஒருவன் சுட்டு கொன்றுவிட்டான். செத்த எட்டுபேர் எதற்காக செத்தார்கள்.. (அமெரிக்கா).

2 . நாங்கள் வாழ்க்கையை போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம் என்கிற 
குறிப்புக்கடிதத்தொடு 39 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கம்ப்யூடர் வேலை செய்யும் தம்பதியினரின் அழுகிய உடலை அவர்களது பெற்றோர்கள் வாங்க மறுத்த காரணம் என்ன.. அப்படி அவர்கள் என்னதான் அனுபவித்தார்கள்.. (இந்தியா).

3 . சில கிலோகிராம்கள் எடை கொண்ட வெடிகுண்டை காரில் கண்டெடுத்து சில நூறு உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள் ..அப்படி காப்பாற்றப்பட்ட அந்த சில நூறு மனிதர்கள் எப்படி/என்னவாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மேலும்..

4 . ஸ்டீவ் ஜாப் - ன் iPad தொழிற்சாலையில் (சீனாவில் இருக்கிறது !) மூன்று மாதத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டார்களே அவர்கள் யார்.. எதற்காக ஒரு புத்தம்  தழுவிய மனிதன் நிர்வகிக்கும்  நிறுவனத்தில் வேலை செய்யும் போது தம்மை மாய்த்துக்கொண்டார்கள் ...


திஸ் இஸ் நாட் iSad ,    பட் இட் இஸ் my Sad  !      

No comments: